என் மலர்
மதுரை
- பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனை ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று இரவு அனுமதித்து உள்ளனர்.
- அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 25). கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது இரண்டு பூனைகள் சண்டையிட்டு கொண்டிருந்ததை கண்டு அதை விரட்டியுள்ளார். அப்போது ஒரு பூனை பாலமுருகனை கடித்துள்ளது.
இதற்கு சிகிச்சை பெறாமல் பாலமுருகன் அலட்சியமாக விட்டுவிட்ட நிலையில், புண் பெரிதானது. பின்னர் இதற்காக அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் அங்கிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
பின்னர் பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனை ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று இரவு அனுமதித்து உள்ளனர். அங்கு இருக்க பிடிக்காமல் திடீரென்று தப்பி ஓட முயன்றவரை, மருத்துவமனை ஊழியர்கள் மீண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து சிகிச்சைக்காக ரேபிஸ் சிகிச்சை பிரிவில் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடுமையான வலி மற்றும் மன உளைச்சல் காரணமாக பாலமுருகன், அதிகாலை அவருக்கு வழங்கப்பட்டிருந்த போர்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூனைக்கடித்து அலட்சியமாக விட்டதால் மூன்று மாதத்திற்கு பிறகு மிகப்பெரிய உடல் நலக்குறைவு ஏற்பட்டு இளைஞர் தனியாக சிகிச்சைக்காக அடைக்கப்பட்ட நிலையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வலதுசாரி அரசியலை நான் என்றைக்கும் எதிர்ப்பேன் என்று சொல்லியிருந்தேன்.
- வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் ம.தி.மு.க. தொடர்ந்து போராடும்.
மதுரை:
மதுரையில் மத்திய அரசை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு துரை வைகோ பேசியதாவது:-
ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் விவகாரத்தில் எந்த ஒரு மதமும் இதுபோன்ற இழிச்செயல்களை ஆதரிப்பதில்லை. சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வரும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த தாக்குதலை மதவாத சக்திகள் வேறு விதமாக கொண்டு சென்று அரசியல் செய்ய பார்க்கிறார்கள்.
வலதுசாரி அரசியலை நான் என்றைக்கும் எதிர்ப்பேன் என்று சொல்லியிருந்தேன். வலது அரசியல் நம் நாட்டை விட்டு போக வேண்டும். ஒரு மனிதன் நல்லவரா? கெட்டவரா? என்ற அடிப்படையில் தலைவர்களை தேர்ந்தெடுங்கள். சாதி, மதத்தின் அடிப்படையில் ஒரு போதும் தலைவர்களை தேர்ந்தெடுக்காதீர்கள். நாட்டில் நடக்கும் அனைத்து தாக்குதலுக்கு காரணம் வலது சாரி அரசியல் தான்.
வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் ம.தி.மு.க. தொடர்ந்து போராடும். மதவாத அரசியல் ஒழிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ரெயில் நிலையங்களை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
- ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த இரண்டு ரெயில் நிலையங்களையும் பயன்படுத்தி வந்தனர்.
மதுரை:
தென் மாவட்ட ரெயில்வே திட்டங்களின் சேவை மற்றும் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை விரகனூரில் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கூட்டம் நடைபெற்ற நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இன்று நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை தாங்கினார்.
இதில் எம்.பி.க்கள் வைகோ, துரை. வைகோ (திருச்சி), சு.வெங்கடேசன் (மதுரை), தங்கதமிழ்செல்வன் (தேனி), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), முகமது அப்துல்லா, ராணிஸ்ரீ குமார் (தென்காசி), ராபர்ட் புரூஸ், சச்சிதானந்தம் (திண்டுக்கல்), தர்மர் உள்ளிட்ட 11 பேர் கலந்துகொண்டு தங்கள் பகுதிக்கான ரெயில்வே திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்து பேசினர்.
கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அளித்த கோரிக்கை மனுவில், விருதுநகர் மற்றும் செங்கோட்டை இடையே அகல ரெயில் பாதை மாற்றத்தின் போது கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த ரெயில் நிலையங்களை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த இரண்டு ரெயில் நிலையங்களையும் பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த பகுதியைச் சேர்ந்த அதிகமானோர் ராணுவத்தில் பணிபுரிகின்றனர். கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இந்த சிரமத்தை தவிர்க்க கரிவலம் வந்தநல்லூர் நிலையத்தை உடனடியாக ஹால்ட் ஸ்டேஷனாக மீண்டும் திறந்து, பின்னர் பிளாக் ஸ்டேஷனாக மாற்றவேண்டும்.
மதுரை கோட்ட காலியிடங்களை மீண்டும் சென்னை கோட்ட ரெயில்வே வாரியத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும், திருநெல்வேலி-சென்னை எழும்பூர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. கோவில்பட்டி-திண்டுக்கல் இடையே நான்கு ஜோடி மெமு ரெயில் சேவைகளை இயக்க வேண்டும். இது சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான் மற்றும் கொடைரோடு ஆகிய முக்கிய வர்த்தக நகரங்களை இணைக்கிறது. இதனால் பயணிக்கும் பொது மக்களும், வியாபாரிகளும் பயனடைவார்கள்.
சுதந்திரத்திற்கு பிறகு ரெயில்வேயால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்களில் கொங்கன் ரெயில் பாதையும் ஒன்றாகும். கொங்கன் ரெயில்வே 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் தமிழக மக்கள் கொங்கன் ரெயில் வேயின் பயன்பாட்டை பெறவில்லை. தற்போது திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண் : 22629/22630) அதிக ஆதரவுடன் கொங்கன் ரெயில்வே வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட வேண்டும்.
மதுரை-கோவை இடையே 5 ரெயில்கள் இயப்பட்டது. எனவே ராமேசுவரம் மற்றும் செங்கோட்டையில் இருந்து கோவைக்கு கூடுதல் ரெயில்களை அறிமுகப்படுத்த வேண்டும். செங்கோட்டையிலிருந்து பெங்களூருக்கு ஒரு புதிய தினசரி ரெயிலை அறிமுகப்படுத்த வேண்டும்.
மதுரை-கோவை (வண்டி எண்: 16721/16722) எக்ஸ்பிரஸ் ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இந்த இரயில் மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு கோவையை அடைகிறது. திரும்பும் திசையில் இந்த ரெயில் கோவையில் இருந்து மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 7.35 மணிக்கு மதுரையை அடைகிறது. இந்த ரெயில் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும். இதனால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள்.
சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய இடங்களுக்கு இணைப்பு வசதிகளை வழங்குவதற்காக மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும், திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் இடையே ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்த வேண்டும், திருமங்கலம் ரெயில் நிலையத்தின் வடக்கு முனையில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
- மதுரை சித்திரை திருவிழாவில் அடுத்த மாதம் 12-ந்தேதி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.
- மே 12-ந்தேதி மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலம் மற்றும் வங்கிகள் மற்றும் அவசர அலுவல்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டும்.
மதுரை:
மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் அடுத்த மாதம் 12-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அன்றைய தினம் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூன் மாதம் 14-ந்தேதி (சனிக்கிழமை) விடுமுறை தினத்தை வேலை தினமாக ஈடுசெய்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
எனவே மே மாதம் 12-ந்தேதி அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலம் மற்றும் வங்கிகள் மற்றும் அவசர அலுவல்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜம்மு காஷ்மீருக்கு கடந்த சனிக்கிழமை 5 நாட்கள் சுற்றுலா பயணமாக சென்றிருந்தனர்.
- பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு மோட்டார் வாகன உதிரிபாக வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து 25 பெண்கள் உட்பட 68 பேர் மதுரையில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு கடந்த சனிக்கிழமை 5 நாட்கள் சுற்றுலா பயணமாக சென்றிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி பத்திரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மதுரை திரும்ப உள்ளனர்.
