என் மலர்
சென்னை
- ஒரு செல்போன் எண்ணில் 5 பேரை உறுப்பினராகும் வகையில் செயலி வடிவமைவமைப்பு.
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டையை அதன் தலைவர் விஜய் வழங்கினார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூத் கமிட்டி கூட்டம், மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் MY TVK எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். நிர்வாகிகளிடம் விஜய் நேரடியாக பேசும் வகையிலும், ஒரு செல்போன் எண்ணில் 5 பேரை உறுப்பினராகும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந் நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டையை அதன் தலைவர் விஜய் வழங்கினார். கட்சியில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார் விஜய்.
- உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்போது தெரிவித்திருக்கும் கருத்தைக் கடந்த காலங்களில் பலமுறை பா.ம.க. தெரிவித்துள்ளது.
- ஒரு மக்கள் நல அரசு மக்களுக்கு ஆதரவாகத் தான் செயல்பட வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தான், அந்த வழக்கில் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த அப்பாவிகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேரை அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக திமுக அரசு சேர்த்திருக்கிறது என்றும், இது நீதி வழங்கும் அமைப்பின் மீது நடத்தப்படும் மோசடி என்றும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. குற்றம் செய்தவர்களைத் தண்டித்து அப்பாவிகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, அப்பாவிகளைத் தண்டித்து குற்றம் செய்தவர்களை பாதுகாக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5 கோட்டங்களில் 1630 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நடத்துநர் பணிக்கு ரூ.1.75 லட்சம் தொடங்கி உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.12 லட்சம் வரை செந்தில் பாலாஜி கையூட்டு வாங்கிக் குவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், செந்தில்பாலாஜி அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி , தம்மீது புகார் கொடுத்த அனைவருக்கும் பணத்தைக் கொடுத்து, புகார்களை திரும்பப் பெறச் செய்தார். இதை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி மீது மீண்டும் வழக்கு தொடர்ந்து நடத்த வேண்டும் என்று ஆணையிட்டது.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திமுக அரசு, செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்களை மட்டும் குற்றச்சாட்டப்பட்டவர்களாக சேர்க்காமல், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களையும் வழக்கில் சேர்த்திருக்கிறது. இதைத் தான் உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது. ஒரு வழக்கில் 2000 பேர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டால், செந்தில்பாலாஜியின் வாழ்நாள் முடியும் வரை இந்த வழக்கின் விசாரணை முடியாது என்பதற்காகத் தான் திமுக அரசு இவ்வாறு செய்ததாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக காவல்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்போது தெரிவித்திருக்கும் கருத்தைக் கடந்த காலங்களில் பலமுறை பா.ம.க. தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜி செய்தது ஊழல் என்று என்று பாமக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அவர் செய்தது தியாகம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்றிதழ் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கினார். இதற்கும் பா.ம.க. கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
ஒரு மக்கள் நல அரசு மக்களுக்கு ஆதரவாகத் தான் செயல்பட வேண்டும். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ மக்களின் நலன்களை பலி கொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முயல்கிறார். இதற்கு உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமது நீதி தவறிய செயலுக்காக தமிழக மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கிலிருந்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை நீக்கி விட்டு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிதம்பரம் நடராஜன் கோவிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேரலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
- செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த 26-ந்தேதி இரவு தமிழகம் வந்தார். அப்போது, தூத்துக்குடி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தையும், மறுநாளான 27-ந்தேதி கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டு ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி அடுத்த மாதம் 26-ந்தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 26-ந்தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் மாவட்டத்திற்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
சிதம்பரம் நடராஜன் கோவிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேரலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். மேலும் செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது.
- விஜயுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது.
- பா.ஜ.க. கூட்டணியில் இடம் கிடைக்காததால் அடுத்தகட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜயுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது.
கூட்டணி குறித்து விஜயின் நெருங்கிய நண்பர் ஒருவருடன் ஓ.பி.எஸ். நேரடியாக பேசி வருவதாக தகவல் வெளியான நிலையில், ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
பா.ஜ.க. கூட்டணியில் இடம் கிடைக்காததால் அடுத்தகட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* நாளை சென்னையில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன்.
* த.வெ.க.வுடன் கூட்டணி உள்ளிட்ட கேள்விகளுக்கு நாளை பதில் சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நகைக்காக அஸ்வினியை கொலை செய்த விதமும் மிகக் கொடூரமானது.
- ஆதாயக் கொலைகளைப் போலவே மதுபோதையால் நிகழக் கூடிய கொலைகளும் ஆபத்தானது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டம், வலசையூர் அருகே அரூரில் வசிக்கும் பூமாலை-சின்னபாப்பா தம்பதியை கொடூரமாக தாக்கி, அவர்களை கட்டிப்போட்டு விட்டு நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கணவர் பூமாலையும், மனைவி சின்னப்பாப்பாவும், இணைந்து விவசாயம் பார்ப்பதோடு, செங்கல் சூளையிலும் வேலை பார்த்து சொந்த உழைப்பில்; பொருளீட்டி வாழ்கிற அருமையான உழைப்பாளிகள்.
ஒரு மகனை பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க அனுப்பி வைத்திருக்கிறார்கள், இன்னொரு மகன் தமிழ்நாட்டின் திருச்செங்கோட்டில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார். உழைப்பின் உன்னதத்தை பறைசாற்றக்கூடிய உதாரண தம்பதியராய் வாழும் அவர்களின் சேமிப்பு நகையையும், பணத்தையும்தான் கொள்ளையடித்து போயிருக்கிறது கொள்ளைக் கூட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரத்திலும் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. எட்டுபவுன் நகைக்காக இளம்பெண் அஸ்வினியை ஜூலை 24-ந் தேதி (வியாழக்கிழமை) கொடூரமாக தாக்கிவிட்டு நகையை கொள்ளையடித்துப் போயிருக்கிறார்கள்.
26-ந்தேதி வரை மருத்துவ சிகிச்சையில் இருந்த அஸ்வினி, 27-ந்தேதி இறந்து போயிருக்கிறார். நகைக்காக அஸ்வினியை கொலை செய்த விதமும் மிகக் கொடூரமானது என்பதை உறவினர்கள் விவரித்திருக்கிறார்கள்.
ஆதாயக் கொலையும், ஆதாயக் கொள்ளையுமாக அடுத்தடுத்த நாள்களில் இருந்தது போலவே மதுபோதை மோதலிலும் அடுத்தடுத்த நாள்களில் தமிழ்நாட்டில் கொலைகள் நடந்து கொண்டிருப்பது வெட்கக்கேடு. சென்னை குரோம்பேட்டையில் டாஸ்மாக் மதுக்கூடத்திலேயே மதுபோதையில் தகராறு ஏற்பட்டு பரந்தாமன் என்பவரை ஒரு கும்பல் கொலை செய்திருக்கிறது. சென்னை ஐ.சி.எப். பகுதியில் நண்பர்களோடு மது அருந்திய விஜயகுமார் என்பவர் அதே நண்பர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
ஆதாயத்துக்காக ஒரு கொலை, ஒரு கொலை முயற்சியும்; மதுபோதையில் இரண்டு கொலைகளுமாக அடுத்தடுத்த நாள்களில் நடந்திருக்கும் இப்படியான சமூக சீர்கேட்டை சாதாரணமாக கடந்துபோக நினைப்பது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல. ஆதாயக் கொலைகளைப் போலவே மதுபோதையால் நிகழக் கூடிய கொலைகளும் ஆபத்தானது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
- வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்களாக வெளியில் எங்கும் நிகழ்ச்சிகளுக்கு செல்லவில்லை.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தலைமைச் செயலகம் வருகிறார். பல்வேறு திட்டப் பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 21-ந்தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். லேசான தலைசுற்றல் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆஞ்சியோ பரிசோதனையும் செய்யப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனித்தார். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். மாவட்ட கலெக்டர்களிடமும் கேட்டறிந்தார்.
அரசுப் பணிகளை மேற்கொண்ட அவர் கட்சி பணிகளையும் கவனித்தார். தி.மு.க. மண்டல பொறுப்பாளர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்களாக வெளியில் எங்கும் நிகழ்ச்சிகளுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தலைமைச் செயலகம் வருகிறார். முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை காணொலியில் திறந்து வைக்கிறார்.
கடந்த 10 நாட்களுக்கு பின்பு அவர் தலைமைச் செயலகம் வந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.
- குற்றவாளியிடம் 18 மணி நேரத்திற்கு மேலாக கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
- கைதான வாலிபர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச்சேர்ந்த 8 வயது பள்ளி சிறுமி, கடநத 12-ஆம் தேதி வடமாநில வாலிபர் ஒருவரால் பாலியியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து 20-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். அந்த வடமாநில வாலிபர் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி மற்றும் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டு தேடிவந்தனர். அந்த நபர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அசாம் மாநிலத்தை சேர்ந்த கமல் பகதூர் பிஸ்வாகர்மா என்கிற ராஜீ பிஸ்வாகர்மா (வயது35) என்ற வாலிபரை கடந்த 25-ந்தேதி ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்று 14 நாட்களுக்கு பிறகு பிடிபட்ட குற்றவாளியிடம் 18 மணி நேரத்திற்கு மேலாக கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் 26-ந்தேதி- திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் போலீசார் ராஜீ பிஸ்வாகர்மாவை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, 15-நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர் ராஜீ பிஸ்வாகர்மாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த ஆரம்பாக்கம் போலீசார் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி உமாமகேஸ்வரியிடம் மனு தாக்கல் செய்த நிலையில், ஆகஸ்ட் 2-ந்தேதி வரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இந்நிலையில் போலீஸ் காவலில் உள்ள ராஜீ பிஸ்வாகர்மாவை சம்பவ இடமான மாந்தோப்பிற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
- தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.
