என் மலர்tooltip icon

    சென்னை

    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து சவரன் 72 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.9,070-க்கும், ஒரு சவரன் ரூ.72,560-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    25-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560

    24-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240

    23-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,840

    22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

    21-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    25-06-2025- ஒரு கிராம் ரூ.119

    24-06-2025- ஒரு கிராம் ரூ.120

    23-06-2025- ஒரு கிராம் ரூ.120

    22-06-2025- ஒரு கிராம் ரூ.120

    21-06-2025- ஒரு கிராம் ரூ.120

    • நடிகர் கிருஷ்ணாவிற்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
    • நடிகர் கிருஷ்ணாவிடம் 17 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணா நேற்று போலீசார் முன்னிலையில் ஆஜரானார். அவரை சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில்,

    நடிகர் ஸ்ரீகாந்தும் நானும் நல்ல நண்பர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒன்றாக கலந்து கொண்டுள்ளோம். ஆனால் என்னை பற்றி ஸ்ரீகாந்த் சொன்னது தவறான தகவல். நான் போதைப் பொருள் உட்கொள்ள முடியாது. போதைப் பொருள் கும்பலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு இரைப்பை அழற்சி நோய் இருக்கிறது. இதயத் துடிப்பு பிரச்சனையும் உள்ளது. அதனால் நான் போதைப் பொருள் எடுத்துக்கொள்ள முடியாது. என்னை பற்றி வந்த தவறான தகவல்களை மறுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

    நடிகர் கிருஷ்ணாவிடம் 17 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள அவரது வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை. நடிகர் கிருஷ்ணா வீட்டில் அவர் பயன்படுத்தும் மருந்துகளை ஆய்வுக்காக போலீசார் எடுத்து சென்றனர்.

    • ஸ்ரீகாந்த், சிறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
    • சிறையில் தன்னை யாரும் பார்க்க வராததால் ஸ்ரீகாந்த் மிகவும் வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா உலகமும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. போதைப்பொருளுக்கு அடிமையான நடிகர் - நடிகைகளை போலீசார் தற்போது கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

    நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்த், சிறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிறையில் வழங்கப்படும் உணவை மறுப்பு தெரிவிக்காமல் சாப்பிட்டு வருகிறாராம். போலீசார் நடத்திய விசாரணைக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், போதைப்பொருள் பழகத்துக்கு தான் அடிமையானது குறித்து எவ்வித ஒளிவுமறைவும் இன்றி அனைத்தையும் வெளிப்படையாக பேசினாராம். இதனால் உயர் அதிகாரிகள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். ஸ்ரீகாந்த் சொன்ன தகவல் அடிப்படையில்தான் நடிகர் கிருஷ்ணாவும் போலீஸ் வலையில் சிக்கியுள்ளார்.

    நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமின் கேட்டு இன்னும் கோர்ட்டுக்கு போகவில்லை. ஜாமின் மனு தாக்கல் செய்தால் அவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சிறையில் தன்னை யாரும் பார்க்க வராததால் ஸ்ரீகாந்த் மிகவும் வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது. ஸ்ரீகாந்தை போதைப்பொருள் பழக்கத்தில் தள்ளிய பட அதிபரும், அ.தி.மு.க. முன்னாள் பிரமுகருமான பிரசாத் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஆனால் நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை முடிந்துவிட்டது என்றும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டம் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்துவோர் பட்டியலில் பிரபல முன்னணி நடிகர், இளம் இசையமைப்பாளர் உள்ளிட்ட 10 நடிகர்-நடிகைகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர்கள் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    இதற்காக உதவி கமிஷனர் ஒருவரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    • உளுந்தம்பருப்பு விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மொத்த மார்க்கெட்டில் ரூ.125-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.115-க்கு விற்பனை ஆனது.
    • அண்டை மற்றும் வட மாநிலங்களில் பருப்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால், அதன் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    சென்னை:

    மளிகை பொருட்களில் முக்கியமான இடத்தில் பருப்பு வகைகள் இருக்கின்றன. மொத்த மார்க்கெட்டில் துவரம் பருப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.175-க்கும், கடந்த ஆண்டில் ரூ.150-க்கும் விற்பனை ஆனது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.130 என்ற நிலைக்கு வந்தது. தற்போது அதன் விலை மேலும் குறைந்து தற்போது ரூ.105 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் இதைவிட சற்று அதிகம் விற்கப்பட வாய்ப்புள்ளது.

