search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை-தேங்காய் பருப்பு ஏலம்
    X

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை-தேங்காய் பருப்பு ஏலம்

    • விற்பனைக்கூடத்தில் ரூ.1.50 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கட்கிழமை நடைபெற்றது.
    • ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.48 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்புகள் திங்கட்கிழமை ஏலம் போனது.

    ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 2 விவசாயிகள் 14 மூட்டைகள் (717கிலோ) தேங்காய் பருப்பினை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.76.10க்கும், குறைந்தபட்சமாக ரூ.57.65க்கும், சராசரியாக ரூ.68.25க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.48 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.50 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கட்கிழமை நடைபெற்றது.

    ஏலத்துக்கு 44 நிலக்கடலை மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. முதல்ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.8,000 முதல் ரூ.8,300 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.7,500 முதல் ரூ.7,800 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,100 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.50 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    Next Story
    ×