என் மலர்tooltip icon

    சென்னை

    • 21-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னையிலும் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • அப்பாசாமி, சங்கர் நகர் மெயின் ரோடு, காந்தி மெயின் ரோடு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அடையாறு: வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகன் நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி ரோடு, ராஜலட்சுமி நகர், வி.ஜி.பி., தெரு, காந்திஅம்மாபுரம் செல்வா நகர், சீத்தாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி மற்றும் பேபி நகர்.

    செம்பியம்: எம்.எச்.ரோடு, கொல்லம் தோட்டம், செயின்ட் மேரீஸ் சாலை, சொக்கலிங்கம் தெரு, சின்ன குளந்தை 1 முதல் 4வது தெரு, எஸ்எஸ்வி கோவில் 1 முதல் 3வது தெரு, என்எஸ்கே தெரு, மதியழகன் தெரு, சீதாராமன் நகர் 1 முதல் 6வது தெரு, நரசிம்மரெட்டி நகர், 1 முதல் 4வது தெரு, பள்ளி உயர் சாலை, மணலி.

    பம்மல்: கிழக்கு மெயின் ரோடு, அப்பாசாமி, சங்கர் நகர் மெயின் ரோடு, காந்தி மெயின் ரோடு, சங்கர் நகர் 2வது குறுக்குத் தெரு, சங்கர் நகர் 17வது முதல் 27வது தெரு, பிள்ளையார் கோவில் தெரு, மற்றும் திருநீர்மலை மெயின் ரோடு.

    தரமணி: காமராஜ் அவென்யூ 1வது, 2வது தெரு மற்றும் 3வது குறுக்குத் தெரு, கஸ்தூரிபாய் நகர், கால்வாய் வங்கி சாலை, ஜஸ்டிஸ் ராமசாமி தெரு, வெங்கடரத்தினம் நகர் மெயின் ரோடு, டீச்சர்ஸ் காலனி, 4வது முதல் 8வது மெயின் ரோடு, 6வது முதல் 15வது குறுக்குத் தெரு மற்றும் இந்திரா நகர்.

    • வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
    • வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டின் அனேக இடங்களில் வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சென்னை மட்டுமில்லாமல் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.

    • அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
    • அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் விலாசம் இல்லாமல் தொலைந்து விடுவார்கள்.

    சென்னை வடபழனியில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்பு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்று பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.

    மாநிலத்திற்கு 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கொண்டு வந்து அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது.

    திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் 67 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு சிறந்த உயர்கல்வி வழங்கப்பட்டது.

    அதிமுக ஆட்சியில் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் தான் உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது.

    சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, டிஜிபி அலுவலகம் முன் ஒருவர் தாக்கப்படுகிறார். அவர் மீதே வழக்கு தொடரப்படுகிறது.

    திமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அவர்களும் தாக்கப்படுகிறார்கள்.

    முன்னாள் டிஜிபி போதைப்பொருள் ஒழிப்பதற்கு 2.0, 3.0 என பெயர் வைத்துவிட்டு கடைசியில் ஓ போட்டு சென்றுவிட்டார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார் என்பது கண்டுபிடிக்கப்படும்.

    திமுக ஆட்சி அமைந்த உடன் முறையாக விசாரித்து டாஸ்மாக் ஊழல் முழுமையாக வெளிக்கொண்டு வரப்படும்.

    டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என செய்திகள் வந்துள்ளது. ஆனால், ரூ.40,000 கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது.

    அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சிறப்பான திட்டங்களை திமுக அரசு கைவிட்டு விட்டார்கள். தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், அம்மா உணவு போன்ற திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது.

    அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு நிறுத்திய திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.

    அதிமுக ஆட்சியில் ரூ.60,000 கோடி முதலீடுகளை ஈர்த்தோம். மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்றாரா? அல்லது தொழில் தொடங்க சென்றாரா? என வரும் காலங்களில் தெரியும்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிலர் கட்சியை கபளீகரம் செய்ய பார்த்தார்கள். அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜகதான்; அந்த நன்றியை மறக்காமல், நன்றியோடு இருக்கிறோம்.

    ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். அதிமுகவை இம்மியளவு கூட யாராலும் அழிக்க முடியாது.

    கட்சி அலுவலகத்தை உடைத்தவர்கள் மற்றும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களை மீண்டும் கட்சியில் எப்படி சேர்க்க முடியும்?

    அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் நடு ரோட்டில் தான் நிற்பார்கள். அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் விலாசம் இல்லாமல் தொலைந்து விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு.
    • தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்த முயற்சி மேற்கொண்ட சட்டக்குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

    வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வக்பு சட்டத்திருத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நீதிக்கு கிடைத்த வெற்றி என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    வக்பு வழக்கில் தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்த முயற்சி மேற்கொண்ட சட்டக்குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

    உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நீதி, அரசியலமைப்பு மதிப்புகள், அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு கிடைத்த மகத்தான வெற்றி.

