என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலுநாச்சியார்"

    • இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று.
    • 1857 சிப்பாய் கலகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு எனத் தம் நெஞ்சில் பதிய வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறி இருப்பதாவது:-

    பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று.

    வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைபலத்தை எதிர்த்து, உயிரைவிடத் தன்மானமே பெரிதெனத் தமிழரின் பண்பைப் பறைசாற்றிய இவ்விருவரின் வீரத்தை இந்தியர் அனைவரும் அறிய வேண்டும். 1857 சிப்பாய்க் கலகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு எனத் தம் நெஞ்சில் பதிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இயக்குனர் ஆர். அரவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'வீரமங்கை வேலுநாச்சியார்' .
    • இந்த படத்தை டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ.எம்.பஷீர் தயாரிக்கிறார்.

    இயக்குனர் ஆர். அரவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'வீரமங்கை வேலுநாச்சியார்' . இந்த படத்தில் வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா. டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ.எம்.பஷீர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

    'வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், 'தேசிய தலைவர்' திரைப்படத்தில் பசுகம்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்திருப்பவருமான ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இவரது மகள் தான் ஆயிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

    'வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான ஜெ.எம்.பஷீர், "வேலு நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டு வருவதில் மிகவும் பெருமை அடைகிறோம். இதில் முதன்மை வேடத்தில் எனது மகள் ஆயிஷா நடிப்பது பெரும் மகிழ்ச்சி," என்றார்.


    ஆயிஷா

    மேலும், நமது நாட்டுக்காகவும், தேச விடுதலைக்காகவும் தன்னலம் இன்றி போராடிய மாபெரும் ஆளுமைகள் குறித்து இன்றைய இளைய சமுதாயம் அறிவது அவசியம் என்றும் இதன் காரணமாகவே 'தேசிய தலைவர்' மற்றும் 'வீரமங்கை வேலுநாச்சியார்' உள்ளிட்ட திரைப்படங்களை தான் தயாரித்து வருவதாகவும் பஷீர் தெரிவித்தார்.

    'தேசிய தலைவர்' திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் அதை தொடர்ந்து 'வீர மங்கை வேலு நாச்சியார்' படப்பிடிப்பு தொடங்கும் என்று பஷீர் கூறினார். வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    'வீர மங்கை வேலு நாச்சியார்' திரைப்படத்திற்கு ஜெ ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சண்டைக் காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் வடிவமைக்கிறார். பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைய உள்ளனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஜெ எம் பஷீர் கூறினார்.

    • அவரது நினைவிடத்தில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது.
    • த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் 228வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது.

    ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு விஜய் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். இது குறித்து த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர், இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி, அனைத்துச் சமூகத்தினரோடும் நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி, எம் கழகத்தின் கொள்கைத் தலைவர், வீரமங்கை, ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • எங்களை நத்திப் பிழைக்க வந்த நீங்கள்தான் எங்களின் தாய் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும்
    • விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தவர்

    "எங்களை நத்திப் பிழைக்க வந்த நீங்கள்தான் எங்களின் தாய் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, நாங்கள் உங்கள் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று ஆங்கிலேயர்களிடம் கர்ஜித்த வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த தினம் இன்று [ஜனவரி 3]

    ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடியவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் [1730 -1796]

    இன்று அவரின் 295 வது பிறந்த தினத்தை ஒட்டி தலைவர்கள் பலர் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    துணிச்சலான ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்! காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அவர் ஒரு வீரப் போராட்டத்தை நடத்தினார், இணையற்ற வீரத்தையும், போர்தந்திர திறமையையும் வெளிப்படுத்தினார்.

    ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சுதந்திரத்திற்காகவும் போராடப் பல தலைமுறைகளை அவர் ஊக்குவித்தார். பெண்களுக்கு அதிகாரமளித்தலிலும் அவரது பங்கு பரவலாகப் பாராட்டப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். 

    ×