என் மலர்
சென்னை
- எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், சில நாட்களுக்கு முன் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. முக்கிய தலைவர்களையும் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்க உள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்," கூட்டணி கட்சி தலைவர்கள் அமித் ஷாவை சந்திப்பது வழக்கம் தான். அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கான காரணங்கள் தெரியவில்லை.
சந்திப்பு முடிந்த பின்னர் எதற்காக சந்திப்பு என்பதை எடுத்து கூறுகிறோம்" என்றார்.
- நாங்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி அமைச்சர் அதை தீர்த்து வைத்துள்ளார்.
- இந்தியாவை உயர்நிலைக்கு கொண்டு செல்ல போராடக் கூடியவர் பிரதமர் மோடி.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது:-
ஜி.எஸ்.டி. முதன் முதலில் அமல்படுத்தப்பட்ட போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 28 சதவீதம், 12 சதவீதம், 5 சதவீதம் என்று இருந்த வரி முறைகளை முறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு கட்டங்களில் எங்கள் இடர்பாடுகளை எல்லாம் சேகரித்து அமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்றோம்.
நாங்கள் பல அமைச்சர்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் நாங்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி அமைச்சர் அதை தீர்த்து வைத்துள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி வசூலில் அதிகாரிகள் அச்சு றுத்தல் வணிகர்களுக்கு இருப்பது பற்றியும் அமைச்சரிடம் எடுத்துச் சொன்னதும் அதையும் உரிய அறிவுரைகள் வழங்கி தீர்த்து வைத்துள்ளார்.
இப்போது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் 5 சதவீத வரிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வரியை மக்களும் மனம் மகிழ்ந்து கட்டுவார்கள். விலைகளும் குறையும்.
பிரதமர் மோடி பொறுப்பேற்றப் பிறகு உலக நாடுகள் மத்தியில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. வளர்கிறது. இதற்கு காரணம் மோடியின் கடுமையான உழைப்புதான்.
அமெரிக்கா 25 சதவீதம், 50 சதவீதம் வரியை நம்மீது திணித்தாலும் அதையும் எதிர்கொண்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாத வகையில் உற்பத்தி பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
எத்தனை நாடுகள் இந்தியா மீது பொறாமைப்பட்டாலும் அத்தனை நாடுகளிடம் இருந்தும் மீட்டு இந்தியாவை உயர்நிலைக்கு கொண்டு செல்ல போராடக் கூடியவர் பிரதமர் மோடி.
இவ்வாறு அவர் பேசினார்.
- முதலமைச்சரின் கடித்ததில் வெறுப்பையும், விரக்தியையும் கக்கும் வார்த்தைகள் இருந்தன என்றார் விஜய்.
- நமது கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளும் இன்னும் ஆழமாக உணர்ந்திருப்பர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களின் கதறலை முப்பெரும் விழா என்கின்ற கடிதம் வாயிலாகவே வெளிப்படுத்தியுள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நமது மதுரை மாநாட்டில் அறிவித்ததைப் போலவே. "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. உங்க விஜய் நான் வரேன்" என்ற நம் மக்கள் சந்திப்பை பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் நேற்று (13.09.2025) தொடங்கினோம்.
எளிதாகக் கடந்துவிடும் தூரத்தைக்கூட மக்கள் கடலில் பல மணிநேரம் நீந்தியே கடக்க வேண்டிய சூழல் இருந்தது என்பதை நாடும் நன்றாகவே உணர்ந்தது. இதையே நமது கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளும் இன்னும் ஆழமாக உணர்ந்திருப்பர்.
'விஜய் வெளியே வரவே மாட்டான். மக்களைச் சந்திக்கவே மாட்டான் என்று ஆள் வைத்துக் கதையாடல் செய்தோர். இப்போது வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனர். இதை முன்கூட்டியே ஒப்புக்கொள்வது போலத்தான் தங்களது கதறலை முப்பெரும் விழா என்கிற கடிதம் ஒன்றின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தனர்.
