என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர் கவலை அடைந்தனர்.
    • பச்சிளம் குழந்தையை வாங்கிய சிந்து, அதனை விற்க முயற்சித்தார்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் 35 வயது பனியன் தொழிலாளி.

    இவருக்கு 30 வயதில் மனைவி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த பெண், 4-வதாக கர்ப்பம் ஆனார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு பிரசவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது கணவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு கடந்த 26-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.

    ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர் கவலை அடைந்தனர். இதனால் அந்த பெண் குழந்தையை தத்து கொடுக்கலாம் என அவர்கள் முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிந்து (வயது32) என்ற பெண், அந்த தம்பதிக்கு அறிமுகம் ஆனார். சிந்து, அவர்களிடம், எனக்கு தெரிந்த ஒருவர் மிகவும் வசதியானவர். திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் அவருக்கு குழந்தை இல்லை.

    எனவே அவர்களிடம் உங்கள் குழந்தையை கொடுத்தால் நன்றாக பார்த்துக் கொள்வார் என கூறியுள்ளார். அதன்படி பெற்றோர், பிறந்து 11 நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சிந்துவிடம் கொடுத்தனர். பச்சிளம் குழந்தையை வாங்கிய சிந்து, அதனை விற்க முயற்சித்தார்.

    இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த குழந்தையை மீட்டனர். மேலும் சிந்து மற்றும் குழந்தையின் பெற்றோரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது பெற்றோர், தங்களால் குழந்தையை வளர்க்க முடியாததால் வேறு ஒரு நபரிடம் கொடுத்து வளர்க்க அந்த குழந்தையை சிந்துவிடம் கொடுத்ததாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்ததால் அதிகாரிகள் சிந்துவை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் மீட்கப்பட்ட 11 நாள் பெண் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் சிந்துவை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சிந்து, இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும் தொழிலாளியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர்களை சந்தித்து, எனக்கு தெரிந்த வசதி படைத்த ஒருவருக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை.

    அவர்களுக்கு உங்களது குழந்தையை கொடுத்து விடலாம் என கூறியுள்ளார். அவர்களும் அதற்கு சம்மதித்து சிந்துவிடம் குழந்தையை கொடுத்துள்ளனர்.

    குழந்தையை வாங்கிய சிந்து, அதனை சோமனூரை சேர்ந்தவரிடம் ரூ.2 லட்சத்திற்கு விற்க பேரம் பேசியுள்ளார். அவர் பணம் தந்ததும் குழந்தையை கொடுத்துவிட தயாராக இருந்தார். ஆனால் அதற்குள் போலீசில் சிக்கி கொண்டார்.

    குழந்தையை விற்பதற்கு சிந்துவுக்கு, மற்றொரு புரோக்கரான பிரசாத் மற்றும் குழந்தையின் தந்தையும் உடந்தையாக இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சிந்து, பிரசாத், குழந்தையின் தந்தை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    பிறந்த 11 நாளே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.
    • தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை:

    கோவை பெரிய கடைவீதி காவல்நிலையத்தில் முதலாவது மாடியில் உள்ள க்ரைம் உதவி ஆய்வாளர் அறையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட நபர் நேற்று இரவு 11 மணி அளவில் காவல் நிலையத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை. மேலும் உயிரிழந்த நபர் எதற்காக காவல்நிலையத்திற்கு வந்தார் என்பது குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.

    இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை சக்கி, தலனார் எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
    • கவியருவியில் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து வனத்துறையினர் தடுப்பு வேலிகளை சீரமைத்தனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியில் கவியருவி உள்ளது.

    இந்த கவியருவிக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

    அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கவியருவியில் உற்சாக குளியல் போட்டு விட்டு, அருகே உள்ள ஆழியார் அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்த்து செல்வார்கள்.

    வார விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை மழை பெய்தது.

    குறிப்பாக கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை சக்கி, தலனார் எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக கவியருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    அருவியில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    வெள்ளப்பெருக்கை அடுத்து கவியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதித்தது.

