search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் பூக்கள் விலை விழ்ச்சி
    X

    கரூரில் பூக்கள் விலை விழ்ச்சி

    • கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.850-க்கும், சம்பங்கி கிலோ ரூ.120- க்கும், அரளி கிலோ ரூ.130-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும் விற்பனையானது
    • தற்போது நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லி கிலோ ரூ350-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.80-க்கும், ரோஜா கிலோ ரூ.150- விற்பனையானது.

    கரூர்:

    கரூர் நொய்யல், மரவாபாளையம், குளத்துபாளையம், ஓலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டுவரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.850-க்கும், சம்பங்கி கிலோ ரூ.120- க்கும், அரளி கிலோ ரூ.130-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.650-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும் விற்பனையானது.

    தற்போது நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லி கிலோ ரூ350-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.80-க்கும், ரோஜா கிலோ ரூ.150- முல்லைப் பூ கிலோ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும் விற்பனையானது.

    கோவில் கும்பாபிஷேகம், திருமண நிகழ்வுகள் இல்லாததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×