புதிய எதிரிகள் என்று பெயர் சொல்லாமல் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. பழையன கழிதலும் புதியன புகுதலும்தானே பழந்தமிழ் மரபு? இன்னும் என்னென்னவோ வெறுப்பையும் விரக்தியையும் கக்கும் வார்த்தைகள் அக்கடிதத்தில் அழுதுகொண்டிருந்தன.
வெளியே கொள்கை, கொள்கை என்று பேசுவதும் உள்ளுக்குள்ளே பாஜகவோடு உறவாடுவதும் யார் என்று மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். எனவே. கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக்கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?
பொய் வாக்குறுதிகளை அள்ளி அள்ளித் தெளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு, கேள்வி கேட்டுத் தங்களது உரிமைகளுக்காகப் போராட வரும் அதே சாமானிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுபவர் யார் என்றும் தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?
தமிழகம் தாண்டியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உருவாகி இருக்கும் தன்னெழுச்சியான புத்தெழுச்சி, இப்போது அவர்களை ஏகத்துக்கும் குமுற வைத்துள்ளது. பொதுமக்களுக்கு இவர்கள் செய்யும் இடையூறுகள் அனைத்தையும் பற்றி, மக்களே கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.
மக்கள் எழுப்பும் கேள்விகளில் சில இதோ:
வாக்குறுதி தந்து வாக்குகளை வாங்கி, ஆட்சிக்கு வந்த பின்னர் வழக்கம்போல ஏமாற்றியதால் உரிமைக் குரல் எழுப்பிய தூய்மைப் பணியாளர்களைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடியதா இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு? மாறாக, கைது செய்து தூக்கிச் சென்று அடக்கி ஒடுக்கித்தானே மகிழ்ந்தது?
அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டத்தை அன்போடு, கனிவோடு அணுகியதா, இந்த அவலமிகு தி.மு.க. அரசு?
மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தைக்கூட மதிக்காமல், மனிதாபிமானமற்ற முறையில் நடந்ததுதானே இந்தத் திறனற்ற தி.மு.க. அரசு?
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டுக் குதூகலித்ததுதானே இந்தக் கொடிய தி.மு.க. அரசு?
பரந்தூர் விவசாயிகளின் வருடக்கணக்கான போராட்டத்தையும் பொருட்படுத்தாமல் வஞ்சிப்பதுதானே இந்த வஞ்சகத் தி.மு.க. அரசு?
சாம்சங் தொழிலாளர் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் தட்டிக் கழிப்பதுதானே இந்தத் தொழிலாளர் விரோதத் தி.மு.க அரசு?
மீனவர்களின் கண்ணீரைத் துடைக்காமல், கைகட்டி வேடிக்கை பார்ப்பதுதுதானே இந்தக் கையாலாகாத தி.மு.க. அரசு?
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தைப் பற்றிக் கவலை கொள்ளாத கல்மனம் கொண்ட கபட நாடக அரசுதானே இந்தத் தி.மு.க. அரசு?
இடையறாமல் ஊறுகள் செய்வதையே கொள்கையாகக் கொண்ட இதயமற்ற இந்தத் தி.மு.க.விற்கு, கொள்கை, கோட்பாடுகளோடு மக்கள் விரும்பும் இயக்கம் ஒன்று எப்போது வந்தாலும் அதன் மீது கொள்கையற்ற கூட்டம் என்ற நமைச்சலையும் குமைச்சலையும் கொட்டுவது ஒன்றும் புதிதில்லை தானே?
மாபெரும் மக்கள் சக்தியுடன் வந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையும் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் என்றும் வெறும் கவர்ச்சியை மாத்திரம் வைத்துக்கொண்டிருப்பவர்' என்றும் தங்கள் மனத்தில் மண்டிக் கிடந்த வெறுப்பு நெருப்பைக் கக்கியவர்கள்தானே இவர்கள்? அன்றே இவர்கள் இப்படித்தான். இன்று மட்டும் மாறிவிடுவார்களா?