    நீதி சமத்துவம், மத சுதந்திரத்தை கடுமையாக குறைக்கும் விதிகளை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பம் டெல்லி பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
    • டெல்லி மேலிடத்துக்கு தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் வருகிற சட்டசபை தேர்தலை வெற்றிகரமாக சந்திக்கவும் தி.மு.க.வுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்கவும் அ.தி.மு.க.வுடன் அமித்ஷா கூட்டணியை உருவாக்கினார்.

    கூட்டணியை பலப்படுத்த அ.தி.மு.க.-பாஜக கூட்டணியை உருவாக்கிய அமித்ஷா இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைத்து பலப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

    இதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கம் இந்த கூட்டணி பலவீனமாகும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றி ருந்த டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் வெளியேறினார்கள்.

    இதற்கிடையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி.

    தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்.

    அதற்காக கெடுவும் விதித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க மாட்டோம் என்று டி.டி.வி.தினகரனும் அறிவித்தார்.

    இந்தநிலையில் கட்சி தலைமைக்கு கெடுவிதித்த செங்கோட்டையனின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். கூட்டணிக்குள் ஏற்பட்ட இந்த குழப்பம் டெல்லி பா.ஜனதா தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

    ஏற்கனவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க. தோற்றதற்கு டி.டி.வி.தினகரன் கட்சி பிரித்த வாக்குகள் முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் தென்மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு இல்லாததாலும் கணிசமான வாக்குகளை அ.தி.மு.க. இழந்தது.

    நாளை டெல்லி பயணம் எனவே சசிகலாவை இணைக்காவிட்டாலும் பரவாயில்லை. டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் இணைவதே பலமாகும் என்று தமிழக பா.ஜனதா நிர்வாகிகளும் டெல்லி மேலிடத்துக்கு தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.

    இந்த சூழ்நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார். அப்போது கூட்டணியில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    எடப்பாடி ஏற்பாரா?

    இணைப்பு முயற்சியை மேற்கொண்டாலும் டி.டி.வி.தினகரன் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க மறுப்பது அந்த முயற் சிக்கு கூடுதல் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

    எனவே ஒருங்கிணைக்கும் முயற்சியில் சில ஆலோ சனைகளை அமித்ஷா வழங்குவார் என்று கூறப் படுகிறது. ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி ஏற்பது சந்தேகமே என்கி றார்கள் கட்சியினர்.

    துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு நாளை காலை 11 மணிக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அப்போது அவர் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறுகிறார்.

    அதன் பிறகு டெல்லியில் தங்கி இருக்கும் எடப்பாடி பழனிசாமி மாலையில் சென்னை திரும்பும் வகை யில் பயண திட்டம் வகுக் கப்பட்டுள்ளது. டெல்லியில் இருக்கும் இந்த நேரத்தில் கூட்டணி தலைவர் என்ற முறையில் அமித்ஷாவை அவர் சந்திக்கிறார்.

    கூட்டணியை உடைக்க முயற்சி.

    இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    துணை ஜனாதிபதி தேர்த லில் எங்களிடம் 5 ஓட்டுகள் இருந்தன. அதற்காக ஆதரவு திரட்ட சி.பி.ராதாகிருஷ் ணன் சென்னை வர இயல வில்லை. எனவே தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மரி யாதை நிமித்தமாக அவரை சந்தித்து வாழ்த்து தெரி விப்பதே இந்த பயணத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

    ஆனால் டெல்லியில் இருக்கும் போது கூட்டணி தலைவர் என்ற ரீதியில் அமித்ஷாவையும் சந்தித்து பேச வாய்ப்பு இருக்கிறது. இந்த கூட்டணியை உடைக்க பல்வேறு வழிகளில் முயல்கி றார்கள். அதில் ஒரு முயற்சி தான் செங்கோட்டையன் விவகாரமும்.

    டி.டி.வி.தினகரன் எடப் பாடி பழனிசாமி தலை மையை ஏற்க போவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார். அப்படி இருக்கும்போது அமித்ஷா எந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியிடம் இணைப்பு பற்றி பேச முடியும்?.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.
    • சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது.

    வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ தள பதிவில்,

    தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்து மாண்பமை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    1) வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை

    2) வக்பு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை

    3) 'வக்பு பயனர்' என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளாகக் கருதப்படும் சொத்து)

    4) மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும்.

    ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.

    இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசு வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் திர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் மாண்பமை உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு காலத்திலும் அ.தி.மு.க.வின் ஓட்டு விஜய்க்கு போகாது.
    • உதயநிதியை மை டியர் குட்டி சாத்தான் என்று சொல்லி இருக்கலாம்.

