என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்புபடம் கோப்புபடம்](https://img.maalaimalar.com/Articles/2022/Apr/202204081547586572_Tamil_News_Coimbatore-news-10th-class-student-magic-in-Coimbatore_SECVPF.gif)
X
கோப்புபடம்
கோவையில் 10-ம் வகுப்பு மாணவர் மாயம்
By
மாலை மலர்8 April 2022 10:17 AM GMT (Updated: 8 April 2022 10:17 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.
கோவை:
பொள்ளாச்சி ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் ஸ்ரீகல்யாண் (வயது 15). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 10&ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று ஸ்ரீகல்யான் புதிய சூவை வாங்கி வீட்டுக்கு வந்தார். அப்போது ராஜசேகர் அவரிடம் சூவு வாங்குவதற்கான பணம் எங்கு இருந்து கிடைத்தது என கேட்டு சத்தம் போட்டார்.
பின்னர் மறுநாள் காலை வழக்கம் போல அவர் பள்ளிக்கு சென்றார். ஆனால் மாலை வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.
இதையடுத்து ஸ்ரீகல்யாணின் தாயார் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஸ்ரீகல்யாணை தேடி வருகின்றனர்.
இதேபோன்று ஆனைமலை அடுத்த சேத்துமடையை சேர்ந்தவர் கவுசல்யா. இவரது மகன் மணிகண்டன் (11). அவர் அரசு பள்ளியில் 6&ம் வகுப்பு படித்து வருகிறார். மணிகண்டன் தனது தாயாரிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு அவரது தாயார் மறுத்து விட்டார்.
இதனால் மணிகண்டன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து கவுசல்யா ஆனைமலை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மணிகண்டனை தேடி வந்தனர்.
அப்போது அவர் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணிகண்டனை மீட்டு அறிவுரை கூறி அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)