என் மலர்
சென்னை
- ரிசர்வ் வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.
தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது என்றும் அது எங்கள் கோரிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வு வங்கி விதிமுறைகளை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
இப்பிரச்சனை சம்பந்தமாக ஒன்றிய நிதியமைச்சரிடம் நேரில் சந்தித்து தந்த கடிதத்தின் பல அம்சங்கள் ஈடேறி உள்ளன என்பது மகிழ்ச்சி. ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நான் எழுதிய கடிதத்திற்கும் எனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக பதில் வந்தது. இப்பொழுது ரிசர்வ் வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எமது கோரிக்கைகள்:
1. தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும். நகைக்கான ரசீது தேவையில்லை.
2. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன்-பிணை மதிப்பு (Loan to Value) விகிதம் 85% ஆக உயர்த்தப்படும்.
3. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.
4. முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை.
இது எளிய மக்கள் நலனுக்கான குரலுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும்.
முழுமையான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்து கூடுதல் தகவல்கள் மற்றும் கோரிக்கைகளை பகிர்ந்து கொள்வேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கினார்.
- ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக மாவட்டச் செயலாளர்கள், பாராளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் 2026ம் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கினார்.
இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் - நமது #DravidianModel அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ஓரணியில் தமிழ்நாடு என திமுக-இல் இணைத்திட, சொல்லாற்றல் - செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்!
களம்2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் கழகத் தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றிபெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கட்சிக்கு இன்னும் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
- ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
சென்னை:
2026-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலில், 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
இதற்காக பல மாதங்களுக்கு முன்பே தி.மு.க. வியூகம் வகுத்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
தி.மு.க.வில் 2 கோடி கட்சி உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற பொதுக் குழுவில் தி.மு.க.வுக்கு கூடுதலாக 2 சார்பு அணிகள் தொடங்கப்படும் என்று கூறி இருந்தார். அதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இது மட்டுமின்றி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. முன்னெடுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் கூறி இருந்தார்.
இதை செயல்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுடன் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்களும் காணொலி வாயிலாக இணைந்திருந்தனர்.
கூட்டம் தொடங்கியதும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளதால் கழக ஆட்சியின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் தொடர்ந்து எடுத்து சொல்ல வேண்டும். இதில் ஒவ்வொருவரின் உழைப்பு அதிகமாக இருக்க வேண்டும். நாம் ஏற்கனவே கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்திருந்தாலும் அதுபோதாது. இன்னும் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கடந்த ஓராண்டுக்கு முன்பு தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை திறம்பட செய்து முடித்தது போல் இந்த முறையும் வீடு வீடாக சென்று கழகத்துக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அந்த பணிகளை இப்போதே தொடங்குங்கள்.
இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்டக் கழக செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
- வட இந்தியாவில் விநாயகர், ராமர் என்ற பெயரில் அரசியல் நடத்துகிறது.
- மதவாத கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்பதை 2026-ம் ஆண்டு தேர்தல் உறுதிப்படுத்தும்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா வளவன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநிலம் விட்டு மாநிலங்களில் பா.ஜ.க. மதவாத அரசியலை வடிவமைத்து மாற்றி கையில் எடுக்கிறது. வட இந்தியாவில் விநாயகர், ராமர் என்ற பெயரில் அரசியல் நடத்துகிறது. மேற்கு வங்காளத்தில் துர்கா, காளியை கையில் எடுக்கிறது. தமிழகத்தில் முருகக் கடவுளை கையில் எடுக்கிறார்கள். இது அவர்களின் அரசியல் யுத்திகளில் ஒன்று.
பிற மாநில மக்கள் மயங்குவது போல தமிழக மக்கள் ஒருபோதும் இவர்களின் மதவாத அரசியலுக்கு மயங்க மாட்டார்கள். முருகனும் மயங்க மாட்டார். தமிழ்க் கடவுள் முருகன் இவர்களை விரட்டியடிப்பார். மதவாத கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்பதை 2026-ம் ஆண்டு தேர்தல் உறுதிப்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மலைவாழ் மாணவர் பரத் பொது சட்ட நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
- தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
திருச்சி மாவட்டம் பச்சைமலை தோனூர் மலைக்கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மாணவர் பரத் பொது சட்ட நுழைவுத்தேர்வில் (CLAT) வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
பச்சைமலை பகுதியில் CLAT தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனையை பரத் படைத்துள்ளார்.
CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் பரத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
உள்ளம் உவகையில் நிறைகிறது.
தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்குத் தி.மு.க. சட்டத்துறை துணை நின்று அவரை வழிநடத்தும் என்று தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க. சொல்ல வேண்டிய பதிலை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கூறி கொண்டிருக்கிறார்.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் முன்னர் ஒரு மாதிரி பேசினார்.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
* தமிழகத்தில் சிறப்பாக நடக்கும் தி.மு.க. ஆட்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் கேவலமாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார்.
* தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை கேலிக்கூத்தானது.
* பா.ஜ.க.வின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
* பா.ஜ.க. சொல்ல வேண்டிய பதிலை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கூறி கொண்டிருக்கிறார்.
* பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் முன்னர் ஒரு மாதிரி பேசினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த பின்னர் வேறு மாதிரி பேசுகிறார் என்றார்.
இதனிடையே, அமித்ஷாவின் தமிழக வருகை குறித்த கேள்விக்கு, மோடி 8 முறை வந்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை, ஷா என்ன செய்ய முடியும்? என்று கூறினார்.
- முகுந்தன் விவகாரம் முடிந்து போன விஷயம்.
- கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் வரவில்லை.
சென்னை:
அன்புமணி உடனான பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தீர்வு என்பது ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை என ராமதாஸ் தெரிவித்தார்.
மேலும், சென்னை வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* முகுந்தன் விவகாரம் முடிந்து போன விஷயம். இனி நடக்கப்போவதை குறித்து பேசுங்கள்.
* கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் வரவில்லை.
* அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா என்பதை பின்னர் சொல்கிறேன் என்றார்.
இதனிடையே, எல்லாம் நல்லபடியே நடக்கும் என நிர்வாகிகளுக்கு கூறுவதாக ராமதாஸ் தெரிவித்தார்.
- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி, 10-ந்தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும்.
11-ந்தேதி ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
12-ந்தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
13-ந்தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும். அதே நேரம் மதிய வேளையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகக்கூடும்.
- ஆண்டுக்கு சுமார் ரூ.200 கோடி அளவுக்கு மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு வீணடிப்பது கண்டிக்கத்தக்கது.
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் 308 கிடங்குகள் மட்டுமே உள்ளன.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் கடந்த ஐந்தாண்டுகளில் சேதமடைந்திருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களில் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளைக் கூட ஏற்படுத்தாமல் ஆண்டுக்கு சுமார் ரூ.200 கோடி அளவுக்கு மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு வீணடிப்பது கண்டிக்கத்தக்கது.
தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் 2019-20ஆம் ஆண்டில் தொடங்கி 2023-24ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தலா 1.25 லட்சம் டன் வரை நெல்/அரிசி மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்திருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. ஐந்தாண்டுகளில் இவ்வாறு சேதமடைந்த நெல்/அரிசியின் மதிப்பு மட்டும் ரூ. 840 கோடி. சேதத்தின் மதிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முழுமையாக தெரிவிக்க வில்லை. முழுமையான பாதிப்பு தெரிய வந்தால் சேதத்தின் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்.
நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அடுத்த சில நாள்களுக்கு சேமித்து வைக்க இட வசதி இல்லாதது, நெல் சேமிப்புக் கிடங்குகளில் கூரைகள் ஒழுகுவது, சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருப்பது, எலித் தொல்லைகள் கட்டுப்படுத்தப்படாதது போன்றவை தான் நெல் மூட்டைகள் சேதமடைவதற்கு காரணம் என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு மட்டும் தான் இப்போது வெளியாகியுள்ளது. உண்மையில் பல பத்தாண்டுகளாக நெல் மூட்டைகள் சேதமடைவதும் , நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அரசுக்கு ஏற்படும் இழப்புகள் ஒருபுறம் இருக்க, நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாததால் உழவர்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதும் ஆண்டு தோறும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தத் தவறிய தமிழக ஆட்சியாளர்கள் தான் இந்த இழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் 308 கிடங்குகள் மட்டுமே உள்ளன. அவை போதுமானவை அல்ல என்பதாலும், கொள்முதல் செய்யப்படும் வேளாண் விளைபொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும் என்பதாலும், கிடங்குகளின் எண்ணிக்கையை 600ஆக உயர்த்த வேண்டும்; நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 1000 டன் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கும் அளவுக்கு கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இத்தகைய ஆக்கப்பூர்வமான யோசனைகளை தமிழக அரசு கண்டுகொள்வதில்லை.
தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 30 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், கிடங்குகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.200 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் வைத்துக் கொண்டால், இழப்பான தொகையைக் கொண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.66 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்க முடியும். ஆனால், உழவர்களுக்கு கூடுதல் விலை வழங்க மறுக்கும் தமிழக அரசு, அந்த தொகையை வீணடிக்கிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் கொள்முதல் நிலையங்களிலும், கிடங்குகளிலும் பாதுகாப்பாக நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கு வசதியாக கூடுதல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முகுந்தன் பொறுப்புகளை விரும்பவில்லை.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து டாக்டர் ராமதாஸ் இன்று காலையில் சென்னை புறப்பட்டு வந்தார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூரில் டிரிப்டு உட் கார்டன் பகுதியில் டாக்டர் ராம தாசின் மகள் ஸ்ரீகாந்தி வீடு உள்ளது. காலையில் மகள் வீட்டுக்கு சென்ற ராமதாஸ் அங்கேயே முகாமிட்டு உள்ளார்.
இந்த தெருவுக்கு பக்கத்திலேயே ஷியாமளா கார்டன் பகுதியில் தான் டாக்டர் அன்புமணியின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.
ஏற்கனவே தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி சந்திப்பின்போது மகள் ஸ்ரீகாந்தியும் உடன் இருந்து சமரசம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்போதும் இருவரையும் சந்திக்க வைத்து சமாதான முயற்சியில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
மேலும் சென்னையில் இருந்து தைலாபுரம் போய் வர நேரம் அதிகம் ஆகிறது. எனவே சென்னையிலேயே முக்கிய பிரமுகர்களை சந்தித்து அரசியல் நிலவரம் தொடர்பாக பேச ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அ.தி.மு.க. தரப்பில் எம்.பி. ஒருவர் டாக்டர் ராமதாசை தைலாபுரத்தில் சந்தித்து பேசி உள்ளார்.
தி.மு.க. தரப்பிலும் மூத்த எம்.பி. ஒருவர் டாக்டர் ராமதாசை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை வந்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அன்புமணியுடனான கருத்து மோதலால் பா.ம.க. விற்கு எந்த பின்னடைவும் இல்லை. முகுந்தன் பொறுப்புகளை விரும்பவில்லை. தொழில் செய்வதில் தான் ஆர்வமாக உள்ளார். சென்னையில் அன்புமணியை சந்திக்க போவதில்லை.
அமித்ஷா வருவது பற்றி எனக்கு தெரியாது. பா.ஜ.க. வுடன் கூட்டணி குறித்து நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கூட்டத்தில் தேர்தல் பணி, கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படாதது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டில் ராமனை விட முருகனே தம்மை காப்பாற்றுவார் என நம்புகிறது.
- தமிழ்நாட்டு மக்களின் எந்த உரிமைகளுக்கும் மாநாடோ பொதுக்கூட்டமோ நடத்தாத பாஜக, ஓட்டுக்காக மதவெறி அரசியலை முன்னெடுக்கிறது.
சென்னை :
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வட இந்தியாவில் ராமரை வைத்து அரசியல் செய்த பாஜக, ஒடிசாவில் ராமருக்கு பதிலாக ஜெய் ஜெகநாத் என முழங்கி பிழைப்புவாதம் செய்தது.
கேரளாவில் நாராயண குருவிடம் மண்டியிட்ட பாஜக தமிழ்நாட்டில் முருகனிடம் சரணாகதி அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ராமனை விட முருகனே தம்மை காப்பாற்றுவார் என நம்புகிறது.
அதனால் தான் முருக பக்தர்கள் மாநாட்டை பாஜக ஒருங்கிணைக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் எந்த உரிமைகளுக்கும் மாநாடோ பொதுக்கூட்டமோ நடத்தாத பாஜக, ஓட்டுக்காக மதவெறி அரசியலை முன்னெடுக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் முருகனை வணங்குவார்கள். ஆனால், பாஜகவின் மதவாதத்துக்கு தலைவணங்க மாட்டார்கள். முருகனே பாஜகவில் சேர்ந்தாலும் பாஜகவை காப்பாற்ற முடியாது.
முருகன் மீது பாஜகவுக்கு உண்மையலேயே பக்தி இருந்தால், முருகன் சாதி மறுப்பு திருமணம் செய்தது போல,
சாதி மறுப்பு திருமணங்களை ஆதரித்து தீர்மானம் இயற்ற தயாரா?
சாதி மறுப்பு திருமணங்கள் செய்வோரை ஆணவப்படுகொலை செய்யும் பயங்கரவாதத்தை கண்டிக்கத்தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.