    தற்போது மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் மழை குறைந்துள்ளது. கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான சக்தி, தலனார் எஸ்டேட் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், கவியருவிக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது.

    கவியருவியில் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து வனத்துறையினர் தடுப்பு வேலிகளை சீரமைத்தனர். நேற்று மதியம் 1 மணி முதல் கவியருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆழியார் அணை பகுதிக்கு சுற்றுலா வந்தவர்கள், அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதை அறிந்து கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். இன்றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் கவியருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவையில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் கோவை குற்றாலமும் ஒன்று. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவார்கள்.

    இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் வனத்தில் உள்ள வனவிலங்குகளை பார்ப்பதுடன், அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்து செல்கின்றனர்.

    கடந்த மே மாதம் இறுதியில் மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவிக்கு செல்ல வனத்துறை தடைவிதித்தது. மீண்டும் ஜூலை 11-ந் தேதி திறக்கப்பட்டது. ஆனால் கடந்த 23-ந் தேதி பெய்த மழை காரணமாக கோவை குற்றால அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். தற்போது அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முதல் கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இதையடுத்து கோவை குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து, அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    • சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை.
    • சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சி லிங்காபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான காந்தவயல், மொக்கை மேடு, பழைய கூத்தாமண்டி பிரிவு, திம்மராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வாழை பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது பவானி ஆறு, மாயாறு ஆறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கவே, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியிலும் நீர்மட்டமும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் உள்ள லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு, பழைய கூத்தாமண்டி பிரிவு, திம்மராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    50 ஆயிரம் வாழைகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை. சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 

    • மத்திய அரசின் மக்கள் விரோத போக்கால் தமிழக மக்கள் கடந்த 11 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.
    • வருகிற 2026 தமிழக சட்டசபை பொதுத்தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியே வெல்லும்.

    குனியமுத்தூர்:

    கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, இந்திய அரசியல் அமைப்பை காப்போம், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஆயத்தம் ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் கோவை சுண்டக்காமுத்தூரில் நடந்தது.

    மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் சுண்டக்காமுத்தூர் முருகேசன் வரவேற்றார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான அழகுஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் மக்கள் விரோத போக்கால் தமிழக மக்கள் கடந்த 11 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலுக்கு மத்திய அரசின் உளவுப்பிரிவு கவனக்குறைவு தான் முழு காரணம் ஆகும்.

    தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. நிதி ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் கோடி நிதியை தராமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. கல்வி நிதி ரூ.2,138 கோடியை தராமல் வேண்டுமென்றே இழுத்தடிக்கிறது.

    தமிழக மாணவர்களின் கல்வி உரிமையோடு மத்திய பா.ஜ.க. அரசு விளையாடுகிறது. கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் மண்ணில் தமிழனுக்கு இந்த அவலநிலை கேட்டால், இந்தி படிக்கவில்லை, அதனால் நிதி தரவில்லை என இறுமாப்புடன் பதில் அளிக்கிறார்கள். எந்தமொழி படிக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது.

    பா.ஜ.க.விடம் கூட்டணி அமைக்கவில்லை என்பதால் மத்திய அரசின் சூழ்ச்சி காரணமாக பா.ம.க. கட்சியிலும், குடும்பத்திலும் பெரும் குழப்பம் ஏற்பட்டள்ளது. அவர்களோடு ஒட்டுறவு வைத்தால் இந்தநிலை தான் பிற கட்சிகளுக்கும் ஏற்படும்.

    மத்திய பா.ஜ.க. அரசு தனது சர்வாதிகார போக்கினால் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வளைத்துவிடலாம் என பகல் கனவு காண்கிறது. எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் பா.ஜ.க.வின் சித்துவிளையாட்டு தமிழ்நாட்டில் எடுபடாது. வருகிற 2026 தமிழக சட்டசபை பொதுத்தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியே வெல்லும். மீண்டும் காங்கிரஸ் துணையுடன் தி.மு.க. ஆட்சி தான் மலரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் முறையிலான அடையாள அட்டையை மாநில தலைவர் செல்வபெருந்தகை வழங்கினார்.

