search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூரில் தடகள போட்டிகள் தொடக்க விழா
    X

     அரூர் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு தீபம் ஏற்றப்பட்டது.

    அரூரில் தடகள போட்டிகள் தொடக்க விழா

    • மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
    • எம்.எல்.ஏ. சம்பத்குமார், தி.மு.க. பேரூராட்சி தலைவர் இந்திராணி ஆகியோர் விளையாட்டை தொடங்கி வைத்தனர்.

    அரூர்,

    அரூர் விளையாட்டு மைதானத்தில் இருநாட்கள் பள்ளி கல்வி துறையின் சார்பில் குறுவட்ட அளவிலான அரசு உயர்நிலை, மேல்நிலை தனியார் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

    எம்.எல்.ஏ. சம்பத்குமார், தி.மு.க. பேரூராட்சி தலைவர் இந்திராணி ஆகியோர் விளையாட்டை தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார், துணை தலைவர் சூர்யாதனபால், வட்டாட்சியர் கனிமொழி, பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி, காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு, உதவி காவல் ஆய்வாளர் கெய்க்வாட், தலைமை ஆசிரியர்கள் ஆறுமுகம், சேகர், ராணி, சிவராமன் சில்க்ஸ் ராமு, கவுன்சிலர் முல்லை ரவி, உடல் பயிற்சி ஆசிரியர்கள் வேடியப்பன், பழனிதுரை, சிவக்குமார், பரசுராமன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×