இதுகுறித்து மதுரையில் உள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன உதிரிபாக வியாபாரிகள் சங்க துணைதலைவர் சித்தார்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையை சேர்ந்த 30 பேர் சென்றுள்ள நிலையில் 68 பேரும் பாதுகாப்புடன் உள்ளதாகவும் இன்றைய தினம் ஏற்கனவே திட்ட மிட்டபடி அவர்கள் சுற்றுலா தளத்தில் இருப்பதாகவும் வீடியோ கால் மூலமாக தகவல் அளித்துள்ளனர்.
அந்த 68 பேரும் பெஹல்காமில் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே மற்றொரு இடத்தில் இருந்ததாக தெரிவித்தனர்.
மேலும், அந்த 68 பேரில் ஒருவருக்கு இருதய நோய் ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தாக்குதல் நடந்தது குறித்து சுற்றுலா சென்ற அவர்களுக்கு எதுவும் தெரியாத நிலையில் நாங்கள் தான் இங்கிருந்து அவர்களுக்கு தகவல் அளித்தோம்.
68 பேரும் இன்று இரவு மற்றும் நாளை காலை விமானம் மூலமாக தமிழகத்திற்கு திரும்பவுள்ளனர்.
தற்போது அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். அங்கு கடையடைப்பு போராட்டம் நடந்தாலும் இயல்பான நிலை உள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் சரமாரியாக தாக்கினர்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யர்சாமி. இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த கவினாஸ்ரீ என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2 பேரும் இளங்கலை பட்டதாரிகள்.
இருவரது குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக 15 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரது அய்யர்சாமி-கவினாஸ்ரீ காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு தஞ்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த இருவீட்டாரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசினர். தொடர்ந்து காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அய்யர்சாமியுடன், கவினாஸ்ரீயை போலீசார் அனுப்பி வைத்தனர்.
காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் காரிலிருந்து இழுத்து கீழே போட்டு சரமாரியாக தாக்கினர்.
உடனே அங்கிருந்து பொது மக்கள் மற்றும் போலீசார் அவர்களிடமிருந்து காதல் ஜோடியை காப்பற்றினர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2 குடும்பத்தினரிடம் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கினர்.
- பெண்களை இழிவுபடுத்துவது என்பது தி.மு.க.விற்கு கைவந்த கலையாக உள்ளது.
- தி.மு.க.வினர் தமிழக பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள்.
மதுரை:
பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து அவதூறாக பேசியதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் மற்றும் நீதிமன்றம் அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவரது கட்சி பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில் அவரது அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரது அமைச்சர் பதவியை பறிக்க கோரியும் மதுரையில், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மகளிரணி சார்பில் மதுரை செல்லூர் 60 அடி சாலையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, பா.வளர்மதி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெண்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது அமைச்சர் பொன்முடியே தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடியை கண்டிக்கும் வகையில் மகளிரணியினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:-
பெண்களை இழிவுபடுத்துவது என்பது தி.மு.க.விற்கு கைவந்த கலையாக உள்ளது. தி.மு.க.வினர் தமிழக பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள். சட்டப்பேரவைக்கு சென்ற ஜெயலலிதாவை சேலையை பிடித்து இழுத்து திமுகவினர் அவமானப்படுத்தினர்.
அமைச்சர் பொன்முடி விஷயத்தில் மக்கள், நீதிமன்றம் கண்டித்த பின்னரும் அமைச்சர் பொன்முடி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி என்றால் மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்முடியின் பேச்சை ரசித்து ஆதரிக்கிறார் என நினைக்கிறேன். இதற்கு தமிழக மக்கள் தக்க நேரத்தில் தக்க பதிலடியை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- 2 வாரங்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
மதுரை:
மதுரையில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியது.
இதில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக நடக்கும் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அதனை தொடர்ந்து வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு என 2 வாரங்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதேபோல் அழகர் கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற மே மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி சுந்தர்ராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
10-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து மதுரைக்கு புறப்பாடாகிறார். 11-ந்தேதி மதுரை மூன்றுமா வடியில் எதிர்சேவை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந்தேதி காலை 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். முன்னதாக சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகளை நேற்று அமைச்சர்கள் ஏ.வ.வேலு, சேகர் பாபு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் இன்று மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மே 12-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
- கடனுக்கு ஈடாக தனது வீட்டு பத்திரத்தையும் அடமானமாக கொடுத்துள்ளார்.
- வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாததால் அவருக்கு சொந்தமான இரண்டு கடைகளையும் எழுதிக் கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை:
மதுரையை அடுத்த கருப்பாயூரணி அருகே உள்ள கண்மாய் பகுதியில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதாக கருப்பாயூரணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் மதுரை செல்லூர் அருகே உள்ள எஸ்.ஆலங்குளம் ராமலிங்க நகரை சேர்ந்த வேலு மகன் கணேசன் (வயது 46) என்பது தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும், 12-ம் வகுப்பு படிக்கும் மகளும், 11-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.
இவர் சிம்மக்கல் மற்றும் மாட்டுத்தாவணி பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார். பழக்கடையை நடத்துவதற்காக திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட் டியை சேர்ந்த ஒரு வியாபாரியிடம் சுமார் ரூ.1 கோடி வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக தினமும் சுமார் ரூ.3 லட்சத்துக்கும் மேல் வட்டியும் பல வருடங்களாக கட்டி வந்துள்ளார். தொடர்ந்து வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் வட்டி சரியாக கட்ட முடியாமல் பல நாட்களாக விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் கடனுக்கு ஈடாக தனது வீட்டு பத்திரத்தையும் அடமானமாக கொடுத்துள்ளார். பெரும்பாலான வட்டியை செலுத்திய நிலையில் கடன் கொடுத்தவர் அடமான பத்திரத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார்.
மேலும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாததால் அவருக்கு சொந்தமான இரண்டு கடைகளையும் எழுதிக் கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கணேசன், இன்று காலை வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு கருப்பாயூரணி அருகே உள்ள கண்மாய் அருகே சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாங்கிய கடனுக்காக வட்டி கட்ட முடியாமல் பழக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- சிறுமி, மாணவரின் பொறுப்பற்ற காதலை ஏற்கவில்லை.
- பெற்றோருக்கு மகனின் தற்கொலை பேரிடியாக விழுந்துள்ளது.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்த தெய்வதானம் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாண வர். இவர் சத்திரக்குடி அருகேயுள்ள வளநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவரது பெற்றோர் கூலி வேலைக்குச் சென்று வருகிறார்கள்.
தாங்கள் படிக்காவிட்டா லும், மகனை படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆசையுடன் பெற்றோர் இருந்தனர். அதிலும் குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கு மகனை நல்லமுறையில் தயார் செய்து வரும் வகையில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்திற்கு வரவேண்டும் என்று கூறி அவ்வப்போது ஊக்கப்படுத்தி வந்தனர்.
இதற்காக அந்த மாணவர் கடுமையாக படித்து வந்தார். பெற்றோர் பகலில் வேலைக்கு சென்றாலும் மாலையில் வீடு திரும்பியதும் மகனுக்கு தேவையானவற்றை செய்துகொடுத்தனர்.
அந்த வகையில் இன்று இறுதியாக சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. இதற்கிடையே அந்த மாணவரின் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக பெற்றோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.
அவரது நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் இருப்பதையும் பெற்றோர் உணர்ந்தனர். காரணம் கேட்டபோது, எதுவும் இல்லை என்று மாணவர் மறுத்துவந்துள்ளார்.
இருந்தபோதிலும் மகனை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது அவர் ஒரு சிறுமியுடன் பழகி வந்ததை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அக்கம்பக்கத்தினரும் இதனை ஏற்கனவே அறிந்து மாணவரின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். முதலில் அதனை நம்ப மறுத்த பெற்றோர், நேரடியாக பார்த்துவிட்டதால் மகனின் செயலை எண்ணி வருந்தினர்.