    • முதற்கட்டமாக வருகிற 3-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சில தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்.
    • ஜனவரி மாதம் 9-ந்தேதி கடலூரில் மாநாடு நடைபெற உள்ளது.

    கோவை:

    கோவையில் நடந்த விழாவில் தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.

    அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தே.மு.தி.க சார்பில் ஆகஸ்டு 3-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறோம். 3-ந்தேதி கும்மிடிப்பூண்டியில் எங்களது பிரசாரம் தொடங்குகிறது. 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் இந்த பிரசார பயணத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம்.

    தமிழகம் முழுவதும் இந்த சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து பேச உள்ளார்.

    முதற்கட்டமாக வருகிற 3-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சில தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்.

    கட்சியை வலுப்படுத்துவதற்கும், மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் எங்களது சுற்றுப்பயணம் இருக்கும்.

    ஜனவரி மாதம் 9-ந்தேதி கடலூரில் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் நாங்கள் யாருடன் கூட்டணி என கூறுவோம் என ஏற்கனவே பொதுச்செயலாளர் கூறியிருக்கிறார். அன்றைய தினம் நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்க போகிறோம் என்பது தெரியும்.

    வருகிற 5 மாதங்களும் கட்சி பணிகளையும், மக்கள் பிரச்சனைகளையும், கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதும் தான் எங்களுடைய எண்ணம். அதனை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்.

    கமல்ஹாசன் எம்.பி. ஆனதை நாங்கள் வரவேற்கிறோம். நீண்ட நாட்கள் சினிமா துறையில் சாதித்து விட்டு தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு தி.மு.க. சார்பில் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சனையை கமல்ஹாசன் பாராளுமன்றத்தில் பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டு பிரதமர் மோடியை தே.மு.திக சார்பில் யாரும் சந்திக்கவில்லையே என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் நாங்கள் இருக்கிறோமா? என கேள்வி எழுப்பினார்.

    நாங்கள் கூட்டணியில் இருக்கும் பொழுது பிரதமர் எங்களை வந்து பார்க்கலாம் அல்லவா? பிரதமரை மரியாதை நிமித்தமாக தேவையான சமயங்களில் சந்திப்போம். எங்களுக்கு எப்போது தேவையோ அப்போது சந்திப்போம். பிரதமர் மோடி தற்போது பிரதமராக வந்து மக்கள் பணி செய்துள்ளார். ஜனவரி மாதம் கூட்டணி முடிவானவுடன் மற்றவற்றை கூறுவோம்.

    தே.மு.தி.க பார்வையில் தமிழக வெற்றிக்கழகம் எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு தே.மு.தி.க பார்வை மக்களை நோக்கி மட்டும் தான் உள்ளது. வேறு எதை நோக்கியும் இல்லை என்றார்.

    குடும்ப நிகழ்ச்சிக்கு செல்கிறாயோ இல்லையோ, ஆனால் கட்சிக்காரர்கள் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என எனது அப்பா எப்போதுமே சொல்லுவார். அப்பாவின் வார்த்தைப்படி நாங்கள் பயணப்பட்டு வருகிறோம். தேதி கொடுத்து விட்டால் கண்டிப்பாக வந்து விட வேண்டும் என கூறி துளசி வாசம் மாறும். ஆனால் தவசி வாக்கு மாறாது என தந்தையின் வசனத்தை மேற்கொள் காட்டினார்.

