search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    .
    X
    .

    தேன்கனிக்கோட்டை அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    தேன்கனிக்கோட்டை அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மதகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா மகன் நவீன் குமார் (வயது30) இவர் கூலி வேலை செய்து வந்தார். 
    இவரது மனைவி அருணா. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள்  உள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் கணவன்-மனைவிக்கி டையே தகராறு ஏற்பட்டதால் கோபித்துக் கொண்டு மனைவியை அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட நவின்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×