என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹார்டுவேர்"

    • வன்பொருள் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்டுள்ளது.
    • கணினி மென்பொறியாளர்கள் சரி செய்து விட கடந்த இரு தினங்களாக முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பத்திரப்பதிவுத்துறை தகவல்களை சேகரித்து வைக்கப்படும் வன்பொருள் ஒன்றில் (ஹார்டுவேர்) தொழில்நுட்ப கோளாறு கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்டுள்ளது.

    இதனை கணினி மென்பொறியாளர்கள் சரி செய்து விட கடந்த இரு தினங்களாக முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். இந்த வன்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு துறையின் மென்பொருள் முறையாக இயங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு பத்திரப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளை எடுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • கட்டிட கட்டுமான பொருட்கள் மொத்தவிலைக்கு விற்பனை செய்யும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் ஜாகீர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது35). இவர் அதேபகுதியில் கட்டிட கட்டுமான பொருட்கள் மொத்தவிலைக்கு விற்பனை செய்யும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று ஆன்லைன் மூலம் கட்டுமான பொருட்களை குறைந்த விலைக்கு வாங்குவதற்காக இணையதளம் மூலம் தேடிபார்த்தார். அப்போது இந்தியா மார்ட் என்ற நிறுவனத்தின் இணையதள முகவரியில் குறைந்த விலைக்கு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே அந்த இணையதளத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தனக்கு குறைந்த விலைக்கு கட்டுமான பொருட்கள் வேண்டும் என்று கூறியுள்ளார்.

    உடனே அதற்காக ரூ.5 லட்சத்து 66 ஆயிரத்தை வங்கியில் செலுத்தினால், உடடினயாக பொருட்களை அனுப்பிவைத்ததாக செல்போனில் பேசிய மர்ம நபர் கூறினார். அதனை நம்பிய குமரேசன் ரூ.5.66 லட்சத்தை மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதன்பிறகு அந்த நபரின் செல்போனை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச்ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குமரேசன் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×