    நீங்கள் விஜயபிரபாகரன் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அப்பா நம்மை விட்டு எங்கும் செல்லவில்லை. நம்முடனே தான் இருக்கிறார். அவர் வீட்டு சென்ற வேலைகளை மகன்களாகிய நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

    தே.மு.தி.க என்பது கிளப் இல்லை. அது ஒரு கட்சி. கேப்டன் விஜயகாந்தின் கனவும், ரோட்டரி கிளப் உங்களின் கனவும் ஒன்றுதான். நீங்கள் கிளப்பாக செயல்படுகிறீர்கள். அப்பா கட்சியாக அதனை செய்தார். அப்பா விட்டு சென்ற செயல்களை நான் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அந்த தேரை இழுக்க நான் தயாராக இருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்யும் போது அவர்களது முகத்தில் இருக்கும் புன்னகை தான் எங்களது மகிழ்ச்சியே. முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது, முடியும் என்பது அறிவாளிக்கு சொந்தமானது என அப்பா கூறுவார். இங்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை அழைத்ததற்கு நன்றி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆழியாறு அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக 4,151 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
    • ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை விடாது கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் பி.ஏ.பி. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்கிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக சோலையாறு அணை முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளும் முழு கொள்ளளவை எட்டின.

    ஆழியாறு அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1,763 கன அடியாக இருந்தது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1,763 கன அடி நீர் 11 மதகுகள் வழியாக ஆழியாற்றில் திறந்து விடப்பட்டது. மதியம் 1 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,677 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து வினாடிக்கு 2,518 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஆழியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்நிலையில், ஆழியாறு அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக 4,151 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

    ஆழியாறு அணையில் இருந்து 4,151 கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அம்பராம்பாளையம், ஆனைமலை, ஆத்து பொள்ளாச்சி, காளியப்பா கவுண்டன்புதூர் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • மேய்ச்சலுக்கு சென்ற 6 மாத ஆட்டு குட்டி ஒன்றை மலைப்பாம்பு விழுங்க முயற்சித்துள்ளது.
    • மக்கள் மலைப்பாம்பிடம் இருந்து ஆட்டுக்குட்டியை லாவகமாக மீட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மூலத்துறை கிராமம் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த பகுதியில் அதிக அளவில் ஆடு, மாடுகள் வளர்க்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு மேய்ச்சலுக்கு சென்ற 6 மாத ஆட்டு குட்டி ஒன்றை மலைப்பாம்பு விழுங்க முயற்சித்துள்ளது.

    அப்போது ஆட்டின் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் ஆட்டுக்குட்டியை மலைப்பாம்பு உடலில் சூழ்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை சூழ்ந்து இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் மலைப்பாம்பிடம் இருந்து ஆட்டுக்குட்டியை லாவகமாக மீட்டனர்.

    இதையடுத்து மலைப்பாம்பு அருகில் இருந்த வனப்பகுதியில் சென்றது. இதனிடையே மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை இரைக்காக விழுங்க முயன்றதை அப்பகுதியினர் வீடியோ எடுத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை மேம்பாலம் மற்றும் சர்வீஸ் ரோடுகளில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையுடன் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    கோவை:

    தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    அதன்படி கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள சாலையின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வந்தன.

    வால்பாறை தேயிலை தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் தலையில் பிளாஸ்டிக் கவர்களை போட்டுக்கொண்டு வேலை பார்த்தனர். மேலும் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் குடைகளுடன் வீடு திரும்பியதை பார்க்க முடிந்தது.

    வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் சாலையில், ஜே.ஜே. நகர் பகுதியில் நேற்று சாலையோரம் நின்றமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் கொட்டும் மழையிலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    கிணத்துக்கடவு பகுதியிலும் நேற்று காலை முதல் மதியம் வரை அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. பின்னர் மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது.

    இதன்காரணமாக கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை மேம்பாலம் மற்றும் சர்வீஸ் ரோடுகளில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள், பள்ளி குழந்தைகள் ஆகியோர் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    மேலும் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள வடிகாலில் மழைநீர் செல்லாமல் மார்க்கெட் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் ஆறு போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே கடும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வாகனஓட்டிகள் முகப்பு விளக்கு மற்றும் திசை விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை சிரமத்துடன் இயக்கி வந்தனர்.

    நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையுடன் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    • தேயிலை தோட்ட குடியிருப்பு ஒன்றின் அருகே பலா மரத்தில் பலாப்பழம் தொங்குவதை கண்ட யானை அதன் அருகே சென்றது.
    • மரத்தின் மீது தனது முன்னங்கால்களை வைத்து துதிக்கையால் மரக்கிளையில் தொங்கிய பலாப்பழத்தை லாவகமாக பறித்தது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் 12-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன.

    வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முடீஸ், பன்னிமேடு, பெரிய கல்லார், யானைமுடி, தோணிமுடி, கஜமுடி, இஞ்சிப்பாறை, வில்லோனி, சேக்கல்முடி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளை சுற்றி அமைந்துள்ள அடர் வனப்பகுதிகளில் குட்டிகளுடன் வசிக்கும் காட்டு யானை கூட்டம் பருவமழை காலங்களின் போது வழக்கமான வலசை பாதை வழியே ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு கூட்டம், கூட்டமாக இடம் பெயர்வது வழக்கம்.

    தொடர் மழையால் வனப்பகுதிகளில் உள்ள இலை, தழை, புற்கள் அழுகி விடுவதால் அவை மாற்று உணவு தேடி இடம் பெயர தொடங்குகின்றன.

    ஒரே வகையான உணவுகளை உண்பதால் குடற்புழு உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் பொருட்டு மாற்று உணவை தேடி காடுகளை விட்டு சமவெளி பகுதியை கடந்து செல்கிறது.

    இதேபோன்று வலசை பாதைகளில் பயணிக்கும் யானைகள் தங்களுக்கு பிடித்தமான மாற்று உணவினை கண்டுவிட்டால் அவற்றை ருசி பார்க்க தவறுவதில்லை.

    நேற்றுமுன்தினம் மாலை முடீஸ் பகுதியில் குட்டியுடன் ஒரு காட்டு யானை சுற்றியது. தேயிலை தோட்ட குடியிருப்பு ஒன்றின் அருகே பலா மரத்தில் பலாப்பழம் தொங்குவதை கண்ட யானை அதன் அருகே சென்றது.

    பின்னர் மரத்தின் மீது தனது முன்னங்கால்களை வைத்து துதிக்கையால் மரக்கிளையில் தொங்கிய பலாப்பழத்தை லாவகமாக பறித்தது.

    தொடர்ந்து கால்களால் அந்த பழத்தை இரண்டாக பிளந்து அதில் இருந்த பலாச்சுளைகளை எடுத்து தனது குட்டிக்கு கொடுத்து, தானும் உண்டு மகிழ்ந்தது. இந்த காட்சியை அருகே தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. 

    • மின் வினியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும்.
    • அண்ணா நகர், ஜி.கே.எஸ். அவின்யூ, லட்சுமி நகர், சுப்ரமணியம் நகர், டான்சா நகர், பொம்மனம்பாளையம்.

    கோவை:

    அண்ணா பல்கலைக்கழக துணை மின்நிலையத்தில் நாளை (23-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதனால் அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-

    கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, ஐ.ஓ.பி. காலனி, அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை கோவில் அடிவாரம், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், சூரியா கார்டன், கோல்டன் நகர், மருதம் நகர், சின்மியா நகர், டாடா நகர், இந்திரா நகர், அண்ணா நகர், ஜி.கே.எஸ். அவின்யூ, லட்சுமி நகர், சுப்ரமணியம் நகர், டான்சா நகர், பொம்மனம்பாளையம்.

    மேற்கண்ட தகவலை சீரநாயக்கன்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்து உள்ளார்.

    • பெரியார் பெயரில் கட்டப்படும் நூலகத்தில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்,

    தந்தை பெரியார் பெயரில், தமிழ்நாடு அரசு சார்பில் கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் நுழைவு வாயிலில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

    மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் கொடுத்த பெரியார் பெயரில் கட்டப்படும் நூலகத்தில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கண் திருஷ்டி படத்தை நீக்காவிட்டால் அந்த கட்டடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்,

    இதனையடுத்து, பெரியார் நூலகம் கட்டப்படும் இடத்தில இருந்து கண் திருஷ்டி படம் அகற்றப்பட்டுள்ளது. 

    ×