search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொள்ளாச்சியில் கோவில் திருவிழாவில் வாலிபர் மீது தாக்குதல்

    வாலிபரை தாக்கியதாக தமிழ் புலிகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சூர்யா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை: 

    பொள்ளாச்சி குண்டலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 20). இவர் தனது குடும்பத்துடன் அங்குள்ள மதுரை வீரன் கோவில் திருவிழாவிற்கு சென்றார்.

    அப்போது அங்கு வாலிபர் ஒருவர் குடிபோதை-யில் வந்தார். அவர் திருவிழாவில் பொதுமக்களுக்கு இடையூறாக சத்தம்போட்டு  கொண்டிருந்தார். இதனை பார்த்த சிலம்பரசனின் உறவினர் முருகன் என்பவர் அங்கு சென்று அந்த வாலிபரிடம் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் இங்கிருந்து செல் என அறிவுரை கூறினார்.

    ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்து செல்லாமல் முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்து சிலம்பரசன் உடனே அங்கு வந்து அந்த வாலிபரை தகராறு செய்ய வேண்டாம் இங்கிருந்து சென்று விடு என கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் சிலம்பரசனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிலம்பரசன் இதுகுறித்து கோமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். 

    விசாரணையில் அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த சூர்யா (23). டிரைவர் என்பதும், தமிழ் புலிகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×