search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மல்லிகை கிலோ ரூ.200-க்கு விற்பனை
    X

    மல்லிகை கிலோ ரூ.200-க்கு விற்பனை

    • சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படு கின்றன.
    • மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படு கின்றன.

    ஆடி மாதம் திருவிழா மாதம் என்பதால் பூக்கள் தேவை அதிகரித்து பூக்கள் விலை உயர்ந்தது. தற்போது பண்டிகை காலம் முடிந்ததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று கிலோவுக்கு ரூ.800 வரை விலை குறைந்து ரூ.240 என விற்கப்பட்டு வருகிறது. அதே போல ரூ.600 -க்கு விற்ற முல்லை ரூ.500 வரை விலை குறைந்து இன்று ரூ.120 என விற்கப்படுகிறது. மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில்) : மல்லிகை - ரூ.240, முல்லை - ரூ.120, ஜாதி மல்லி - ரூ.250, காக்கட்டான் - ரூ.80, கலர் காக்கட்டான் - ரூ.60, சி.நந்தியா வட்டம் - ரூ. 15, சம்மங்கி - ரூ.50, சாதா சம்மங்கி - ரூ.50, அரளி - ரூ.80, வெள்ளை அரளி - ரூ.80, மஞ்சள் அரளி - ரூ.80, செவ்வரளி - ரூ.100, ஐ.செவ்வரளி - ரூ.100, நந்தியா வட்டம் - ரூ.15, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இன்று புதன்கிழமை ஆவணி மாதம் பிறந்துள்ளதால் அடுத்தடுத்து முகூர்த்த தினங்கள் வருவதால் பூக்களின் வரத்து அதிகரித்து அதன் காரணமாக விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    Next Story
    ×