search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை
    X

    புதுக்கடை அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை

    • இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை
    • 3 ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்

    கன்னியாகுமரி :


    புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி உசரத்துவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் மரிய செல்வம். இவரது மகன் ஜாண் றோஸ் (வயது 38) கட்டிட தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வேங்கோடு பகுதியில் தனியாக வசித்த ஜாண் றோஸ் கடந்த 3 ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று ஜாண் றோஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் இதைப்பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின்பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×