search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி இருதய ஆண்டவர் பேராலயத்தில்   திருபலி தேர் பவனி
    X

    இருதய ஆண்டவர் பேராலயத்தில் திருப்பலி தேர் பவனி வந்த போது எடுத்தபடம்.

    தருமபுரி இருதய ஆண்டவர் பேராலயத்தில் திருபலி தேர் பவனி

    • இந்த விழாவை ஆயர் லாரன்ஸ் பயாஸ் தொடங்கி வைத்தார்.
    • கிறிஸ்துவ மக்கள் திரு இருதய ஆண்டவர் தேர் பவனியில் பங்கு பெற்று திருப்பலி பாடல்களை இசைத்தவாறு சென்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி திருப்பத்தூர் சாலையில் உள்ள இருதய ஆண்டவர் பேராலயத்தில் திரு இருதய ஆண்டவர் திருப்பலி தேர் பவனி நேற்று மாலை நடந்தது.

    இந்த விழாவை ஆயர் லாரன்ஸ் பயாஸ் தொடங்கி வைத்தார்.

    இதில் பங்கு தந்தை அருள்ராஜ், உதவி பங்கு தந்தை லிபின் பாக்கியம், இயேசுராஜ், கோவிலூர் திருப்பணியாளர்கள் கிறிஸ்துராஜ், மதலை முத்து, இருதயராஜ் மரிய அந்தோணி, போஸ்கோ மதலை முத்து, அற்புதராஜ், அருள் அனந்தபிறபு, மற்றும் குருக்கள், கன்னியர்கள், மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்துவ மக்கள் திரு இருதய ஆண்டவர் தேர் பவனியில் பங்கு பெற்று திருப்பலி பாடல்களை இசைத்தவாறு சென்றனர்.

    தேர்பவனி திருப்பத்தூர் சாலை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து பெரியார் மன்றம் வழியாக, எஸ்.வி. ரோடு, நகராட்சி அலுவலகம், எல்ஐ.சி, நர்சாங்குளம் முகமது அலி கிளப் ரோடு, வழியாகச் சென்று இருதிய ஆண்டவர் கோவிலை சென்றடைந்தனர்.

    Next Story
    ×