மாபெரும் மக்கள் சக்தி. பெண்கள் சகதி மற்றும் இளைஞர் சக்தியுடன் மக்களரசியலில் முதன்மைச் சக்தியாகக் களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் எப்படிக் குறைகூறாமல் இருப்பார்கள்?
யார் எத்தனைக் கூப்பாடு போட்டாலும், எப்படிக் கதறினாலும், எத்தகைய வெறுப்பை கக்கினாலும் நாம் முன்னேறிச் செல்வோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய அடிப்படைக் கோட்பாட்டோடு, மதச்சார்பற்ற சமூக நீதி என்ற மகத்தான கொள்கையோடு பாதை வகுப்போம். தந்தை பெரியார்,
பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார்.மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கொள்கை வழிகாட்டுதலுடன் வெற்றிநடை போடுவோம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் 1967, 1977 தேர்தல்களில் நிகழ்ந்ததைப் போல மாபெரும் வெற்றி விளைவை மக்கள் சக்தியின் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் நிகழ்த்திக் காட்டும்.
நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- சொல்லும் நல்லெண்ணமும் செயலாகி - அதன் பயன் ஒவ்வொருவரையும் சென்றடைகிறது. இதுதான், திராவிட மாடல்!
- 2,23,013 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சொல்லும் நல்லெண்ணமும் செயலாகி - அதன் பயன் ஒவ்வொருவரையும் சென்றடைகிறது. இதுதான், திராவிட மாடல்!
இன்று கிருஷ்ணகிரியில் -
* ரூ.2884.93 கோடி செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து,
* 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
* 2,23,013 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
அவதூறுகளால் களங்கம் விளைவித்திட முடியுமா - பொய்களால் காரிருளை விளைவித்திட முடியுமா - தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்க முடியுமா என்றெண்ணும் கூட்டத்தின் மலிவான அரசியலை எப்போதும்போல் 2026-லும் வீழ்த்துவோம்! நம்பர் 1 தமிழ்நாடு எனத் தலைநிமிர்வோம்! என்று கூறியுள்ளார்.
- பாரதத்திற்கான வரி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் இன்று நடந்தது.
- சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு வருகிற 22-ந்தேதி அமலுக்கு வருகிறது.
ஜி.எஸ்.டி. வரி சீரமைப்பு பற்றி வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி உயரும் பாரதத்திற்கான வரி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் இன்று நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழ் பேசக்கூடிய ஒரு அமைச்சராக ஜி.எஸ்.டி. வரி பற்றி மக்களுக்கு விளக்கும் பணியை எனக்கு வழங்கி என்னை பிரதமர் தமிழ்நாட்டுக்கு அனுப்பினார்.
அப்போது மேடையில் நான் பேசியபோது விக்கிரம ராஜா இருந்தார். இதனால் என்னென்ன பாதிப்புகள் வரும், மக்களுக்கு கஷ்டமாக இருக்குமே என்று அப்போது விக்கிரமராஜா எடுத்து சொன்னார்.
அவர் எடுத்து சொன்னதால் திரும்பவும் நான் சென்று அறிக்கை கொடுத்து என்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலமாக முன்னேற்றம் ஏற்படுத்திக் கொண்டே வந்தோம். அதற்காக விக்கிரமராஜாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
5, 12, 18, 28 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. இப்போது 5, 18 என்கிற 2 வகைகளுக்கு வந்துவிட்டது. காலையில் எழுந்ததும் நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் இருந்து இரவு தூங்குவதற்கு முன்பு நமக்கு தேவைப்படும் பொருட்கள் வரை ஏழை, நடுத்தர வர்க்கம், பணம் இருக்கின்றவர்கள் எல்லோரும் பயன்படுத்தக் கூடிய எந்த வகையான பொருளாக இருந்தாலும் ஜி.எஸ்.டி. தாக்கம் இருக்கும்.
அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அது 28 சதவீதமாக இருக்குமா? 18 சதவீதமாக இருக்குமா? என்கிற காலம் போய் இன்றைக்கு 5 அல்லது 18 சதவீதத்துக்குள் எல்லாப் பொருட்களும் வந்து விடுகிறது என்பதுதான் முக்கியமான அம்சம்.
12 சதவீதத்தில் இருந்த பொருட்கள் 5 சதவீதத்துக்கு வந்துள்ளது. மேலும் 12 சதவீதத்தில் இருந்த சில பொருட்களுக்கு முழுமையாக வரி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அதே போல் ஏற்கனவே 18 சதவீதத்தில் இருந்த 90-க்கும் மேற்பட்ட பொருட்கள் 5 சதவீதமாகவும் குறைந்துள்ளது. சில பொருட்களுக்கான வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்துக்கு வந்துள்ளதால் எவ்வளவு விலையை குறைத்துள்ளோம் என்பதை பாருங்கள்.
12-ல்இருந்து 5 சதவீதத்துக்கு வந்ததே குறைவுதான். அதிலும் 18-ல் இருந்து 5 சதவீதத்துக்கு வந்தது எப்பேர்பட்ட குறைச்சல் என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும்.
எப்போதும் நமது மீது அரசு வரி விதிக்கிறது, பளுவை ஏற்றுகிறது என்ற நிலை போய் இன்று பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து உள்ளோம். 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத் துள்ளோம். 12 சதவீதத்தில் இருந்து சில பொருட்கள் வரி நீக்கப்பட்டுள்ளது.
இதனால் 140 கோடி மக்களுக்கு பலவிதமான பொருட்களும் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சதவீதம், அரை சதவீதம் அல்ல, கிட்டத்தட்ட 13 சதவீதம் வரை குறைத்து உள்ளோம்.
பல பொருட்களுக்கு வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் இதனுடைய தாக்கம் 140 கோடி மக்கள் மீதும் இருக்கும். இது நல்ல தாக்கம்தான். விலை குறைகிறது. விலை குறைந்தால் வீட்டில் நமக்கு செலவு மிச்சமாகும். அதை நீங்கள் எந்த வகையிலாவது உங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்துவதோ, பெரிய வர்களுக்கு செலவு செய் வதோ அல்லது சேமிப்பாக வைப்பதோ உங்கள் கையில் இருக்கிறது.
பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து இதை தீபாவளிக்கு முன்பு குறைத்து விடுங்கள் என்றார். தீபாவளிக்கு முன்பு கொடுப்பதற்கு யோசித்துக் கொண்டிருக்கும்போது தென்னிந்தியாவில் நாம் அனைவருக்கும் தீபாவளி சமயத்தில் வீட்டில் துணி எடுப்பது, பலவிதமான பொருட்கள் வாங்குவது போன்ற பழக்கம் இருக்கிறது.
வடஇந்தியாவிலும் செய்வார்கள். ஆனால் வடக்கோ, குஜராத்தோ, மராட்டியமோ அல்லது துர்கா பூஜை நேரத்தில் மேற்கு வங்காளத்திலோ கூட நீங்கள் யோசித்து பார்த்தால் தீபாவளிக்கு முன்பே நவராத்திரி கால கட்டத்தில் வீட்டுக்கு நிறைய சாமான்கள் வாங்குவதோ அல்லது பிள்ளைகளுக்கு பொருட்கள் வாங்குவதையோ செய்வார்கள்.
