search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிதான நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சைசெய்த டாக்டர்கள் குழுவினர்
    X
    அரிதான நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சைசெய்த டாக்டர்கள் குழுவினர்

    கோவையில் அரிதான நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை

    2 அறுவை சிகிச்சைகளையும் இந்த பெண்ணிற்கு டாக்டர்கள் குழுவினர் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
    கோவை: 

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த பெண் ஒருவர் வந்தார். 

    20 வயதான தனக்கு, 45 வயது போல் முகத்தோற்றம் இருப்பதாகவும், இடது புருவத்தில் முடி உதிர்ந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு பாரி ரோம்பெர்க்  சின்ட்ரம்  என்ற அரிதான வகைநோய் இருப்பதை கண்டறிந்தனர்.

    முகத்தில் ஒரு பக்கம் மட்டும் தசைகள் சுருங்கியும், தோலில் சுருக்கங்களுடனும் கொழுப்பு திசு அறவே நீங்கியும் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் நோயாக உள்ளது. மேலும், இந்த நோயால் பாதிக்-கப்பட்ட சிலர் புருவத்தில் முடியில்லாமல் கூட இருப்பார்கள்.

    இதையடுத்து தனது நிலையை நினைத்து மிகுந்த மன உளைச்சல் அடைந்த அந்த பெண்ணுக்கு காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.தொடர்ந்து அவருக்கு கொழுப்பை முகத்தில் செலுத்தும் சிகிச்சை மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    அதன்படி, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் சேரும் கொழுப்பான திசுக்களை உறிஞ்சி எடுத்து முகத்தில் செலுத்தப்பட்டது.

    மேலும், பின் தலையில் உள்ள முடி வேர்களை தனியாக பிரித்து எடுத்து தேவையான இடத்தில் ஒட்ட வைக்கும் அறுவை சிகிச்சையும் மேற்-கொள்ளப்-பட்டது.

    இந்த 2 அறுவை சிகிச்சைகளையும் இந்த பெண்ணிற்கு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா  வழிகாட்டுதலின் பெயரில் டாக்டர்கள் ரமணன், செந்தில்குமார், பிரகாஷ், கவிதா பிரியா, சிவக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் வெற்றிகரமாக செய்து முடித்தனர். அறுவை சிகிச்சை முடிந்த பின் இப்போது புதுமையான தோற்ற பொலிவோடு இந்த பெண் தன்னம்பிக்கையாக உள்ளார்.
    Next Story
    ×