    இதேபோல், உளுந்தம்பருப்பு விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மொத்த மார்க்கெட்டில் ரூ.125-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.115-க்கு விற்பனை ஆனது. இதுதவிர பாசிப் பருப்பை எடுத்துக் கொண்டால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.5 ஆயிரத்து 800 வரை விற்கப்பட்டது. தற்போது அதன் விலை ரூ.5,200 என்ற நிலைக்கு வந்திருக்கிறது. இப்படியாக பருப்பு வகைகளின் விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருந்த விலையைவிட கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்து இருப்பதை பார்க்க முடிகிறது.

    அண்டை மற்றும் வட மாநிலங்களில் பருப்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால், அதன் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது.
    • வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதேநேரம், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்து இருந்தது. நாளை கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார்.
    • நான் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். என்னால் அதற்கு மேல் படிப்பை தொடர முடியவில்லை.

    ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது அவர் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தால் நான் பாதிக்கப்பட்டேன் என்று நடிகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய நடிகர் விஜயகுமார், "நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் முதலமைச்சராக இருந்த ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். அதனால் நான் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். என்னால் அதற்கு மேல் படிப்பை தொடர முடியவில்லை.

    என்னால் தான் படிக்க முடியவில்லை. ஆனால் இன்று அப்படி இல்லை. மதிய உணவு திட்டம் மட்டுமில்ல., காலை உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் கல்விக்காக இரவு, பகல் பாராமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்து வருகிறார்" என்று தெரிவித்தார்.


    • கிருஷ்ணா தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
    • கிருஷ்ணாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

    போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கைதான நடிகர் ஸ்ரீகாந்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் கிருஷ்ணாவும் ஸ்ரீகாந்தும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இத்தகவலை அறிந்த கிருஷ்ணா தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, நேற்று நேரில் ஆஜரான நடிகர் கிருஷ்ணாவை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 14 மணி நேரத்திற்கும் மேலாக விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதனிடையே, நடிகர் கிருஷ்ணாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நபர்கள் உடனான இவரது தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சென்னையில் காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை.
    • மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    சென்னையில் 27.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    ஆலந்தூர்: மேட்டுப்பாளையம், சந்திரன் தெரு, வண்டிக்காரன் சாலை, கோபாலகிருஷ்ணன் தெரு, விக்னேஷ்வரா தெரு, புது தெரு, மசூதி காலனி, பிள்ளையார் கோயில் தெரு, மதுரை வீரன் கோயில் தெரு, சாத்தானிபேட்டை 1வது தெரு, செங்கேனியம்மன் கோயில் 1வது தெரு, மார்கோ தெரு, மதுரை 3வது தெரு, மார்கோ தெரு, 3வது தெரு. புதுப்பேட்டை தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, மண்டி தெரு, நிதி பள்ளி தெரு, லப்பை தெரு, வேளச்சேரி சாலை, வேதகிரி தெரு சந்தை.

    நந்தம்பாக்கம்: செயின்ட் தாமஸ் மவுண்ட் மாங்காளியம்மன் கோயில் தெரு, துளசிங்கபுரம் தெரு, கணபதி காலனி தெரு, கலைஞர் நகர் தெரு, வூட் க்ரீக் கவுண்டி தெரு, 60வது குவார்ட்டர்ஸ் தெரு, சைவம் பவன் தெரு, செயின்ட் பேட்ரிக் சர்ச்.

