search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு
    X

    மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு

    • மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறித்தார்
    • இது குறித்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூரை அடுத்த மண்மங்கலம் அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர், சந்திரா (வயது 63). இவர், தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சந்திராவிடம், கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த, 8 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். கொள்ளையர் களுடன் போராடியதில், சந்திராவுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×