வார தொடக்கத்தில் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையான நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,150-க்கும், ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.73 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.9,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 127 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200
28-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280
27-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280
26-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280
25-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-07-2025- ஒரு கிராம் ரூ.126
28-07-2025- ஒரு கிராம் ரூ.126
27-07-2025- ஒரு கிராம் ரூ.126
26-07-2025- ஒரு கிராம் ரூ.126
25-07-2025- ஒரு கிராம் ரூ.128
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (31.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
வேளச்சேரி: வேளச்சேரி மெயின் ரோடு, மேட்டூ தெரு, ஓரண்டி அம்மன் கோவில் தெரு, ஜெகன்நாதபுரம், ராம்ஸ் மற்றும் சீப்ரோஸ் அடுக்குமாடி குடியிருப்புகள்.
அடையாறு: பெசன்ட் நகர், ருக்மணி ரோடு, கடற்கரை ரோடு, அருண்டேல் கடற்கரை சாலை, 7வது அவென்யூ, 30வது குறுக்கு சாலை, எம்ஜிஆர் சாலை, டைகர் வரதாச்சாரி சாலை, காந்தி நகர், கிரசென்ட் அவென்யூ சாலை, கிரசென்ட் பார்க் 1வது மற்றும் 2வது சாலை, காந்தி நகர் 3வது குறுக்குத் தெரு மற்றும் 4வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் மாளவியா அவென்யூ, சுப்பு தெரு, எம்ஜி ரோடு, மருதீஸ்வரர் நகர், எல்பி ரோடு, கேனல் பேங்க் ரோடு, கேபி நகர் 1 முதல் 3-வது மெயின் சாலைகள், கேபி நகர் 2 மற்றும் 3-வது குறுக்கு தெரு, பிவி நகர் 1 மற்றும் 2-வது தெரு, அண்ணா அவென்யூ பகுதி, கோவிந்தராஜபுரம், சர்தார்பட்டேஸ் ரோடு, பக்தவத்சலம் 1-வது தெரு.
பல்லாவரம்: திருசூலம் பெரியார் நகர், அம்மன் நகர், அருள்மலை சாவடி, அன்னை அஞ்சுகம், சக்தி நகர் மற்றும் பல்லாவரம் கிழக்கு பகுதி மற்றும் திருசூலம், வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாசியம் நகர், மாணிக்கம் நகர், பிபிஆர் நகர்.
வியாசர்பாடி: எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், காந்தி நகர், புதுநகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்கெட், சென்ட்ரல் குறுக்கு தெரு, ஏபிசி கல்யாணபுரம், சத்யம்மூர்-25வது தெரு கார்டன், பள்ளத் தெரு 1-3வது தெரு, உதய சூர்யன் நகர், எஸ்.ஏ காலனி மற்றும் சர்மா நகர்.
ஆவடி : பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், தந்துறை, கண்ணப்பாளையம், கோபாலபுரம், விஜிவி நகர் மற்றும் விஜிஎன் நகரம்
தாம்பரம்: ஏஎல்எஸ் நகர், ரமணா நகர், ஆதம்பாக்கம் மெயின் ரோடு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாட வீதிகள், மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர், அகரம் மெயின் ரோடு, வேதாச்சலம் நகர், எஸ்ஆர் காலனி, ஐஏஎப் சாலை, ரிக்கி கார்டன், ஹரிணி அபார்ட்மென்ட், சுமேரு சிட்டி, ரங்கா நகர், சாரங்காசி நகர், திருவண்ணாமலை நகர், திரு. காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, பஞ்சாயத்து போர்டு ரோடு, சக்ரா அவென்யூ.
- ஜெயலலிதா இருக்கும் வரை ஒன்றிய அரசின் ‘உதய் மின் திட்டத்தில்’ அவர் கையெழுத்து போடவில்லை.
- திரைக்கதை எழுதி நாடகம் போட்டவர்களே உங்கள் தரம் தாழ்ந்த எண்ணங்களை உலகிற்கு பறைசாற்றாதீர்கள் !
சென்னை :
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு சில நாட்களுக்கு முன்பு "முதலமைச்சர் அவர்கள் பூரண நலம் பெற வேண்டும்" என "சுந்தரா டிராவல்ஸ்" யாத்திரையில் சொன்ன அதே எதிர்கட்சி தலைவரின் நாக்குதான் இப்போது 'ஆஸ்பத்திரியில் டேபிள் மீட்டிங்' என நர்த்தனம் ஆடுகிறது. அது சரி பொதுவாக எல்லோரும் டேபிள் முன்பு அமர்ந்துதான் மீட்டிங் போடுவார்கள் என்பது தெரியாமல்தானே பழனிசாமி பாவம் டேபிளுக்கு அடியில் மீட்டிங் போட்டார் !
