search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே காரில் கடத்திய 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    புதுக்கடை அருகே காரில் கடத்திய 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • புதுக்கடை அருகேயுள்ள வெள்ளையம்பலம் சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பிடிக்கப்பட்ட கார் மற்றும் அரிசியை புதுக்கடை போலீஸ் நிலையம் கொண்டு சென்று, மாவட்ட உணவு கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஓப்படைத்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி, மண்எண்ணை போன்றவை அதிக அளவில் கடத்தப்படுகிறது. இனயம் புத்தன்துறை கடற்கரை பகுதிகளில் இருந்து புதுக்கடை வழியாக கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று நள்ளிரவு புதுக்கடை அருகேயுள்ள வெள்ளையம்பலம் சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக சென்ற கேரளா பதிவெண் கொண்ட கார் ஒன்றை நிறுத்தினர். போலீசை கண்டதும் காரை நிறுத்திவிட்டு, அதில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இதையடுத்து போலீசார் காரை பறிமுதல் செய்து சோதனையிட்ட போது, காருக்குள் 2 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து கார் மற்றும் அரிசியை புதுக்கடை போலீஸ் நிலையம் கொண்டு சென்று, மாவட்ட உணவு கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஓப்படைத்தனர்.

    Next Story
    ×