search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டை பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மளிகை கடையில் ஆய்வு  செய்த காட்சி.
    X
    ஜோலார்பேட்டை பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மளிகை கடையில் ஆய்வு செய்த காட்சி.

    ஜோலார்பேட்டை பகுதியில் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

    ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் உணவு பொருட்கள் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த போது 2 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
    ஜோலார்பேட்டை,

    கடைகளில்  பிளாஸ்டிக், குட்கா போன்ற போதை கபாருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா  என அதிகாரிகள் ஆய்வு ேமற்கொண்டனர். ஜோலார்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு பிரிவு) டாக்டர் செந்தில்குமார் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஆகியோர் நேற்று சந்தைக்கோடியூர் ஒரு பகுதியில் உள்ள கடைகளில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா பொருள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவு பாதுகாப்பு தரம் குறித்து ஆய்வு செய்தனர். 

    அப்போது அங்குள்ள ஒரு கடையில் விற்பனைக்கு பதுக்கி வைத்து இருந்த ஒரு கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து 5 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

    இதனை அடுத்து அருகாமையில் இருந்த 2 கடைகளில் அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து 2 கடைகளிலும் தலா ஒரு கிலோ வீதம் 2 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, 2 கடை உரிமையாளர்களுக்கும் தலா 2 ஆயிரம் வீதம் ரூபாய் என 4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் அதிகாரிகள் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் காலாவதியாகி இருந்த 5 கிலோ ரவை, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை பறிமுதல் செய்து அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து, கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×