தற்போது அரசு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் கடுமையாக கண்டித்தால் மகனின் படிப்பை பாதித்துவிடும் என்று எண்ணி, பக்குவமாக அறிவுரை கூறினர். இது விளையாட்டுத்தனமாக வயது, தற்போதே காதல், திருமணம், வாழ்க்கை என்பதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
ஆனாலும் மாணவர் அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதற்கிடையே அந்த சிறுமி, இந்த மாணவரின் பொறுப்பற்ற காதலை ஏற்கவில்லை. மாறாக மாணவர் மட்டும் அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
மகனின் செயல்பாடுகள் எல்லை மீறி போனதால் நேற்று பெற்றோர் அவரை கடுமையாக கண்டித்தனர். ஒழுங்காக படித்து இன்று நடைபெறும் இறுதித் தேர்வை எழுதவேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று இரவு பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட மாணவர், இன்று நடக்கும் சமூக அறிவியல் தேர்வுக்கு படிக்க இருப்பதாக கூறி, வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.
மகன் படிக்கத்தான் செய்கிறார் என்ற எண்ணத்துடன் பெற்றோர் அயர்ந்து தூங்கிவிட்டனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் மாணவர் இருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.
நீண்ட நேரம் படித்த களைப்பில் தூங்கியிருப்பான் என்று நினைத்து, பெற்றோர் கதவை தட்டினர். பலத்த சத்தம்போட்டும் எழுப்பினர். ஆனாலும் கதவை திறக்காததால் பதட்டம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாணவர் தாயின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் தொங்கினார். மகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.
உடனடியாக அவரை மீட்டு சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறித்துடித்தனர்.
பின்னர் இதுபற்றி அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சத்திரக்குடி போலீசார் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வளர்ந்து ஆளாகி தன்னை காப்பாற்றுவார் என்ற கனவில் இருந்த பெற்றோருக்கு மகனின் தற்கொலை பேரிடியாக விழுந்துள்ளது. இறுதித் தேர்வை எழுத வேண்டியவர் இறுதி ஊர்வலமாக புறப்பட்டுள்ளார். 10-ம் வகுப்பு படிக்கும் வயதில் ஒருதலைக்காதலில் விழுந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- தமிழக மக்களுக்காக உருவாக்கி இருக்கிற இந்த வெற்றி கூட்டணி இந்த ஊழல் சாம்ராஜ்யத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து இருக்கிறது.
- தமிழகத்திலே பாலாறு, தேனாறு ஓடும் என்று சொன்ன ஸ்டாலினே உங்கள் ஆட்சியிலே இன்றைக்கு சாராய ஆறு தான் ஓடுகிறது.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் ஒரு சரித்திரம் படைத்திருக்கின்ற மாபெரும் வெற்றி கூட்டணியை எடப்பாடியார் என்கிற ஒரு சாமானியர் அமர்த்தியுள்ளார். இதைக் கண்டு நடுநடுங்கி போயிருக்கிறது ஆளும் தி.மு.க. அரசு. தங்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு எள்முனை அளவும் சேவை செய்யாத காரணத்தினாலே, தங்களுடைய அதிகார துஷ்பிரேகத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் மீண்டும் ஆட்சியை தொடரலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்த ஸ்டாலினுக்கு தற்போது தலையில் இடி விழுந்தது போல உள்ளது.
இந்த அறிவிப்பை இன்றைக்கு நாடு முழுவதும் வரவேற்றுக் கொண்டிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஸ்டாலின் கையில் இருக்கிற உளவுத்துறை கொடுத்திருக்கிற அறிக்கை இனி தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாய் இருக்கிறது என்கிற அந்த நடுக்கத்தில், அச்சத்திலே உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிற ஸ்டாலினின் அறிக்கையை யாரும் பொருட்படுத்த தயாராக இல்லை.

அ.தி.மு.க. தலைமையிலான வெற்றி கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல், எடப்பாடி யாரை குறைத்து மதிப்பிட்டவர்கள் எல்லாம் நெஞ்சடைத்து போய், வாயடைத்து போய் உள்ளனர். தமிழக மக்களுக்காக உருவாக்கி இருக்கிற இந்த வெற்றி கூட்டணி இந்த ஊழல் சாம்ராஜ்யத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து இருக்கிறது.