    சென்னை:

    அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செங்கோட்டையன் மறப்போம் மன்னிப்போம் என்று பேசி உள்ளார். அது குறித்து பொதுச்செயலாளர்தான் முடிவு செய்ய வேண்டும். அண்ணா, எம்.ஜி.ஆர். மறுக்க முடியாத மாபெரும் சக்திகள். விஜய் எம்.ஜி.ஆரின் படத்தை பயன்படுத்தியது வரவேற்கும் விசயம்தான்.

    அண்ணா படத்தையோ எம்.ஜி.ஆர். படத்தையோ பயன்படுத்துவதால் அ.தி.மு.க.வின் ஓட்டுகள் அவருக்கு போகாது. ஒரு காலத்திலும் அ.தி.மு.க.வின் ஓட்டு விஜய்க்கு போகாது. விஜய்க்கு ஏமாற்றம்தான் கிடைக்கும்.

    விஜய் ஸ்டாலினை அங்கிள் என்றார்... சி.எம். சார் என்றார்... என்னை கேட்டு இருந்தால் நானே சொல்லி இருப்பேன். சி.எம். ஸ்டாலின் சார் என்று சொல்லாமல்.. சி.எம். சாத்தான் சார் என்று சொல்லி இருக்கலாம். உதயநிதியை மை டியர் குட்டி சாத்தான் என்று சொல்லி இருக்கலாம்.

    அமைச்சர் நேரு மழைக்காலத்திற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்தாமல் கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில்தான் கவனம் செலுத்துகிறார். இந்த சாத்தான் ஆட்சியில் லஞ்சம், ஊழல், கட்டபஞ்சாயத்து தான் நடக்கிறது.

    எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் ஸ்டைலை பின்பற்றுவதால் எங்கள் கட்சி ஓட்டு விஜய்க்கு போகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழ்நாட்டில் இன்று முதல் 19-ந்தேதி வரை 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * தமிழகத்தில் வரும் 16-ந்தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * தமிழகத்தில் வரும் 17-ந்தேதி 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * தமிழகத்தில் வரும் 18-ந்தேதி 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * தமிழகத்தில் வரும் 19-ந்தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பி.எட். மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணைய தள விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
    • 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன.

    சென்னை:

    உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி 20.6.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26-ம் ஆண்டிற்கான பி.எட். மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணைய தள விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 காலியிடங்கள் மற்றும் 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன.

    இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து பயில ஏதுவாக இணையதள விண்ணப்பப்பதிவு வசதி இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாணவர்கள் சேர்க்கைக்கான கூடுதல் விவரங்களை www.lwiase.ac.in என்ற இணையதள வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

    அதே போல், எம்.எட். பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்ந்து பயில ஏதுவாக மாணவர்கள் சேர்க்கை கான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி வருகிற 30-ந்தேதி வரை செயல்படும். விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பா.ம.க. தலைமை அலுவலகமாக சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
    • தேர்தல் ஆணையத்தின் கடிதம் மூலமாக சமீபகாலங்களில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

    சென்னை தி.நகரில் உள்ள பா.ம.க. அலுவலகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

    * ஆக.9-ந்தேதி மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

    * இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பா.ம.க. தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளது.

    * 2026 வரை பா.ம.க. தலைவராக அன்புமணி நீடிப்பார் என்ற தீர்மானத்தை ஏற்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

    * பா.ம.க. நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

    * பா.ம.க. தலைமை அலுவலகமாக சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

    * தேர்தல் ஆணையத்தின் கடிதம் மூலமாக சமீபகாலங்களில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

    * அன்புமணிதான் பா.ம.க. தலைவர், அவருக்கே மாம்பழம் சின்னம் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

    * பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, நிறுவனர் ராமதாஸ் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

    * பா.ம.க. அன்புமணி தலைமையில் உள்ள இயக்கம் தான் என அவர் திட்டவட்டமாக கூறினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வழக்கறிஞர் பாலுவின் அறிவிப்பை தொடர்ந்து பா.ம.க.வினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பா.ம.க.வினர் கொண்டாடினர்.

    ராமதாசின் நோக்கத்தை நோக்கி தான் நாங்கள் பயணிக்கிறோம். அனைவரும் அன்புமணி தலைமையிலான பா.ம.க.விற்கு வாருங்கள் என ராமதாஸ் அணியில் உள்ளவர்களுக்கு பாலு அழைப்பு விடுத்துள்ளார்

    • அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆரின் நோக்கம் நிறைவேறும்.
    • பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் என்னுடன் பேசினார். நேரம் கிடைத்தால் சந்திப்பேன்.

    சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

    * அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆரின் நோக்கம் நிறைவேறும்.

    * செங்கோட்டையனும் நானும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம்.

    * தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் என்னுடன் பேசினார். நேரம் கிடைத்தால் சந்திப்பேன்.

    * அ.தி.மு.க. சட்டவிதிகளை காற்றில் பறக்க விட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

    ×