search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேரோட்டம்.
    X
    தேரோட்டம்.

    திருப்பதிசாரம் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

    திருப்பதிசாரம் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் - பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
    நாகர்கோவில்:

    திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில்  சித்திரை திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் சாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். 

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதையடுத்து தேரில், சாமிகள் எழுந்தருளினர். இதை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேர் சக்கரத்திற்கு தேங்காய் உடைக்கப்பட்டது. 

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். தேர் 4 ரத வீதிகளிலும் இழுத்து வரப்பட்டது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தோவாளை ஒன்றிய திமுக செயலாளர் நெடுஞ்செழியன் , திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பூதலிங்கம்பிள்ளை, சோமு, திருப்பதிசாரம் ஊராட்சி தலைவர் சிந்துமதி, தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர் . 

    இன்று இரவு 10 மணிக்கு கருட ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. 11 மணிக்கு பள்ளிவேட்டை நடக்கிறது . நாளை ( 13 ம் தேதி ) காலை 5 மணிக்கு கருட வாகனத்தில் சாமி வீதி உலா, காலை 6 மணி முதல் 7 மணி வரை திருஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கி றது . இரவு 8 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    Next Story
    ×