    கொரட்டூர்: சுந்தர் தெரு, குபேரகணபதி தெரு, விஓசி தெரு, திருவள்ளுவர் தெரு, வர்னினர் தெரு, காமராஜ் நகர் 1 முதல் 8வது தெரு, காக்கப்பள்ளம், எம்டிஎச் சாலை, ராஜா தெரு, டிஎம்பி நகர், அவ்வை தெரு, மாரியம்மன் கோயில் தெரு.

    அடையாறு: சாரதி நகர், விஜயா நகர் சந்திப்பு, சீத்திரம் நகர், டிஏ.என்கிளேவ் ஆப்., விஜிபி செல்வா நகர், பாலமுருகன் நகர், விஜயா நகர் 1 முதல் 10வது தெரு, ராம் நகர் 1 முதல் 7வது தெரு, பை பாஸ் மெயின் ரோடு,அக்ஷ்யம் ஹோட்டல் முதல் மஹிந்திரா ஷோ ரூம் வரை.

    கோட்டூர்புரம்: ரஞ்சித் ரோடு, மருதை அவென்யூ, சித்ரா நகர், வாட்டர் டேங்க் காலனி, தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனி, நவாப் கார்டன், வெள்ளான் தெரு, தண்டாயுதபாணி 1 முதல் 2வது தெரு.

    கே.கே.நகர்: கே.கே.நகர் 1 முதல் 12 செக்டார், ராஜாமன்னார் சாலை, ராமசுவாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசபாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை பகுதி, அசோக் நகர் 1,9,11வது அவென்யூ, கன்னிகாபுரம், விஜயராகபுரம், 80 அடி சாலை.

    பல்லாவரம்: 15 முதல் 16 தெரு புதிய காலனி, ஜிஎச், பிஎஸ்என்எல், மும்மூர்த்தி நகர், தர்கா சாலை, பெருமாள் நகர், பாலிமர் நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, ஹைவே நகர், கரேட் வூஃப் நகர் ஒரு பகுதி, ஆபிசர் லேன், வீரன் சந்து, ராம் லிங்கம் தெரு, ஹரியன் நகர், ராணுவ முகாம், மல்லிகா தெரு, ராணுவ முகாம் தெரு, பரத் நகர், மாரியம்மன் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு.

    ஆவடி: ஜே.பி நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், பவர் லைன் சாலை, செந்தில் நகர், கிரின் பீல்டு, சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், ஓரகடம் சொசைட்டி.

    சோழிங்கநல்லூர்: பெரும்பாக்கம் காந்தி நகர் சொசைட்டி, காசாகிராண்ட் செர்ரி பிக், ஆக்சிஜன் நகர் மரம், ஆத்தினி தெரு, ரேடியன்ஸ் மெர்குரி.

    துரைப்பாக்கம்: ராஜு நகர், மேட்டுக்குப்பம், விஓசி தெரு, பிடிசி குடியிருப்பு, ஜோதிமாதா கோயில் தெரு, சக்தி கார்டன், சௌடேஸ்வரி நகர், சிடிஎஸ், பிள்ளையார் கோயில் தெரு, ஒக்கியம் பேட்டை, சந்திரசேகரன் அவென்யூ, நேரு நகர், ராஜீவ் காந்தி சாலை, கண்ணகி நகர், டிஎன்எஸ்சிபி, சேரி பகுதி சாலை, ஓஎம்ஆர், எம்ஜிஆர் தெரு, காளியம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம், ரிவர் வியூ காலனி.

    போரூர்: ஐயப்பன்தாங்கல் பிரின்ஸ் ஹைலேன்ட் அபார்ட்மெண்ட், தக்ஷின் அபார்ட்மெண்ட், குப்புசாமி நகர், அருணாசலம் ரோடு, காடுவெட்டி,வீரராகவபுரம் ,ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி.

    • நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல.
    • உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?

