search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    வீட்டு முன்பு விளையாடிய 2 வயது பெண் குழந்தை மயங்கி விழுந்து சாவு போலீசார் விசாரணை

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே வீட்டு முன்பு விளையாடிய 2 வயது பெண் குழந்தை மயங்கி விழுந்து பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தருமபுரி
    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் இளைய மகள் இசைக்குயில் (வயது 2 ).

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதி குழந்தையுடன் இசைக்குயில்  வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென குழந்தை இசைப்புயல் மயங்கி கீழே விழுந்தாள். இதில் தலையில் பலத்த அடிபட்டு மயங்கி கிடந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பதறியடித்துக்கொண்டு குழந்தையை மீட்டு தீர்த்தமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இதுகுறித்த தகவலின் பேரில் அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தையின் மரணம் இயற்கைக்கு மாறான சாவு என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வீட்டு முன்பு விளையாடிய 2 வயது குழந்தை மயங்கி விழுந்து பலியான சம்பவம் அரூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×