அரசு அலுவல்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறுகிறதா என அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வது, "உங்களுடன் ஸ்டாலின்" எனும் மகத்தான திட்டத்திற்கான முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா என தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்பது, காணொளிக் காட்சி வாயிலாக கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவது. பொதுமக்களுடன் வீடியோ காலில் பேசி முகாமின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி மக்களுக்கு சென்றடைகின்றனவா என்று நேரடியாக பயனாளிகளிடம் கேட்டறிதல், மாண்புமிகு பிரதமர் மோடியின் தமிழ்நாட்டுப் பயணத்தின் போது மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாம் பெற வேண்டிய திட்டங்களுக்காக கடிதம் தயார் செய்து அனுப்பி வைத்தது என மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோதும் தொடர்ந்து தடையின்றி தனது மக்கள் பணியை செய்தார் திராவிட நாயகன் நமது முதலமைச்சர் அவர்கள் !
ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது துள்ளத் துடிக்கத் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைப் பலி வாங்கிவிட்டு, "டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்" எனச் சொன்னவர் தான் இந்த எதிர்க்கட்சித் தலைவர்.
எந்த காலத்திலும் உருப்படியாக முதலமைச்சர் பணிகளையே செய்யாத எதிர்க்கட்சித் தலைவருக்கு இவையெல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். "அம்மா இட்லி சாப்பிட்டார்; செவிலியர்களுடன் பந்து விளையாடினார்; விரைவில் வீடு திரும்புவார்; டிவி பார்த்தார்; கிச்சடி சாப்பிட்டார்; நர்ஸ்களுக்குப் பரிசு கொடுத்தார்; டாக்டர்களுக்கே அறிவுரை கூறினார்" என்றெல்லாம் திரைக்கதை எழுதி நாடகம் போட்டவர்களே உங்கள் தரம் தாழ்ந்த எண்ணங்களை உலகிற்கு பறைசாற்றாதீர்கள் !
அம்மையார் ஜெயலலிதா இருக்கும் வரை ஒன்றிய அரசின் 'உதய் மின் திட்டத்தில்' அவர் கையெழுத்து போடவில்லை. அவர் மறைந்த பிறகு ஓடோடிப்போய் கையெழுத்து போட்டு தமிழ்நாட்டை வஞ்சித்தது சந்துகளில் இருந்து குரல் கொடுக்கும் ஷாக்க்ஷாத் பழனிசாமிதான் என்பது ஊருக்கே தெரிந்தபோதும் இன்று அவரே "மின்கட்டணம் உயர்ந்துவிட்டது" என நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார்.
இப்படி, தானே ஏற்றிய மின்கட்டண உயர்வைக் குறித்து தானே பேசிவரும் பழனிசாமி, ஒன்றிய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து ஏன் பேச அஞ்சுகிறார்? 2014ம் ஆண்டு ரூ.414-ஆக இருந்த சமையல் காஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.868.50-ஆக உயர்ந்து வளர்ந்து நிற்பது எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியாதா? அல்லது எப்போதும் போல நடிக்கிறாரா ?
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- வாழ்த்தியோர் அனைவருமே, பா.ம.க. நிறுவனர் - தலைவர் என்றே குறிப்பிட்டு வாழ்த்தியிருந்ததை காணும்போது இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தோம்.
- ராமதாஸ்தான் இயக்கத்தின் நிறுவனர் - தலைவர் என்பதை விலகி நிற்கும் ஓரிருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
சென்னை:
பா.ம.க.வில், டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இதை சுட்டிக்காட்டியும், டாக்டர் ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பா.ம.க. நிறுவனர் - தலைவர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் - சுகாதாரத்துறை மந்திரி ஜெ.பி. நட்டா, நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்தியோர் அனைவருமே, பா.ம.க. நிறுவனர் - தலைவர் என்றே 'டாக்டர் ராமதாசை' குறிப்பிட்டு வாழ்த்தியிருந்ததை காணும்போது இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தோம்.
டாக்டர் ராமதாஸ்தான் இயக்கத்தின் நிறுவனர் - தலைவர் என்பதை விலகி நிற்கும் ஓரிருவரும் புரிந்து கொள்ள இந்த பிறந்தநாள் வாழ்த்தளிப்பு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்று காலை 8 மணி முதல் நாளை மறுநாள் இரவு 10 மணி வரை 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.
- பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை:
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாயினை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் இன்று காலை 8 மணி முதல் நாளை மறுநாள் இரவு 10 மணி வரை 3 நாட்கள் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.