தீபாவளியை மனதில் வைத்து பிரதமர் சொன்னார் என்றால் கூட எல்லா மாநிலத்தினரும் அமர்ந்தி ருக்கக் கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அவரவர்களுக்கு அவரவர்களின் பண்டிகையை மனதில் வைத்து நவராத்திரிக்கு முன்பே செய்து விட வேண்டும் என்பதால் முன்கூட்டியே செய்துவிட்டோம்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகப்பெரிய வெற்றி கிடைத் துள்ளது. அவர்கள் பல முறை கோரிக்கை வைத்தால் கூட இன்றைக்கு ஒரேயடியாக எல்லா கட்டமைப்புகளையும் மாற்றி விட்டு தொழில் செய்பவர்களுக் கும், வணிகத்தில் இருப்பவர் களுக்கும் சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை எளிமைப்படுத்தி வரியையும் குறைத்து உள்ளோம். இதனால் எல்லா மக்களுக்கும் பயன் இருக்கி றது.
12 சதவீதத்தில் இதுவரை இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீதத்துக்கு குறைந்துள்ளது. 1 சதவீதம் மட்டுமே 18 சதவீதத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத் தப்பட்டபோது 65 லட்சம் பேர்தான் வரி கட்டினார்கள். அதில் தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் அடங்குவர். ஆனால் இன்று ஜி.எஸ்.டி. வரியை 8 வருடத்தில் 1½ கோடி பேர் கட்டுகி றார்கள்.
ஜி.எஸ்.டி. ஒரு பெரிய கப்பர்சிங் வரி என்று எதிர்க்கட்சி தலைவர் ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அது கப்பர் சிங் வரியாக இருந்திருந்தால் தொழிலோ, வர்த்த கமோ 65 லட்சத்தில் இருந்த வர்கள் ஏன் 1½ கோடி பேர் ஜி.எஸ்.டி.யில் சேர்ந்தார்கள். அது சுலபமாக இருக்கிறது.
எங்கு பொருள் வாங்கினாலும் அதே விலையில் கிடைக்கிறது. பொருள் வாங்கி அதை இன்னும் முன்னேற்றம் அடைய செய்து ஏற்றுமதிக்கு கூட பயன்படுத்துகிறீர்கள். அதனால் நுகர்வோர் மட்டும் வரி கட்டவில்லை. பொருள் தயாரிப்பவர்களும் வரி கட்டுகிறார்கள்.
ஜி.எஸ்.டி.யில் வருவதால் நமக்கு ஆதாயம் இருக்கிறது என்று சொல்லி வந்ததால் 65 லட்சத்தில் இருந்து 1½ கோடியாக கூடி இருக்கிறது.
2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. வரி ரூ.7.9 லட்சம் கோடி யாக வசூலானது. அது இன்று ரூ.22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு மாதம் ரூ.1.9 லட்சம் கோடி முதல் ரூ.2 லட்சம் கோடி வரை வருமானம் கிடைக்கிறது. இதை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆளுக்கு 50 சதவீதமாக பிரித்துக் கொள்கிறோம்.
ரூ.1.8 லட்சம் கோடி வருமானம் வந்தால் அது ரூ.90 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கும், ரூ.90 ஆயிரம் கோடி மாநில அரசுக்கும் செல்கிறது. அதன் பிறகு ரூ.90 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு வருவதில் கூட கிட்டத்தட்ட 41 சதவீதம் மாநில அரசுகளுக்கு போகி றது. அதனால் 100-ல் 23 சதவீதம்தான் மத்திய அர சுக்கு கிடைக்கிறது. ஜி.எஸ்.டி. மூலமாக மக்களுக் கும் பலன் கிடைத்துள்ளது. மாநில அரசுகளுக்கும் பயன் கிடைத்துள்ளது.
இதற்கு முன்பு ஜி.எஸ்.டி.யில் ஏதாவது குறை இருப்பதாக மக்கள் சொன் னால், மோடி ஏன் இப்படி செய்கிறார். நிர்மலா சீதா ராமன் என்ன செய்கிறார், அவருக்கு ஊறுகாய்தான் போட தெரியும். ஜி.எஸ்.டி.யை நடத்த தெரியாது என்று விமர்சனம் செய்தார் கள். அதை நாங்கள் பொறு மையாக காதில் கேட்டுக் கொண்டிருந்தோம். அப்படி சொல்லாதீர்கள் என்று நாங்கள் யாரையும் எதிர் மறையாக பேசவில்லை.