    "நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. உடனடியாக ரயில் கட்டண உயர்வை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டம், காட்பாடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் சென்றபோது, அங்குள்ள பயணிகளின் முகத்தில் வழக்கமான உற்சாகமும், மகிழ்ச்சியும் குறைந்திருந்தது என்றும், ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும், குறைந்து வரும் சாதாரண வகுப்பு பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியை களவாடியிருக்கிறது என்றும், ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல், சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் என்று மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. உடனடியாக ரயில் கட்டண உயர்வை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ஆனால், ரயில்களுக்கான கட்டணத்தில் பைசா கணக்கில் உயர்த்தப்பட உள்ளதாக வந்த செய்தியைக் கேட்ட மக்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் களவாடப்பட்டிருக்கிறது என்று கூறும் பொம்மை முதலமைச்சரே...

    கடந்த நான்காண்டுகளாக உங்களது ஏமாற்று மாடல் ஆட்சியில் ஆயிரக் கணக்கில் ஏற்றப்பட்ட சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, தொழில்வரி உயர்வு, பதிவுக் கட்டணங்கள் உயர்வு என்று அரசின் அனைத்து வரி மற்றும் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள நடுத்தரக் குடும்பங்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி தினமும் கண்ணாடி முன் நின்று நீங்கள், உங்கள் முகத்தைப் பார்க்கும்போது சிந்திக்கவில்லையா?

    உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?

    தமிழக மக்களின் சந்தோஷங்களை எல்லாம் கொள்ளையடித்த ஒரு நபர், களவாடுவது பற்றி புலம்புவது 'சாத்தான் வேதம் ஒதுவது போல்' உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சேலம் மாநகர் மாவட்டத் தலைவராக கி. குமார் நியமனம்.
    • சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக க. சரவணன் நியமனம்.

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும் அக்கட்சியின் தலைவரும், ராமதாஸ் மகனுமான அன்புமணிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் மாறிமாறி மாவட்டச் செயலாளர்கள், தலைவர்களை அறிவித்து வருகிறார்கள்.

    இன்று காலை சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.-வான அருளுக்கு பாமக இணை பொது செயலாளர் பதவி வழங்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.

    இந்த நிலையில் சேலம் மாநகர் மாவட்ட தலைவர், செயலாளரை அறிவித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக க. சரவணன் DME, இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சியின், சேலம் மாநகர் மாவட்டத் தலைவராக கி.குமார், BSc,. BL,. இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள. பாட்டாளி மக்கள் கட்சியின், அனைத்து நிலை நிர்வாகிகளும், முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    அன்புமணி ராமதாஸ் சேலம் மாவட்டம் செல்வதாக அறிவித்தார். அவர் செல்வதற்கு ஒருநாள் முன்னதாக அருள் எம்.எல்.ஏ. நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்வோம் என நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்து, பிரார்த்தனை செய்தார்.

    இது தொடர்பாக அருள் எம்.எல்.ஏ., உயிரிழந்தவர்களுக்குதான் கூட்டு பிரார்த்தனை செய்வார்கள் என தெரிவித்திருந்தார்.

    • கால அவகாசம் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்களை மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என அறிவிப்பு.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2025-2026 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 25.06.2025 இன்று முதல் நீட்டிக்கப்படுகிறது.

    அதன்படி, விண்ணப்பங்களை 29.06.2025 மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 2 நாட்களாக போலீசார் தேடி வந்தநிலையில், தனிப்படை போலீசார் ஸ்ரீகிருஷ்ணாவை பிடிபட்டார்.
    • சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரதீப் தந்த வாக்குமூலம் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த முயன்றனர்.

    ஆனால், கிருஷ்ணா செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். 2 நாட்களாக போலீசார் தேடி வந்தநிலையில், தனிப்படை போலீசார் ஸ்ரீகிருஷ்ணாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 நாட்களாக தேடி வந்த நிலையில் சென்னையில் பிடிபட்ட நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவை, சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரத்த பரிசோதனையில் ஸ்ரீகிருஷ்ணா கொகைன் பயன்படுத்தியது உறுதியானால் ஸ்ரீகாந்தை போல் ஸ்ரீகிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×