என் மலர்
சென்னை
- தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
- சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.
நாடு முழுவதும் தீபாவளி கொண்ட்டாட்டம் களைகட்டியுள்ளது. புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுவரும் மக்கள், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.
இதனையடுத்து தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
- தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளி விலையும் தொடர்ந்து வருகிறது.
- விளைவில் 1 சவரன் தங்கம் விலை லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து எகிறி வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சம் என்ற பாணியிலேயே தங்கம் விலை இருக்கிறது. தங்கம் விலை ஒவ்வொருவருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒரு பொருளாகவே மாறிவிட்டது. ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என இருந்த தங்கம் விலை தற்போது ரூ.97 ஆயிரத்தையும் கடந்து பயணிக்கிறது. அதிலும் இம்மாதத்தில் மட்டும் விலை கிடுகிடுவென உயர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம் சென்று இருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது.
அந்த வகையில் நேற்று காலையில் குறைந்த தங்கம் விலை மாலை உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்திற்கும் , ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தீபாவளியை பண்டிகையான இன்று தங்கம் விலை இன்றும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,920-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.95,360-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்துக்குப் போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று மாற்றமின்றி தொடர்கிறது. அதாவது ஒரு கிராம் வெள்ளி 190 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
18-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000
17-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 97,600
16-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 95,200
15-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,880
14-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-10-2025- ஒரு கிராம் ரூ.190
17-10-2025- ஒரு கிராம் ரூ.203
16-10-2025- ஒரு கிராம் ரூ.206
15-10-2025- ஒரு கிராம் ரூ.207
14-10-2025- ஒரு கிராம் ரூ.206
- தீபாவளி முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பாதவது:-
இருள் இன்றுடன் விலகட்டும்,
மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும்!
இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
- எடப்பாடி பழனிசாமி கூறுவது தவறான செய்தி என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், கோவை, நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விருதுநகர், தேனியில் அதிக அளவு மழை பெய்துள்ளது.
புயலுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், எந்தளவு மழை பெய்தாலும் பாதிப்புகளை தவிர்க்க தயாராக உள்ளோம்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை அதிகளவில் பெய்த மாவட்டங்களில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் சொல்வது தவறான செய்தி.
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
- வரும் 24-ந்தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவாவதாக தகவல்.
தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது.
அடுத்த 10 நாட்களுக்குள் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வருகிற 24-ந்தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே தீபாவளிக்கு மறுநாள் உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், கோவை, நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
- தமிழ்நாட்டில் மின்துறை சார்பாக சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
- மின்மாற்றிகள் உள்ளிட்ட பொருட்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்துள்ளோம்.
கனமழை தொடரும் நிலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மின்சார தேவை மற்றும் உற்பபத்தி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் மின்துறை சார்பாக சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
மின்மாற்றிகள் உள்ளிட்ட பொருட்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நெல்மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யக்கூட வக்கற்ற அரசாக திமுக அரசு திகழ்கிறது.
- மத்திய அரசிடமிருந்து ஆணை பெற்றும் நெல்மணிகளை கொள்முதல் செய்தோம்.
நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடும் ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அதர்மத்தை அழித்து தர்மத்தின் வெற்றியைக் குறிக்கும் தீபாவளி பண்டிகையை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இந்த விடியா திமுக அரசின் மோசமான நிர்வாகத்தினால், நம் தமிழக விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளியாக மாறியிருக்கிறது.
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த விவசாயிகள் பார்த்துப் பார்த்து விளைவித்த நெய்மணிகள் எல்லாம் தற்போது பெய்து வரும் மழையில் முளைத்து விவசாயிகள் கண் முன்னே வீணாகிறது. நெல் கொள்முதலில் ஃபெயிலர் மாடன் திமுக அரசின் குளறுபடியால், நெல்மணிகள் மழையில் நனைந்து முயையிட்டுள்ளன.
கூட்டுறவு சங்கத்தில் கடன் வளங்குவதில் சிக்கல், உரத் தட்டுப்பாடு, காலநிலை மாற்றத்தால் காலம் தவறிப் பெய்யும் மழை என்று பல்வேறு சவால்களைக் கடந்து விவசாயிகள் நெல்மணிகளை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால், அந்த நெல்மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யக்கூட வக்கற்ற அரசாக திமுக அரசு திகழ்கிறது.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 800 மூட்டையாக இருந்த நெல் கொள்முதல், அஇஅதிமுக ஆட்சியில் 1000 மூட்டையாக அதிகரித்தும்; 17 சதவீதம் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி, மத்திய அரசிடமிருந்து ஆணை பெற்றும் நெல்மணிகளை கொள்முதல் செய்தோம்.
ஆனால், ஸ்டாலின் மாடல் ஆட்சியில் நாளொன்றுக்கு 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும், நெல்லைப் பிடிக்க போதுமான சாக்குப் பைகள் இல்லை
என்றும், நெல்லைப் பாதுகாக்க தார்ப்பாய்கள் இல்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுவதோடு ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும், நெல் கொள்முதவை 1000 மூட்டைகளாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையடுத்து பருவமழைக்கு முன்னதாகயே விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று. அஇஅதிமுக சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுத்தோம். அதையெல்லாம் திமுக அரசு காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.
