search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஹார்டுவேர் உரிமையாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.5.65 லட்சம் பணம் மோசடி
    X

    ஹார்டுவேர் உரிமையாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.5.65 லட்சம் பணம் மோசடி

    • கட்டிட கட்டுமான பொருட்கள் மொத்தவிலைக்கு விற்பனை செய்யும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் ஜாகீர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது35). இவர் அதேபகுதியில் கட்டிட கட்டுமான பொருட்கள் மொத்தவிலைக்கு விற்பனை செய்யும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று ஆன்லைன் மூலம் கட்டுமான பொருட்களை குறைந்த விலைக்கு வாங்குவதற்காக இணையதளம் மூலம் தேடிபார்த்தார். அப்போது இந்தியா மார்ட் என்ற நிறுவனத்தின் இணையதள முகவரியில் குறைந்த விலைக்கு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே அந்த இணையதளத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தனக்கு குறைந்த விலைக்கு கட்டுமான பொருட்கள் வேண்டும் என்று கூறியுள்ளார்.

    உடனே அதற்காக ரூ.5 லட்சத்து 66 ஆயிரத்தை வங்கியில் செலுத்தினால், உடடினயாக பொருட்களை அனுப்பிவைத்ததாக செல்போனில் பேசிய மர்ம நபர் கூறினார். அதனை நம்பிய குமரேசன் ரூ.5.66 லட்சத்தை மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதன்பிறகு அந்த நபரின் செல்போனை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச்ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குமரேசன் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×