search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    லோடு வேன் மோதி மாட்டு புரோக்கர் சாவு மகன் திருமண பத்திரிகை வைக்க சென்ற போது பரிதாபம்

    தருமபுரி அருகே மகனுக்கு திருமண பத்திரிகை வைக்க சென்ற மாட்டு புரோக்கர் வேன் மோதி பலியானார்.
    காரிமங்கலம், 

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 53). மாட்டு புரோக்கர்.

    இந்த நிலையில் சேட்டுவின் மகனுக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்தது. இதனால் சேட்டு, தனது உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுக்க இன்று காலை 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    அப்போது காட்டூர் அருகே சென்ற போது தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லோடு வேன் மோதி யது. இதில் பலத்த காயமடைந்த சேட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×