அ.தி.மு.க. தலைமையில் உருவாகி இருக்கிற இந்த வெற்றி கூட்டணி மூலமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் இந்திய திருநாட்டில் தலை குனிந்து நிற்பதை பட்டியிலிட்டு உள்ளார். டாஸ்மாக் ரூ.39 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடைபெற்றது என்றும் சொன்னார். தமிழகத்திலே பாலாறு, தேனாறு ஓடும் என்று சொன்ன ஸ்டாலினே உங்கள் ஆட்சியிலே இன்றைக்கு சாராய ஆறு தான் ஓடுகிறது.
பாரத பிரதமர் இங்கே பாம்பன் பாலத்தை திறக்க வருகிற போது மூன்று மடங்கு நிதி கொடுத்திருக்கிறோம் என்று சொல்லுகிறார். ஆனால் பணமே வரவில்லை என்று 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூட நிதி தராமல் நீலிக் கண்ணீர் வடித்து வருகிறார் ஸ்டாலின்.

நிச்சயம் அ.தி.மு.க. சட்ட சபையில் ஆளுகிற வரிசையில் உட்கார்ந்து எடப்பாடியார் முதலமைச்சராக இருந்து இந்த நாட்டு மக்களுக்கு திட்டங்களை வழங்குகிற அந்த நாள் தொலைவில் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் மீது இடியாக இறங்கிய மின்சார கட்டண உயர்வு, தமிழ்நாட்டு மக்கள் மீது இடியாக இறங்கி இருக்கிற சட்ட ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருள் நடமாட்டம், பாலியல் வன்கொடுமைகள் என்று ஆயிரம் இடியை தமிழக மக்களுக்கு அவர் வாடிக்கையாக வைத்திருக்க ஸ்டாலினுக்கு இந்தக் கூட்டணி என்பது தலையில் இடியாய் விழுந்திருக்கிறது.
இந்த கூட்டணியை குறித்து நீங்கள் தொடர்ந்து அவதூறாக பேசுகிறீர்கள் என்று சொன்னால் எடப்பாடியார் ஆணை பெற்று தமிழகம் முழுவதும் கழக அம்மா பேரவை சார்பில் நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயங்க மாட்டோம். ஆகவே ஆரோக்கியமான விமர்சனம் மூலம் ஒரு கூட்டணி அமைகிறது என்று சொன்னால் அதை ஆரோக்கியமாக விமர்சிக்க வேண்டுமே தவிர, இது போன்ற அரசியல் நாகரிகம் இல்லாமல் வார்த்தைகளை பயன்படுத்துவது தமிழ் நாட்டு அரசியலுக்கு உகந்த தல்ல.
நீங்கள் பாஜக கட்சியில் கூட்டணி அமைத்து மத்தியிலே எத்தனை அமைச்சரவைகளை பெற்றீர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. உங்களுக்கு மறதி நோய் வந்திருந்தால் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் பொறுப்பாக முடியாது. ஆகவே ஒரு ஆரோக்கியமான கூட்டணி, தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கிற கூட்டணி, தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சி நோக்கி அழைத்துச் செல்கிற கூட்டணியை எடப்பாடியாரின் தலைமையிலே அமைந்திருக்கிறது. இனி இந்த கூட்டணி வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலே சரித்திரம் படைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலால் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
மதுரை தியாகராஜர் கல்லூரி விழாவில் மாணவர்களிடையே ஜெய்ஸ்ரீராம் என ஆளுநர். ஆர்.என்.ரவி கோஷம் எழுப்ப வைத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கல்விக் கூடங்களில் கம்பர் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
அப்போது, நான் சொல்கிறேன்; நீங்களும் திரும்ப செல்லுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டார்.
மதச்சார்பற்ற கல்வி நிறுவனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களையும் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போட வைத்ததால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஆளுநருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.






