என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

22-ந்தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறுமா?: டெல்டா வெதர்மேன்
- தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து சற்று தொய்வு ஏற்பட்டாலும், கடந்த 3 நாட்களாக மீண்டும் பரவலாக பெய்யத் தொடங்கி உள்ளது. அதிலும் டெல்டா, தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் தொடர்ச்சியாக 22-ந்தேதி (நாளை மறுநாள்) இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 24-ந்தேதி (திங்கட்கிழமை) வரையிலான 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
இதனையடுத்து, மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24-ந்தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 22-ந்தேதி உருவாகக்கூடிய தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து புயலாக மாறுமா? அல்லது அந்தமான் கடல் பகுதியில் புதிதாக உருவாகி வரக்கூடிய தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா? என்பது 26-ந்தேதிக்கு பிறகு தான் சொல்ல முடியும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறினார்.