இதனால், கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை நெல்மணிகளை கொட்டிவைத்து விடியலுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள் விவசாயிகள் நெல் மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாப்பதற்குக் தேவையான தார்ப்பாய்களைக்கூட விடியா திமுக அரசு கொடுக்கவில்லை.
எனவே, மழையில் நனைந்து நெல்மணிகள் வீனாகும் கொடுமையையும், விவசாயிகளின் கண்ணீரையும் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் நோலையாகக் காட்டிய பிறகும், இந்த நீயசக்தி திமுக அரசுக்கு இரக்கம் பிறக்கவில்லை.
சட்டமன்றத்தில் இது தொடர்பாக நாள் இரண்டு நாட்களுக்கு முன்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, "தமிழ் நாட்டில் 25 இடங்களில் திறந்த வெளி சேமிப்புக் கிடங்குகள் நிறக்கப்பட்டுள்ளன.
தற்போது, ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. என்று சமாளிக்கிறாரே தவிர, முழுமையாக நெல்மணிகள் கொள்முதல் செய்வதற்கும், உரிய முறையில் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், இப்போதே 22 சதவீத ஈரப்பத நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்கலாமா என்று அமைச்சர் கேட்பது அவரது அறியாமையைக் காட்டுகிறது. ஏனென்றால் இப்போதே பருவ மழை தொடங்கி அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் ரோட்டில் கிடக்கிறது. அறுவடைக்குத் தயாரான நெல்பணிகள், தண்ணீரில் மிதக்கின்றன. எனவே, இனியும் காலம் தாழ்த்துவதில் அர்த்தமே இல்லை.
மேலும், "செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஒன்றிய அரசிடம் அறுமதி பெற்றுத் தந்தால் நெய் தேங்கும் நிலை ஏற்படாது. அரிசி பதுக்கல் இருக்காது.." என்று உண்மைக்கு மாறாக மத்திய அரசு மீது பழி சுமத்தியிருக்கிறார். உண்மை என்னவென்றால் கடந்த ஆகஸ்ட் 18 அன்றே மத்திய அரசு இதற்கான அனுமதி வழங்கியிட்டது.
இதை மறைத்து, மத்திய அரசு மீது குற்றம் சாட்டி விவசாயிகளையும் மக்களையும் ஏமாற்றுகிறது இந்த விடியா அரசு தமிழகத்தில் நெல் விளைச்சல் இந்த ஆண்டு அதிகம் என்று சட்டமன்றத்தில் பேசிய அமைச்சருக்கு, அதுபற்றி முன்பே தெரியாதா? விவசாயம் பற்றியும், ஒவ்வொரு பருவத்திலும் எந்த அளவுக்கு விளைச்சல் இருக்கும். இந்த ஆண்டு எய்யளவு அதிகம் விளையும் என்பதைக்கூட கணிக்கமுடியாத ஒருவர், அமைச்சராக இருப்பதற்குத் நகுதி இருக்கிறதா.?
நெல் விளைச்சல் அதிகம் என்றால் அதற்கு எற்ப முன்கூட்டியே கொள்முதல் தொடங்கியிருக்க வேண்டாமா.? தேவையான அளவு கிடங்குகளை தயார் செய்திருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் மழையில் நளையாமல் பாதுகாப்பதற்கு தார்ப்பாய் போன்ற அடிப்படை வசதிகளையாவது செய்து கொடுத்திருக்க வேண்டாமா?
இவை எதையும் செய்யாமல், போட்டோஷூட் நடத்துவதற்கும், புதுப்புது பெயர் சூட்டுவதற்கும் மெனக்கெடுவதால் மட்டும் விவசாயிகளின் துயரம் தீர்ந்துவிடுமா?
பருவ மழை தீவிரமாகியிருப்பதாய் விவசாயிகளின் துன்பம் இரட்டிப்பாகிவிட்டது. டெல்டா மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள்.
டெல்டா மாவட்டத்தில் மட்டும் பல ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்குத் தயார இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து மீணாகிப் போவதுடன் சுமார் 30 லட்சம் மூட்டை நெல்மணிகள் கொள்முதல் செய்யாமல் சாலையில் குவித்து வைத்து மழையில் நனைந்து மீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் முழு நஷ்டம் அடைந்திருக்கிறார்கள்.
நாகையில் தொடர் மழை காரணமாக அரசு நோடி நெய் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் வீணாகி வருகிறது. இதைக் கண்டு விவசாயிகள் தமிழகம் முழுக்க சாலை மறியல், பஸ் மறியல் செய்யும் காட்சிகளை எல்லாம் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது.
மதுரை மாவட்டத்தில் 41 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கடந்த செப்டம்பர் பாதமே திறப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டும், இதுவரை ஒரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தைக் கூட திறக்கவில்லை.
