என் மலர்tooltip icon

    சென்னை

    • இந்த ஆண்டு மட்டுமில்லை ஒவ்வோர் ஆண்டுமே இதுதான் நிலை என்கிறபோது வேதனையாகவும் உள்ளது.
    • வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் நீடிக்க உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தொடர் மழையால் விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளைப் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா?

    விவசாயிகள் மீது உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கும் அரசு என்றால் அது அவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து, பொருளாதார ரீதியில் அவர்கள் உயர்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாக இருக்க வேண்டும். மாறாக, ஏழை விவசாயிகள் தங்களின் கடின உழைப்பின் வாயிலாக விளைவித்தவற்றை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு வீணாக்கி, ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒரு அரசை என்னவென்று சொல்வது?

    ஏழை விவசாயிகள் தாங்கள் காலங்காலமாகச் செய்து வரும் உழவுத் தொழில் மூலமே விளைவித்த பொருட்களை விற்று அதைப் பணமாக்கித் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் பொருளாதார ரீதியில் வலுவடைய வேண்டும் என்றால் அதற்கு முழு மூலதனம் என்பது விவசாயமும் அதற்கான உழைப்பும் மட்டுமே! ஆனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்று பணத்தைக் கையில் பார்த்துவிடாமல் தடுப்பதே ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நோக்கமாக இருந்து வருகிறதா என்கிற ஐயம் ஏற்படுகிறது. இது இந்த ஆண்டு மட்டுமில்லை ஒவ்வோர் ஆண்டுமே இதுதான் நிலை என்கிறபோது வேதனையாகவும் உள்ளது.

    வெற்று விளம்பரத்திற்காக நானும் டெல்டாக்காரன்தான் எனப் பெருமைபேசிவரும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிற்கு ஏழை விவசாயிகள் சார்பாக நாம் முன் வைக்கும் ஒரு சில வினாக்கள்...

    டெல்டா விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்துக் கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் கரணம் என்ன?

    பருவமழை என்பது ஒவ்வோர் ஆண்டும் பெய்யக் கூடியது. இந்தப் பருவமழையை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அப்படியிருக்க, அந்தப் பருவமழையினால் விவசாயப் பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

    அதிக மழைப் பொழிவு இருந்தாலும் விவசாய நிலத்தில் பயிர்கள் மூழ்காதபடி போதுமான தண்ணீரைத் தவிர்த்து, அதிகப்படியான தண்ணீர் விவசாய நிலங்களில் இருந்து தானாகவே வெளியேறி, சேமித்து வைக்கப்பட வேண்டிய நீர்நிலைகளைச் சென்றடைய, போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா?

    விளைவிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து வீணாகாமல், நல்லமுறையில் பாதுகாப்பாக சேமித்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

    ஒவ்வோர் ஆண்டும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றனவே, அதைப் பார்த்தாவது, அடுத்த ஆண்டாவது நெல்மணிகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எண்ணம் வரவில்லையா? இல்லையெனில் நெல் உள்ளிட்ட தானியங்கள் வீணாகட்டும், விவசாயிகளின் வாழ்வு பாதிக்கப்படட்டும், அதனால் நமக்கென்ன? என்று தெரிந்தே ஒவ்வோர் ஆண்டும் கடந்து போகிறதா இந்த அரசு?

    கடந்த சில நாட்களாக பெய்த மழையால், நெல்மணிகள் நனைந்து வீணாகியதற்கும், அதை விளைவித்த விவசாயிகளின் வேதனைகளுக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

    விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகள் இந்த வெற்று விளம்பர திமுக அரசின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகி, மூட்டையிலேயே முளைத்துள்ளன. அதைப் போல், தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி, வெகுஜன மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி!

    வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் நீடிக்க உள்ளது. எனவே இனியேனும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி இனி வரும் மழையினால் நெல் உள்ளிட்ட பயிர்கள் வீணாகாமல் தடுக்க வேண்டும். அத்தோடு பருவமழையின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளம்பர செயல்பாடுகளாக இன்றி போர்க்கால அடிப்படையில் உண்மையாகவே மேற்கொள்ள வேண்டும்.



    • மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1490 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
    • சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர்த் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக சென்னையில் மழை பெய்து வருகிறது. சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-

    * மழையின் அளவு 17.10.2025 அன்று காலை 8.30 மணி முதல் இன்று (28.10.2025) காலை 8.30 மணி வரை சராசரியாக 267.80 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

    * 27.10.2025 நேற்று காலை 8.30 மணி முதல் இன்று (28.10.2025) காலை 8:30 மணி வரை சராசரியாக 5203 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 127.20 மிமீ மழைப்பொழிவும் (திருவொற்றியூர் மண்டலம்)

    குறைந்தபட்சமாக முகலிவாக்கம் பகுதியில் 7.80 மிமீட்டர் மழையும் (ஆலந்தூர் மண்டலம்) பெய்துள்ளது.

    * பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.

    * நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 111 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    * தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் 22.10.2025 முதல் நேற்று (27.10.2025) இரவு வரை மொத்தம் 4,12,150 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.



    * இன்று (28.10.2025) 54,500 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.

    * பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், 17.10.2025 அன்று முதல் 27.10.2025 வரை 510 நிலையான மருத்துவ முகாம்கள். 191 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 701 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 29.686 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

    * இன்று (28.10.2025) 15 மண்டலங்களிலும் 12 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைப்பெறுகிறது.

    * தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார்நிலையில் உள்ளது. 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    * தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 60 நபர்கள் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 30 நபர்கள் தயார்நிலையில் உள்ளனர்.

    * மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1490 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 150 எண்ணிக்கையில் 100Hp மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. டிராக்டர் மேல் 550 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.



    * 2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள் 3 மினி ஆம்பிபியன் 7 சூப்பர் சக்கர் வாகனங்கள். 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள் உட்பட மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

    * பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2, கையடக்க மர அறுவை அறுப்பான் 224, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன.

    * 17.10.2025 முதல் 27.10.2025 வரை மழையின் காரணமாக விழுந்த 53 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது.

    * சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர்த் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது.

    * மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், வண்டல் மண் சேகரிப்புத் தொட்டிகள் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    * 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு தெற்கு, தென்கிழக்கே 320 கிலோ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
    • மோன்தா புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மோன்தா தீவிரப்புயல் ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 160 கிலோ மீட்டரும், காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு தெற்கு, தென்கிழக்கே 320 கிலோ தொலைவில் மையம் கொண்டுள்ள புயலானது மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த மோன்தா தீவிரப்புயல் தற்போது சற்றே குறைந்து 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது.

    இதனிடையே மோன்தா புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. 

    • பேருந்துகளில் நீர் ஒழுகுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
    • சாலைகளில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கண்காணித்தப்படி கவனமாக பேருந்தை இயக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி,

    * தகுந்த வழிகாட்டுதல்களை கடைபிடித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    * பணிமனைகளில் நீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டும்.

    * பேருந்துகளில் நீர் ஒழுகுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    * சாலைகளில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கண்காணித்தப்படி கவனமாக பேருந்தை இயக்க வேண்டும்.

    * டீசல் பங்க் சேமிப்பு கிடங்கில் நீர் கலக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்பே டீசல் நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களால் நடத்தப்படும் சோதனையில் அது புரளி என்பது தெரியவருகிறது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், இன்று நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

    • பீகார் மாநிலத்தில் 60 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    • தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் வாக்குகள் அதிகமாக உள்ளது.

    கோவை:

    தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. பருவமழை பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு, அந்தந்த மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம்.

    தி.மு.க.வினருக்கு சார் என்றாலே ஒரு அலர்ஜி. தற்போது வந்துள்ள சாரால் அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வினர் நடுக்கத்தில் உள்ளனர்.

    முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் இருந்தே வாக்காளர் பட்டியலில் விடுப்பு, சேர்ப்பு, இறந்தவர்கள் பெயரை நீக்குவது நடந்து தான் வருகிறது. பீகார் மாநிலத்தில் 60 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 28 லட்சம் பேர் இறந்தவர்கள். மற்றவர்கள் குடி பெயர்ந்தவர்கள்.

    தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் வாக்குகள் அதிகமாக உள்ளது. அதிக அளவில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையெல்லாம் பார்த்து அவர்கள் பயத்தில் உள்ளனர்.

    தி.மு.க அமைச்சர்கள் தாங்கள் பொய்யாக சேர்த்த வாக்காளர்களை பட்டியலில் நீக்கி விடுவார்களோ, அதனால் தங்கள் வெற்றி வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற பயத்தில் உள்ளனர். அதனால் தான் அவர்கள் வாக்காளர் பட்டியல் குறித்து பொய்யான தகவலை கூறி வருகிறார்கள்.

    வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவது தமிழக அரசு அதிகாரிகள் தான். பிறகு ஏன் அவர்கள் பயப்பட வேண்டும்.

    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வழங்கப்பட்ட நிதியுதவி பணத்தை சிலர் திருப்பி அனுப்பி உள்ளதாக கேட்கிறீர்கள். சிலர் பணம் வாங்குவார்கள். சிலர் அதை விருப்பப்பட மாட்டார்கள். எனவே விருப்பமில்லாதவர்கள் அதை திருப்பி அனுப்பியுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ் குமார், ஏ.பி.முருகானந்தம் மற்றும் பலர் இருந்தனர்.

