search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை முயற்சி
    X
    தற்கொலை முயற்சி

    அணையில் குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி- ஒருதலைக் காதல் கைகூடாததால் விபரீத முடிவு

    குமரி மாவட்டம் அருமனை அருகே ஒரு தலைக்காதல் கைகூடாததால் விரக்தி அடைந்த இளம்பெண் அணையில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மாங்கோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபரை ஒரு தலையாக காதலித்துள்ளார்.

    இதனை தனது பெற்றோரிடம் கூறி அந்த வாலிபரையே தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறி உள்ளார். மகளின் பேச்சைக் கேட்ட பெற்றோரும், அந்த வாலிபரின் வீட்டுக்குச் சென்றனர்.

    ஆனால் அப்போது தான் அந்த வாலிபர் தங்கள் மகளை காதலிக்கவில்லை என்பதும் மகள் ஒருதலைக்காதலில் உள்ளார் என்பதும் தெரிந்தது. இருப்பினும் திருமண பேச்சை எடுத்தனர். இதனைக் கேட்ட வாலிபர் தனக்கு தற்போது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என கூறி விட்டார்.

    இதனைத் தொடர்ந்து வீடு திரும்பிய பெற்றோர், தங்கள் மகளிடம் நடந்த விவரங்களை கூறினர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், வாழ்க்கையில் வெறுப்படைந்தார்.

    நேற்று காலை வீட்டில் இருந்து சிற்றார்2 அணைக்குச் சென்ற அவர், தண்ணீரில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஆனால் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருந்ததால் அந்தப் பெண்ணின் முயற்சி பலிக்கவில்லை. இதற்கிடையில் அந்தப் பகுதி மக்கள் திரண்டு இளம்பெண்ணை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பெண்ணின் பெற்றோரு க்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெண்ணை அழைத்துச் சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து கடையால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×