ஆனால் இவ்வளவு நாளில் மாநில அரசுகளுக்கு பலவிதமான நல்லது நடந்தி ருக்கிறது. மாநில அரசுக்கு எவ்வளவு வருமானம் பெருகி இருக்கிறது என்ப தையும் எடுத்து சொன்னேன்.
அந்த நல்லதுக்கு பிரதமர் மோடி, ஊறுகாய் போடுகிற நிர்மலா மாமிதான் காரணம் என்று யாரும் சொல்ல வில்லை. சொல்லாமல் போனால் கூடஎனக்கு பரவாயில்லை. நாட்டுக்காக நாம் செய்கிறோம், எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யவில்லை.
சொல்லாவிட்டாலும் இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன? மாநிலங்களில் இருந்து வரும் நிதித்துறை அமைச்சர் கள் வந்து அமர்ந்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கிறார்கள்.
இத்தனை நாளாக செய்த நல்லதில் அவர்களும்தான் இருந்தார்கள். இன்றைக்கு செய்கிற நல்லதிலும் அவர் கள்தான் இருக்கிறார்கள். இந்த முடிவை ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருந்த அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் சேர்ந்து தான் எடுத்தார்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் கெட்ட பெயர் வரும் போதோ, திட்டும் போதோ பிரதமர் மற்றும் என்னை சொல்லிக் கொண் டிருந்தவர்கள் இன்றைக்கு நல்ல இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்கிறோம். அதிலும் மாநில அரசுகளுக்கு பங்கு இருக்கிறது என்பதை நானே எடுத்து சொல்ல விரும்புகிறேன்.
அதைத்தான் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலும் நான் சொன்னேன். பத்திரி கையாளர்கள் சந்திப்பிலும் சொன்னேன். மாநிலங்களில் இருந்து வந்திருக்கக் கூடிய எல்லா நிதி அமைச்சர்க ளுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லோரும் ஒத்துழைத்து இந்த முடிவை எடுத்தார்கள்.
மக்கள் நலன் கோரி வரி விகிதத்தை குறைக்கும் போது அந்த நன்மை மக்க ளுக்கு போய் சேர விடாமல் தடுப்பதற்கு யாருக்கு மனதில் தைரியம் இருக்கும். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இதைப்பற்றி சர்ச்சை ஏற் பட்டதா? என்று பத்திரிகை யாளர்கள் என்னிடம் கேட்டனர்.
350-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விலையை குறைத்து உள்ளோம். விலை என்றால் அதற்கான வரியை குறைத்திருக்கிறோம். 5, 18 சதவீதம் என 2 அடுக்காக குறைத்துள்ளோம். இது தவிர தொழில் செய்பவர்கள் 3 நாளில் பதிவு செய்யும் வகையில் கட்டமைப்பை சரி செய்துள்ளோம்.
சாலையோர கடைகளில் விற்கப்படும் பாப்கானுக்கு ஏற்கனவே வரி கிடையாது. ஆனால் தொழிற்சாலையில் தயாரித்த பாப்கார்னை உப்பு போட்டும், சாக்லேட் போட்டும் விற்றனர். அதில் உப்பு போட்ட பாப்கார்னுக்கு 5 சதவீதமும், சாக்லேட் போட்ட பாப்கானுக்கு 18 சதவீதம் எனவும் வகைப் பாடு இருந்தது.
இதுபற்றி ஒரு பாப்கான் விலையை நிதி மந்திரி இப்படி விளக்கி கூறுகி றாரேஎன்று விமர்சித்தனர். கிண்டல் செய்தனர். அதற் குரிய பதிலை சொல்வது எனக்கு இருந்தது. பாப்கார்னுக்கு 2 விலையா? என்று கேட்டனர். இப்போது உணவு பொருட் கள் எல்லாமே 5 சதவீதத் துக்கு வந்து விட்டது அல்லது ஜீரோவுக்கு போய் விட்டது. இப்போது வகைப்பாடு பிரச்சினையே இல்லை.