பருவ மழைக்கு முன்பாக தப்பித்துவிடலாம். தீபாவளி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடலாம் என்று ஆசையோடு காத்திருந்த விவசாயிகள், இப்போது போட்ட முதல் பணத்தைக் கூட எடுக்க முடியாமல் கண்ணீர் சிந்துகிறார்கள். நங்கள் ாழ்க்கையிலே இதுதான் இருண்ட தீபாவளி என்று விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை மட்டும் 7.968 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் NCRB) தெரிவிக்கிறது. தமிழக அரசின் நிர்வாகக் குளறுபடியால் இந்த எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்கும் அபாயம் தென்படுகிறது.
எனவே, அதிக எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் நிறப்பதோடு, அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் செய்ததைப் போன்று தினமும் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவாயிகள் கொண்டு வரும் நெல்லை மழையில் இருந்து பாதுகாக்கத் தேவையான தார்ப்பாய்களை வழங்கிட வேண்டும் என்றும். விடியா தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.
விடியா திமுக அரசு, விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் செய்யாததால் விவசாயிகளிடத்தில் மிகப் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, மாபெரும் போராட்டத்தை இந்த அரசு சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று மாச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.
- இறுதி ஆட்டம் "பேக்கர் வடிவத்தில் (Baker Format)" நடைபெற்றது
DAVe BABA VIDYALAYA தமிழ் நாடு ஓபன் ட்ரையோஸ் டென்பின் பவுலிங் தொடர் 2025 போட்டியில், டெல்லிஷார்க்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த போட்டி லெட்ஸ் பவுல், தோரைய்ப்பாக்கம், சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம் (TNTBA) இந்திய டென்பின் பவுலிங் கூட்டமைப்பின் (Tenpin Bowling Federation of India) ஆதரவுடன் ஏற்பாடுசெய்தது.
இறுதி ஆட்டம் "பேக்கர் வடிவத்தில் (Baker Format)" நடைபெற்றது, இது இரண்டு ஆட்டங்களின் மொத்த பின்ஃபால் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது. டெல்லி ஷார்க்ஸ் அணியின் வீரர்கள் — த்ருவ் சார்தா, பள்குனாரெட்டி மற்றும் சுனில் சர்மா — ஸ்ட்ரைக் சிண்டிகேட்சென்னை (சோபன் டி., கணேஷ் என்.டி., குருநாதன்) அணியை வெறும் 12 பின்களால் (375–363) வென்று பட்டம் வென்றனர்.
முதல் ஆட்டத்தின் முடிவில், டெல்லி ஷார்க்ஸ் அணி 3 பின்களால் (170–173) பின்தங்கியிருந்தது. ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் அவர்கள் 205 பின்கள் விழ்த்திதிடீர் திரும்புபாடு கண்டனர். கடைசி ஃப்ரேமில் கணேஷ்என்.டி. ஸ்ட்ரைக் அடிக்க தவறியதால், டெல்லி ஷார்க்ஸ் அணி வெற்றியை உறுதி செய்தது!
அரையிறுதி 1: ஸ்ட்ரைக் சிண்டிகேட் சென்னை, டிரிபிள் த்ரெட் சென்னை(தீபக் கோத்தாரி, பார்த்திபன், ஆனந்த் ராகவ்) அணியை403–369 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
அரையிறுதி 2: டெல்லி ஷார்க்ஸ் அணி, சென்னை தண்டர் ஸ்ட்ரைக்கர்ஸ் (ஆனந்த் பாபு, சபீனா அதிகா, அபிஷேக் டி.) அணியை 364–357 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டிரிபிள் த்ரெட் சென்னை அணி மொத்தமாக மூன்றாம்இடத்தை பெற்றது. இந்த நான்கு நாள் போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.
சென்னை தண்டர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 4 ஆட்டங்களைக்கொண்ட 3 பிளாக்குகளில் அதிக சராசரியை பெற்றதற்காக சிறப்பு பரிசை வென்றது.
- கணவன் மற்றும் 2 மகன்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
- கணவன் மற்றும் மகன்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார். மேலும், கணவன் மற்றும் 2 மகன்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
ஐடி ஊழியராக சிவச்சந்திரன், மனைவி திவ்யா (33), மகன்கள் தர்ஷித் (8), தர்ஷன் (2) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது ஆம்னி பேருந்து மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில், திவ்யா பலியான நிலையில் படுகாயமடைந்த சிவச்சந்திரன், தர்ஷித், தர்ஷன் ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தை தொடர்ந்து, சென்னை அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் நாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- தமிழகம், புதுவை, காரைக்காலில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
சென்னையில், வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது.
அரபி கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலாகும். குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகம், புதுவை, காரைக்காலில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. வரும் 21ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. தமிழக கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது.
- அடுத்த 10 நாட்களுக்குள் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு.
தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது.
அடுத்த 10 நாட்களுக்குள் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வருகிற 24-ந்தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே தீபாவளிக்கு மறுநாள் உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அக்.23ம் தேதி சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வரும் 23-ந்தேதி சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
- விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
- விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
சென்னையில் இருந்து பெங்களூருக்கு இன்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
104 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 109 பேர் இருந்தனர். ஓடு பாதையில் ஓடத் தொடங்கியபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் எந்திர கோளாறை சரிசெய்ததும் பின்னர் மதியம் 12 மணிக்கு விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.






