search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே ஆசிரியரை தாக்கி கொலை மிரட்டல்
    X

    புதுக்கடை அருகே ஆசிரியரை தாக்கி கொலை மிரட்டல்

    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு
    • தலைமறைவான ரகுபதி ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே பொற்றவிளை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 55). இவர் முஞ்சிறை அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.

    சம்பவத்தன்று மாலை காரில் ஐரேனிபுரம் - புதுக்கடை சாலையில் சென்றார். மேலங்கலம் தொடக்க பள்ளி அருகில் ஜார்ஜ் சென்ற போது நெல்லிக்காவிளை பகுதி களத்து விளையை சேர்ந்த ரகுபதி ராஜா மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் காரை உரசிய வாறு வந்து தடுத்து நிறுத்தியுள்ளார். தொடர்ந்து ஆபாச வார்த்தைகள் பேசி ஆசிரியரை தாக்கி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதில் படுகாயமடைந்த ஜார்ஜ் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் ஆசிரியரை தாக்கியவர் லாரி டிரைவர் என தெரிய வந்துள்ளது. தலைமறைவான ரகுபதி ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×