ஜி.எஸ்.டி. வரி குறைப் பால் பொருட்களின் விலை குறையப் போகிறது. நாட் டில் ஒரு பெரிய விதமான மாறுதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலமாக வந்து உள்ளது.
இந்த சீர்திருத்தத்தை செய்வதற்கு 5 விதமான செயல்களை மனதில் வைத்து இதை அமல்படுத்தி னோம். தினசரி பயன்படுத் தும் பொருட்களில் மாறுதல் வருமா? ஏழைகள், நடுத்தர மக்கள் தினமும் பயன்படுத் தும் பொருட்களை இதில் கொண்டு வருகிறோமா? விவசாயிகளுக்கு உதவியாக இருக்குமா? சிறு-குறு தொழில் செய்பவர்கள் வாங்கும் பொருட்கள் இன்னும் குறைந்த விலை யில் கிடைக்குமா? நமது நாட்டு பொருளாதாரம் விரைவில் வளருமா? என் பதை வைத்துதான் இதை செய்தோம்.
ஒவ்வொரு பெரிய கம்பெனிகளும் விலை குறைப்பை பொதுமக்க ளுக்கு வழங்குவோம் என்று தெரிவித்துள்ளனர். எல்லா நிறுவனங்களும் பொருட் களை விலை குறைத்து மக்களுக்கு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பிரதமர் மோடி மக்கள் நலன்கோரி இந்த ஜி.எஸ்.டி. வரி சீர்த்திருத்தத்தின் ஆதா யம் மக்களுக்கு போய் சேர முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.
இந்த வரி சீர்த்திருத்தம் மூலம் தமிழ்நாட்டில் என்னென்ன பொருட்கள் விலை குறையும், எந்தெந்த பகுதிகள் பயன் அடையும் என்பதையும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டினார்.
திருப்பூர், கோவை, ஈரோடு பகுதிகளில் உற்பத்தி யாகும் பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள், கைவி னைப் பொருட்கள். காஞ்சீபுரம் பட்டு மற்றும் ஜரிகை வேலைப்பாடு, பொள்ளாச்சி காங்கேயம், கடலூர் பகுதிகளில் உற் பத்தி செய்யப்படும் தென்னை நார் பொருட்கள்.
சிவகாசி, சென்னை பகுதிகளில் உற்பத்தியாகும் காகித தொழில்கள், தஞ்சா வூர் பாரம்பரிய பொம்மை கள், கும்பகோணம் உலோ கப் பொருட்கள். ஸ்ரீபெரும்பு தூர், ஓசூர், கோவை பகுதிகளில் உற்பத்தியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் உள்பட தமிழ்நாட்டில் ஏராளமான பொருட்களின் விலை குறையும். இதன் மூலம் சமூக பொருளாதார அம்சங்கள் வலுப்பெறும்.
நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் நயி னார் நாகேந்திரன் சென்னை ஐ.ஐ.டி. இயக்கு னர் காமகோடி, சி.ஐ.ஐ. சேர்மன் உன்னிகிருஷ்ணன், ஏ.இ.பி.சி. துணைத் தலைவர் சக்திவேல், எப்.ஐ.சி.சி.ஐ. சேர்மன், வேலூர் எச்.சி.சி.ஐ. தலைவர் லினேஷ் சனத்குமார், சைமா தலை வர் துரை பழனிசாமி , சென்னை குடிமக்கள் மன்ற தலைவர் கே.டி.ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சென்னை குடிமக்கள் மன்ற செயலாளர் காயத்ரி, சுரேஷ் நன்றி கூறினார்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இதனிடையே, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 18-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள்.
- தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
த.வெ.க. தலைவர் விஜய், "அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்பதை ஏதோ அவர் மிகப்பெரிய தியாகம் செய்வதைப் போல ஊடகங்களும் அதை பெரிது படுத்தியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பல்லாண்டு காலம் முதலமைச்சராக இருந்த தோழர். இ.எம்.எஸ், தோழர் ஜோதி பாசு, தோழர் நிரூபன் சக்கரவர்த்தி, தோழர் தசரத் தேவ், தோழர் இ.கே. நாயனார், தோழர். மாணிக் சர்க்கார், தோழர் புத்ததேவ் பட்டாச்சாரியா, தோழர் வி.எஸ் அச்சுதானந்தன் இவர்கள் அனைவரும் அரசியலில் 60, 70 ஆண்டு காலத்திற்கு மேலாக மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள். அது மட்டுமல்லாமல் தோழர் இ.எம்.எஸ், தோழர் பி.சுந்தரைய்யா, தோழர் ஹர்கிசன்சிங் சுர்ஜித் இவர்கள் அனைவரும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக சிறப்பாக செயல்பட்டவர்கள். தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர்கள் மட்டுமல்ல, அடிப்படைக் கட்சி உறுப்பினர்கள் கூட தங்களுடைய சொத்துக்களை மக்கள் பயன்பாட்டுக்காக கட்சிக்கு கொடுத்திருக்கிறார்கள். உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்வது தான் கம்யூனிஸ்டுகளின் அரசியல். பணம் சம்பாதிக்காமல் இருப்பதல்ல! வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய். அதிலும் மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் என்று கூறியுள்ளார்.
- 2017-ம் ஆண்டு 65 லட்சம் மக்கள் ஜி.எஸ்.டி.யில் இணைந்தார்கள்.
- தற்போது 1.51 கோடி மக்கள் ஜி.எஸ்.டி.யில் உள்ளார்கள்.
ராயப்பேட்டை:
சென்னை ராயப்பேட்டையில் ஜி.எஸ்.டி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
* ஜி.எஸ்.டி. மூலம் மக்களுடன் சேர்த்து மாநிலங்களுக்கும் பயன் கிடைத்துள்ளது.
* ஒட்டுமொத்தமாக 22.08 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசிற்கு ஜி.எஸ்.டி மூலம் வருமானம் கிடைத்துள்ளது.
* 2017-ம் ஆண்டு 65 லட்சம் மக்கள் ஜி.எஸ்.டி.யில் இணைந்தார்கள். தற்போது 1.51 கோடி மக்கள் ஜி.எஸ்.டி.யில் உள்ளார்கள்.
* மாநிலங்கள் சேர்ந்துதான் ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
- அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. முக்கிய தலைவர்களையும் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
- வரும் 17,18 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், சில நாட்களுக்கு முன் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. முக்கிய தலைவர்களையும் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை ஒட்டி வரும் 17,18 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது.
- பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்" எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.
இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.
வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் என பதிவிட்டுள்ளார்.
- சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கவுள்ளார்.
- தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ/ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கவுள்ளார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-
ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது.
மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் "தாயுமானவர்" திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், "அன்புக்கரங்கள்" திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப் படிப்பு முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (15-ந் தேதி) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கவுள்ளார்.
மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12-ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ/ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கவுள்ளார்.
- இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- இது ஒரு பொன்மாலைப் பொழுது என நேற்றைய மாலை ராஜாவின் ராகங்களோடு கரைந்து போனாலும் - உள்ளத்தில் உறைந்து நிற்கிறது!
சென்னை :
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு பாராட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் அரை நூற்றாண்டு காலம் பலரது இதயத்தை ஆண்ட இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், இளையராஜாவின் பாராட்டு விழா நிகழ்ச்சி வீடியோவை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில்,
இது ஒரு பொன்மாலைப் பொழுது என நேற்றைய மாலை ராஜாவின் ராகங்களோடு கரைந்து போனாலும் - உள்ளத்தில் உறைந்து நிற்கிறது!
இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை! அவரைக் கொண்டாடுவது நம் கடமை! என கூறியுள்ளார்.






