என் மலர்
நீங்கள் தேடியது "பத்திரப்பதிவுத்துறை"
- சொத்து வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
- 8,305 ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் சொத்து வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மதிப்பீட்டில் 8,305 ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டு நிலவழிகாட்டி மதிப்புகள் ஒட்டுமொத்தமாக சீரமைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு 2021-ல் 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டன.
இந்த நிலையில் 2012-ல் அறிவிக்கப்பட்ட மதிப்புகளை மீண்டும் கடைபிடிப்பதாக, பதிவுத்துறை 2023-ல் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து விடுபட்ட தெருக்களுக்கு மதிப்பு நிர்ணயிப்பதாக கூறி, அனைத்து பகுதிகளுக்குமான நில வழிகாட்டி மதிப்புகளை 70 சதவீதம் வரை உயர்த்தும் பணிகள் துவங்கியது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த நடவடிக்கைகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட சர்வே எண்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள மதிப்பை 10 சதவீதம் வரை அரசு உயர்த்தி உள்ளது.
வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக புகார்கள் வந்ததின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து அதனை தற்போது சீரமைத்துள்ளது.
இதன்படி ஆலந்தூர் சாலையில் ஒரு சதுர அடி வழிகாட்டி மதிப்பு கடந்த ஜூன் மாதம் வரை ரூ.5,500 ஆக இருந்தது. நேற்று முதல் ரூ.6,100-ஆக உயர்ந்துள்ளது.
ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ஒரு சதுர அடி ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.6,600-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அபிராமபுரம் 3-வது தெருவில் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.17, 600-ஆக அதிகரித்து உள்ளது. கிட்டத்தட்ட 2.19 லட்சம் தெருக்களில் உள்ள 4.46 கோடி சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவுகளுக்கு வழிகாட்டி மதிப்பு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், வேலூர் போன்ற நகரங்களில் வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ளது. மற்ற ஊர்களில் அந்தளவுக்கு உயர்வு இல்லை.
புதிய வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், 8,305 ஆவணங்கள் புதிய மதிப்பீட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பத்திர ஆவணங்கள் பதிவு மூலம் அதிக வருமானம் வருகிறது.
- கடந்த 12-ந்தேதியன்று ஆனி மாதம் கடைசி முகூர்த்த நாள் மற்றும் ஆடி மாதம் பிறக்க இருக்கிறது.
சென்னை:
தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் பத்திரப்பதிவுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. பத்திர ஆவணங்கள் பதிவு மூலம் அதிக வருமானம் வருகிறது. ஒரு சொத்தினை பத்திரப்பதிவு செய்வதற்கு சந்தை மதிப்பு மற்றும் பதிவு கட்டணம் என மொத்தம் 9 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. அதில் 2 சதவீதம் உள்ளாட்சிகளுக்கு போக மீதமுள்ள 7 சதவீதம் அரசு கஜானாவிற்கு வந்து விடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணங்கள் பதிவு அதிகரித்து வருவதால் அரசுக்கு வருமானமும் பெருகி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.224.26 கோடி வருவாய் ஈட்டி பத்திரப்பதிவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது. இதுதான் பத்திரப்பதிவுத்துறையின் ஒரு நாள் அதிகபட்ச வருவாய் ஆகும்.
இதுகுறித்து தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பத்திரப்பதிவு துறையில் ஆவணங்களைப் பதிவு செய்ய முன்பதிவு வில்லைகள் பதிவுத்துறை இணையதளம் மூலம் முன்பதிவு செய்யவேண்டும். முன்பதிவு செய்ய ஒரு சார்பதிவாளருக்கு தினந்தோறும் 100 முன் ஆவணப்பதிவு வில்லைகள் மட்டுமே பதிவுத்துறை இணையதளத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 12-ந்தேதியன்று ஆனி மாதம் கடைசி முகூர்த்த நாள் மற்றும் ஆடி மாதம் பிறக்க இருக்கிறது. எனவே பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் ஆவணப் பதிவை மேற்கொள்ளவும் முன்பதிவு வில்லைகள் கிடைக்கவில்லை என சிரமப்படக்கூடாது என்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஆவணப்பதிவிற்கான 100 வில்லைகள் சிறப்பு நிகழ்வாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டது.
அதன்படி பொதுமக்கள் உயர்த்தப்பட்ட முன் ஆவணப்பதிவு வில்லைகளை பயன்படுத்தி 12-ந்தேதியன்று 20 ஆயிரத்து 310 ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டு உரிய சார்பதிவாளர்களால் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் அரசுக்கு ரூ.224.26 கோடி வருவாய் ஒரே நாளில் ஈட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
- சிஐடியு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் செய்தனர்.
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, புதிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
பலதரப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சிஐடியு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் செய்தனர். சிஐடியுவின் முடிவிற்கு சாம்சங் இந்தியா வரவேற்றது.
இதற்கிடையே, சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பம் செய்தனர். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கப்படவில்லை.
இதையடுத்து, தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசும், தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவில், தங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து தொழிற்சங்கத்தை பதிவு செய்து சான்று வழங்கும்படி சிஐடியு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரும் மனு மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.
- விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை கட்டணம்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் பஸ் மற்றும் ரெயில்களிலும் வந்து குவிந்து வருவதால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.
இந்நிலையில், தைப்பூசத்தையொட்டி நாளை பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்றும், நாளை காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
பொது விடுமுறை நாளான தைப்பூசம் நாளில் ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதாக தமிழக அரசு அனுமதித்துள்ளது.
விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை கட்டணம் சேர்த்து வசூலிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.






