நாமக்கல்லில் 72 டன் குப்பைகள் அகற்றம்

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. 1,40,000 மக்கள் தொகை உள்ளன. ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று 72 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.கொசவம்பட்டி குப்பை கிடங்கு 2 உள்ளிட்ட 6 நுண்ணுரம் செயலாக்கம் மையத்தில் கொண்டு செல்லப்பட்டன.
சாலையோரம் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி பணியாளர்கள்.
சாலையோரம் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி பணியாளர்கள்.
Published on

நாமக்கல்:

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. 1,40,000 மக்கள் தொகை உள்ளன. ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று 72 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட குப்பைகள் தினசிரி மார்க்கெட், தினசரி சந்தை, சேந்தமங்கலம் சாலை, முதலைப்பட்டி, கொசவம்பட்டி ரோஜாநகர் , கொசவம்பட்டி குப்பை கிடங்கு 2 உள்ளிட்ட 6 நுண்ணுரம் செயலாக்கம் மையத்தில் கொண்டு செல்லப்பட்டன. அகற்றப்பட்ட குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யப்பட்டு கடைகளுக்கு வழங்கப்பட்டுவருகின்றன. மக்காத குப்பைகளை இது குறித்து சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகன்றன.

நகராட்சி கமிஷனர் சென்னகேசவன் கூறியதாவது:-

ஆயுத பூஜையை முன்னிட்டு நகராட்சி பகுதியில் 72 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. சாலை களில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலையில் குப்பைகளை போடுவதை தவிர்க்க வேண்டும் என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com