search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

    திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    திருச்சி:

    திருச்சி சுப்பிரமணியபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் பிரான்சிஸ் வயது55. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தூங்குவதாக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால்   அதிருப்தி அடைந்த அவரது மனைவி லூர்து மேரி கதவை திறந்து பார்த்துள்ளார்.
     
    அப்போது மின்விசிறியில் லாரன்ஸ் பிரான்சிஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.பின்னர் இது குறித்து கே.கே.நகர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று லாரன்ஸ்பி ரான்சிஸ்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து  கே.கே. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


    Next Story
    ×