என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை
    X

    போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை

    • கிருஷ்ணா தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
    • கிருஷ்ணாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

    போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கைதான நடிகர் ஸ்ரீகாந்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் கிருஷ்ணாவும் ஸ்ரீகாந்தும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இத்தகவலை அறிந்த கிருஷ்ணா தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, நேற்று நேரில் ஆஜரான நடிகர் கிருஷ்ணாவை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 14 மணி நேரத்திற்கும் மேலாக விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதனிடையே, நடிகர் கிருஷ்ணாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நபர்கள் உடனான இவரது தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×