என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பத்திர பதிவுத்துறை வன்பொருளில் தொழில்நுட்ப கோளாறு - சீரமைக்கும் பணி தீவிரம்
- வன்பொருள் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்டுள்ளது.
- கணினி மென்பொறியாளர்கள் சரி செய்து விட கடந்த இரு தினங்களாக முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.
சென்னை:
தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பத்திரப்பதிவுத்துறை தகவல்களை சேகரித்து வைக்கப்படும் வன்பொருள் ஒன்றில் (ஹார்டுவேர்) தொழில்நுட்ப கோளாறு கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்டுள்ளது.
இதனை கணினி மென்பொறியாளர்கள் சரி செய்து விட கடந்த இரு தினங்களாக முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். இந்த வன்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு துறையின் மென்பொருள் முறையாக இயங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு பத்திரப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளை எடுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story






