search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    திண்டிவனத்தில் கியாஸ்-பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    திண்டிவனம் தபால் நிலையம் அருகே விசிக, சி.பி.ஐ. (எம்), சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இணைந்து பெட்ரோல், டீசல், கியாஸ் விலைவாசி உயர்வு, வேலையின்மை, வெறுப்பு அரசியலுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    திண்டிவனம்:

    திண்டிவனம் தபால் நிலையம் அருகே விசிக, சி.பி.ஐ. (எம்), சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இணைந்து பெட்ரோல், டீசல், கியாஸ் விலைவாசி உயர்வு, வேலையின்மை, வெறுப்பு அரசியலுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திண்டிவனம் வி.சி.க. நகர செயலாளர் இமயன் தலைமை தாங்கினார். வி.சி.க. நிர்வாகி வழக்கறிஞர் பூபால் சிபிஎம், சிபிஐ, நிர்வாகிகள் ராஜாராம், கோவிந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வி.சி.க. மாவட்ட செயலாளர் சேரன், சிபிஎம், அறிவழகன், சிபிஐ, இன்ப ஒளி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    விசிக, சிபிஐ, சிபிஎம், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி தபால் நிலையம் அருகே திண்டிவனம் ஏ.எஸ் பிஅபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×