என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்பு படம் கோப்பு படம்](https://img.maalaimalar.com/Articles/2022/May/202205121518221120_Tamil_News_Kanyakumari-NewsCouple-took-refuge-in-the-Kottar-police_SECVPF.gif)
X
கோப்பு படம்
கோட்டார் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
By
மாலை மலர்12 May 2022 9:48 AM GMT (Updated: 12 May 2022 9:48 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கோட்டார் போலீசில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
நாகர்கோவில்:
கோட்டார் மேல புதுத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல் ராசிக் (வயது 27) இவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் கோட்டார் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முகம்மது அப்துல் ராசிக்கை தேடிவந்தனர். இந்த நிலையில் முகமது அப்துல் ராசிக், நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்த சுஜிதா (27) என்பவருடன் கோட்டார் போலீசில் தஞ்சம் அடைந்தார்.
தங்கள் இருவருக்கும் இடையே கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்பட்டதாகவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து இரு வீட்டாருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அப்போது முகமது அப்துல் ராசிகின் பெற்றோர் மகனை தங்களுடன் வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் சுஜாதாவை கரம் பிடித்ததால் வர முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்.
சுஜாதாவின் தாயாரும் மகளை அழைத்தார். அவரும் அவருடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் காதல் ஜோடியை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)