    • இன்று மாலை அல்லது இரவுக்குள் தீவிர புயலாக கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • ‘மோன்தா’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் வலுப்பெற்று ஆந்திரா நோக்கி நகர்கிறது. இந்த புயலானது மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை அல்லது இரவுக்குள் தீவிர புயலாக கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, 'மோன்தா' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், குமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

    • தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

    தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது. சென்னையில் கடந்த 23-ந்தேதி தங்கத்தின் விலை சவரன் ரூ.92 ஆயிரமாக குறைந்தது. தொடர்ந்து 24-ந்தேதி தங்கத்தின் விலை குறைந்து ரூ.91 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது. கடந்த 25-ந்தேதி சற்று உயர்ந்து சவரன் ரூ.92 ஆயிரமாக அதிகரித்தது. 26-ந்தேதியும் அதேவிலையில் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.91 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் தங்கம் விலை 2-வது நாளாக இன்று அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600

    26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    25-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    24-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,200

    23-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-10-2025- ஒரு கிராம் ரூ.170

    26-10-2025- ஒரு கிராம் ரூ.170

    25-10-2025- ஒரு கிராம் ரூ.170

    24-10-2025- ஒரு கிராம் ரூ.170

    23-10-2025- ஒரு கிராம் ரூ.174

    • மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 190 கி.மீ., காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
    • ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26-ந்தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, "மோன்தா" புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

    இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோன்தா புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே நிலை கொண்டுள்ள மோன்தா தீவிரப்புயல் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 190 கி.மீ., காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு தெற்கு, தென்கிழக்கே 340 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

    ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளது.

    மோன்தா புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90-110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • விழுப்புரம்-காரக்பூர், திருச்சி-ஹவுரா உள்ளிட்ட 11 ரெயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
    • பெங்களூரு – மால்டா டவுன், வாஸ்கோடகாமா – ஷாலிமர் ரெயில்கள் 12 மணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

    மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோன்தா புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 230 கி.மீ., காக்கிநாடாவில் இருந்து 310 கி.மீ. தூரத்தில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது.

    ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளது. புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும்போது மழையின் தீவிரம் அதிகம் இருக்கும். இதனால் ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதி கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரிக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மோன்தா புயல் எதிரொலியாக ஆந்திராவில் இன்றும் நாளையும் 67 ரெயில்களின் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    * சென்ட்ரல் - ஹவுரா, சென்ட்ரல்-விசாகப்பட்டினம், விழுப்புரம்-காரக்பூர், திருச்சி-ஹவுரா உள்ளிட்ட 11 ரெயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    * ஆந்திராவின் காக்கி நாடா அருகே மோன்தா புயல் கரையை கடக்க உள்ள நிலையில் 2 நாட்களுக்கு 67 ரெயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    * மழை காரணமாக சென்னை சென்ட்ரல் - விசாகப்பட்டினம் சூப்பர் பாஸ்ட் ரெயில், புவனேஸ்வர் – புதுச்சேரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி – புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    * பெங்களூரு – நியூ தின்சுகியா ஜங்ஷன், பெங்களூரு – ஹாதியா, பெங்களூரு – அகர்தலா, பெங்களூரு - ஹவுரா ஜங்ஷன், பெங்களூரு – ஹவுரா ஜங்ஷன், பெங்களூரு – மால்டா டவுன், வாஸ்கோடகாமா – ஷாலிமர் ரெயில்கள் 12 மணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

    * பெங்களூரு – ஹாடியா எக்ஸ்பிரஸ் ரெயில் விஜயவாடா, வாராங்கல், சந்த் போர்ட், பிலாச்பூர், ஜர்சுகுடா ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

    • வடசென்னையில் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    • கத்திவாக்கத்தில் 9.5 செ.மீ. மழைப்பொழிவு பதிவு.

    சென்னை:

    வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'மோன்தா புயல்', இன்று மாலை அல்லது இரவில் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் நிலையில், காக்கிநாடா துறைமுகத்தில் பெரிய அபாயத்தைக் குறிக்கும் 8ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் அபாயத்தைக் குறிக்கும் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

    'மோன்தா' புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், 'மோன்தா' புயல் காரணமாக வடசென்னையில் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    நேற்று காலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூல் 12 சென்டி மீட்டரும், கத்திவாக்கத்தில் 9.5 செ.மீ., விம்கோ நகரில் 8 செ.மீ., மணலி மாதவரம், பெரம்பூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
    • ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதி கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன.

    மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோன்தா புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றது. மோன்தா புயல் மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து தமிழகத்தைவிட்டு சற்றே விலகி சென்றது.

    ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 230 கி.மீ., காக்கிநாடாவில் இருந்து 310 கி.மீ. தூரத்தில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. புயல் காரணமாக காலை 5.30 மணி வரை 8 இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பதிவாகி உள்ளது.

    ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளது.

    மோன்தா புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

    புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும்போது மழையின் தீவிரம் அதிகம் இருக்கும். இதனால் ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதி கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன.

    இந்நிலையில் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரா உள்ளிட்ட 12 இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ×