search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டார் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது
    X

    கோட்டார் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது

    • கோட்டார் சாலையில் போக்குவரத்து மாற்றம்
    • ரெயில்வே சாலை முதல் ஈத்தாமொழி விலக்கு வரை சாலை சீரமைக்கும் பணி முதல்கட்டமாக நடக்கிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயம் முதல் ஈத்தாமொழி விலக்கு வரையிலான சாலையில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள் பதிப்பு போன்ற வற்றுக்காக குழிகள் தோண்டப்பட்டன.

    ஆனால் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் அப்படியே விடப்பட்ட காரணத்தால் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியே வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

    சாலையை சீரமைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சமீபத்தில் மழை பெய்தது. இதனால் சாலை மேலும் மோசமடைந்தது. பல்லாங்குழிகளாக காணப்பட்ட சாலையால் விபத்துக்களும் நடந்து வந்தன.

    இந்த நிலையில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக அந்த பகுதியில் உள்ள வடிகால் ஓடைகள் கட்டும் பணி நடை பெற்றது.நேற்று இரவு முதல் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கின.

    இதற்காக அந்த சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி மற்றும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள், ரெயில் நிலைய சாலை வழியாக திருப்பி விடப்ப ட்டன. நேற்று இரவு முதல் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலையும் போக்குவரத்து இதே சாலை வழியாகத் தான் இயக்கப்பட்டது.

    ரெயில்வே சாலை முதல் ஈத்தாமொழி விலக்கு வரை சாலை சீரமைக்கும் பணி முதல்கட்டமாக நடக்கிறது.

    Next Story
    ×