என் மலர்tooltip icon

    சென்னை

    • அரசியல் என்றால் பொறுப்பை மறந்து கவர்ச்சி திட்டம் அறிவிப்பது என சிலர் கருதுகின்றனர்.
    • எளியோருக்கு செய்யும் எண்ணற்ற திட்டங்களை வாக்கு அரசியல் என்று கூற முடியுமா?

    பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், "அன்புக்கரங்கள்" திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

    அந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப்படிப்பு முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சாமானிய மக்களின் எழுச்சித்தான் திராவிட இயக்கம்.

    * அரசியல் என்பது மக்களுக்கான பணி, கடுமையான பணி. இங்கு சொகுசுக்கு இடமில்லை.

    * அரசியல் என்றால் பொறுப்பை மறந்து கவர்ச்சி திட்டம் அறிவிப்பது என சிலர் கருதுகின்றனர்.

    * கொரோனா தொற்று ஏற்பட்ட நெருக்கடியான சூழலில் நாம் ஆட்சி பொறுப்புக்கு வந்தோம்.

    * கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கினோம்.

    * அன்புக்கரங்கள் திட்ட நிகழ்வில் பேசிய குழந்தைகளின் சிரிப்புதான் அண்ணாவிற்கு நாங்கள் செய்யும் மரியாதை.

    * மக்களுடன் மக்களாக எப்போதும் இருப்பதால்தான் அனைவருக்குமான தேவைகளை செய்ய முடிகிறது.

    * எளியோருக்கு செய்யும் எண்ணற்ற திட்டங்களை வாக்கு அரசியல் என்று கூற முடியுமா?

    * காலை உணவுத்திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் எல்லாம் வாக்கு அரசியலா?

    * கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி கொடுத்தது வாக்கு அரசியலா?

    * அன்புக்கரங்கள் திட்டத்தில் 6,000 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், “அன்புக்கரங்கள்” திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
    • உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கினார்.

    சென்னை:

    ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது.

    மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் "தாயுமானவர்" திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், "அன்புக்கரங்கள்" திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

    அந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப்படிப்பு முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கினார். காணொலி வாயிலாகவும் மாவட்டங்களில் இதை தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இதில் பங்கேற்றார்.

    மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12-ம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைகளுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு இன்று காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, எழிலன், மேயர் பிரியா, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., கவிஞர் தமிழ்தாசன், பகுதி செயலாளர் அகஸ்டின் பாபு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    இதே போல் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    அந்த வகையில் கடந்த 9-ந்தேதி இதுவரை இல்லாத உச்சமாக சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து 10, 11-ந்தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் 12-ந்தேதி சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,920-க்கு என்று புதிய உச்சத்தில் விற்பனையானது. வார இறுதிநாளான 13-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,220-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 81,760-க்கும் விற்பனையானது. நேற்றும் இதே விலையில் விற்பனையானது.

    இந்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,210-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 81,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 143 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    14-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,760

    13-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,760

    12-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,920

    11-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    14-09-2025- ஒரு கிராம் ரூ.143

    13-09-2025- ஒரு கிராம் ரூ.143

    12-09-2025- ஒரு கிராம் ரூ.142

    11-09-2025- ஒரு கிராம் ரூ.140

    10-09-2025- ஒரு கிராம் ரூ.140

    • சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியவர்.
    • ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்.

    பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர்.

    இருமொழிக் கொள்கையைத் தமிழகத்திற்குத் தந்தவர்.

    தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றியவர்.

    சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டிருந்தவர்.

    சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியவர்.

    குடும்ப ஆதிக்கமற்ற அற்புத அரசியல் தலைவர்.

    கொள்கை வழி நின்றவர்.

    கனிவின் திருவுருவம்.

    இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல் அவர்களுக்காக உண்மையாக உழைத்தவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.

    தேர்தல் அரசியலில் அசாத்திய வியூகத்தை வகுத்து, மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்த பேரறிஞரின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம்.

    'மக்களிடம் செல்' என்ற அவரது அரசியல் மந்திரத்தைப் பின்பற்றி, 1967 தேர்தல் அரசியல் வெற்றி விளைவை, ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா!
    • அண்ணாவைப் பெயரில் மட்டும் அல்ல- கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக பெருமையோடு ஏந்தி நிற்கிறது அதிமுக

    பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா!

    அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம்!

    இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி

    ஆட்சி அமைக்க முடியுமா?

    நாட்டுக்குள் ஒரு தமிழ்-நாடா?

    என்று சந்தேக கேள்விகள் கேட்ட காலத்தில்

    தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல், நம் அண்ணா!

