search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி
    X

    மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி

    • செயினை பறிக்க விடாமல் எழிலரசி போராடினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரைச் சேர்ந்தவர் எழிலரசி. இவர் இன்று காலை வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு மணப்பாறை பட்டி சாலை வழியாக தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    உதயம் தியேட்டர் அருகே செல்லும்போது இவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென இவரது கழுத்தில் அணிந்து இருந்த ஏழு சவரன் தாலி செயினை பறிக்க முயன்றார். செயினை பறிக்க விடாமல் எழிலரசி போராடினார்.

    செயினை அறுக்க முடியாத நிலையில் அவரை கீழே தள்ளிவிட்ட வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். அப்போது அப்பகுதியில் கடை வைத்துள்ள குமரேசன் என்பவர் மர்ம நபரை ஓடிச்சென்று பிடித்தார். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் மர்ம நபரை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    மக்கள் அவனிடம் விசாரித்த போது காரைக்குடி என மட்டும் கூறி பெயர் உள்ளிட்ட மற்ற விபரங்களை கூறவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதி பொதுமக்கள் வாலிபருக்கு தர்மஅடி கொடுத்தனர்.

    இதுகுறித்து மணப்பாறை காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மர்ம நபரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் கை மற்றும் கழுத்தில் காயம் அடைந்த எழிலரசி மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். காலை நேரத்தில் கோவிலுக்கு சென்று விட்டு வந்த பெண்ணிடம் வாலிபர் செயின் பறிப்பில் ஈடுபட முயன்று பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×