search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்பத்தினருடன் விஜய் வசந்த்
    X
    குடும்பத்தினருடன் விஜய் வசந்த்

    எந்த நிலையிலும் என்னை தாங்கி நிறுத்துவது தாய்தான்... விஜய் வசந்த் அன்னையர் தின வாழ்த்து

    நமது அம்மா மட்டுமல்லாமல் தாய் என்ற பொறுப்பேற்று குடும்பத்தை பேணி காக்கும் அனைத்து மகளிரும் போற்றப்பட வேண்டியவர்கள் என விஜய் வசந்த் கூறி உள்ளார்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்து செய்தி:

    "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்" 
    என்ற குறளுக்கு ஏற்ப என் அனைத்து உயர்விலும் பங்குள்ள எனது அம்மாவிற்கு அன்னையர் தினத்தில் எனது அன்பும் மரியாதையும் உரித்தாக்குகிறேன். 

    உயர்வில் மட்டுமல்லாமல் எந்த நிலையிலும் என்னை தாங்கி நிறுத்துவது தாய் தான். தாயென்ற உறவு தெய்வத்திற்கு சமமானது. கருவில் நம்மை சுமந்து பின்னர் நெஞ்சில் சுமந்து என்றும் மனதில் நம்மை சுமக்கும் தாயிற்கு இணை வேறெந்த உறவுமில்லை.

    நமது அம்மா மட்டுமல்லாமல் தாய் என்ற பொறுப்பேற்று குடும்பத்தை பேணி காக்கும் அனைத்து மகளிரும் போற்றப்பட வேண்டியவர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு மட்டுமின்றி இந்த சமூகத்திற்கே பெரிய சேவை செய்து வருகிறீர்கள். அனைவரும் பாசமிகுந்த அன்னையர் தின வாழ்த்துக்கள். 
    Next Story
    ×