    அண்ணாவைப் பெயரில் மட்டும் அல்ல- கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக பெருமையோடு ஏந்தி நிற்கிறது அஇஅதிமுக

    குடும்பப் பின்புலமற்ற நம்மைப் போன்ற சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியலின் ஈடு இணையற்ற தலைமகனான பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று,

    குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டு, சாமானிய மக்களுக்கான #அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை #அஇஅதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம்.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்.

    அண்ணா நாமம் வாழ்க!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக புகார்.
    • டிஜிபி அலுவலக வாயிலில் நடந்த மோதல் சம்பவத்தில் ஏர்போர்ட் மூர்த்தி கைதானார்.

    புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

    இதனால் சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

    விசிகவினர் சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், புழல் சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • தமிழ்நாட்டு அரசியலை சாமானியன் பக்கம் திருப்பிவிட்ட 'கடமை',
    • பொதுவாழ்வில் கொள்கைப் பகைத்தவிர, தனிப்பகை கொள்ளாத 'கண்ணியம்',

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஜனநாயகப் பேரதிசயம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று!

    தமிழ்நாட்டு அரசியலை சாமானியன் பக்கம் திருப்பிவிட்ட 'கடமை',

    பொதுவாழ்வில் கொள்கைப் பகைத்தவிர, தனிப்பகை கொள்ளாத 'கண்ணியம்',

    எண்ணம் - பேச்சு - எழுத்து - செயல் அனைத்திலும் தமிழின முன்னேற்றம் ஒன்றே என்ற 'கட்டுப்பாடு',

    இவையே நம் அண்ணா!

    'தமிழ்நாடு' இருக்கும் வரை 'அண்ணா'வே நம்மை ஆள்கிறார்.

    அண்ணா- கலைஞர் வழியில் கழகத்தலைவர் @mkstalin தலைமையில் மீண்டும் கழக அரசை அமைத்திட இந்நாளில் உறுதியேற்போம்.

    வாழ்க அண்ணா!

    வெல்க திராவிட முன்னேற்றக் கழகம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2026-சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெல்வோம்
    • அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக இளைஞர்கள் திகழ வேண்டும்.

    துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னை தென்மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மயிலாப்பூர்- தியாகராய நகர் மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வட்ட, பாக திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டத்தில் இன்றைய தினம் பங்கேற்றோம்.

    கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல், அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக இளைஞர்கள் திகழ வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், அதற்கு இளைஞர் அணி ஆற்றிவரும் பணிகளை எடுத்துக்கூறியும் உரையாற்றினோம்.

    2026-சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!" என்று தெரிவித்துள்ளார்.

    'அரசியல் புரிதல் இல்லாமல் கூச்சல் எழுப்பும் கூட்டம்' என்று த.வெ.க. தொண்டர்களை தான் திமுகவினர் விமர்சனம் செய்து வரும் நிலையில் விஜயை உதயநிதி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

    • இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
    • நாம் நம்முடைய வேர்களையும் வரலாறையும் எப்போதும் மறக்கக் கூடாது என்றார்.

    சென்னை:

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீசாகிறது.

    இந்நிலையில், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

    பொதுவாக படத்திற்கு நாயகனின் பெயரை தான் டைட்டிலாக வைப்பார்கள். என்னுடைய சின்ன வயது அனுபவங்களை வைத்தும் நான் பார்த்த நிஜ மனிதர்களை வைத்தும் ஒரு படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்படி உருவானது தான் இட்லி கடை.

    என் சின்ன வயதில் நான் பூக்களைப் பறித்து அதில் கிடைக்கும் காசில் வாங்கி சாப்பிட்ட இட்லியின் ருசி இன்று நான் எவ்வளவு பெரிய ரெஸ்டாரண்டில் சாப்பிட்டாலும் கிடைக்கவில்லை.

    நாம் நம்முடைய வேர்களையும் வரலாறையும் எப்போதும் மறக்கக் கூடாது. இட்லி கடை படம் அதைப் பற்றிதான் பேசுகிறது. என்னை படங்களில் மட்டும் பார்த்து ரசியுங்கள். மற்ற நேரம் உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

    • எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதிகள் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

    எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தொடர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    இதற்கிடையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்திருப்பதால், எடப்பாடி பழனிசாமி வரும் 26-ம் தேதி வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த 5-ம் கட்ட சுற்றுப்பயணத்தில் 17, 18-ம் தேதி களில் தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 28, 29-ம் தேதிகளில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    அதன்படி, வரும் 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும், 29-ம் தேதி (திங்கட்கிழமை) பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தெரிவித்துள்ளது.

    • சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஆணை.
    • சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி 193 தமிழகக் காவல் அலுவலர்களுக்குப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

    193 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    ×