search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே கடற்கரை பகுதியில் பதுக்கிய 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    புதுக்கடை அருகே கடற்கரை பகுதியில் பதுக்கிய 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    • புதுக்கடை அருகேயுள்ள கடற்கரை பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல்
    • புதுக்கடை அருகேயுள்ள காப்புகாடு அரிசி குடோனில் பறிமுதல் செய்யப்பட அரிசி ஒப்படைப்பு.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகேயுள்ள கடற்கரை பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக புதுக்கடை தனிப்பிரிவு ஏட்டு சுனில் ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்பெக்டர் செல்லதுரை, ஏட்டு ரமேஷ் ஆகியோர் இனயம் புத்தன்துறை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதி 6-ம் அன்பியத்தை சேர்ந்த சேவியர் (வயது 49), 2-ம் அன்பியத்தை சேர்ந்த ஜெரால்டு மனைவி ஜெயந்தி (50) ஆகியோர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1.5 டன் ரேசன் அரிசியை கைப்பற்றி போலீஸ் நிலையம் அனுப்பி வைத்தனர்.

    மேலும் ராமன்துறை பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டில் 2 டன் அரிசி பதுக்கி வைத்தி ருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டது. விசார ணையில் அரிசியை பதுக்கியது அதே பகுதி 2-ம் அன்பியத்தை சேர்ந்த ஜெரோண் மனைவி ஸ்டான்லி (57) என்பவர் எனவும் தெரிய வந்தது. இரண்டு இடங்களில் இருந்து பறிமுதல் செய்த இந்த அரிசிகள் கேரளாவுக்கு கடத்த பதுக்கி யது தெரிய வந்தது. போலீ சார் மொத்தம் 3½ டன் அரிசியையும் மாவட்ட கடத்தல் தடுப்பு பிரிவு போலீீசாரிடம் ஒப்ப டைத்த னர். அவர்கள் புதுக்கடை அருகேயுள்ள காப்புகாடு அரிசி குடோ னில் ஒப்ப டைத்தனர்.

    Next Story
    ×