என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.](https://img.maalaimalar.com/Articles/2022/Apr/202204081453323403_Tamil_News_TRICHY-NEWS-PRIVATE-SECTOR-EMPLOYMENT-CAMP_SECVPF.gif)
X
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்
By
மாலை மலர்8 April 2022 9:23 AM GMT (Updated: 8 April 2022 9:23 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடை பெற்றது.
திருச்சி :
திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடை பெற்றது. இந்த முகாமிற்கு மண்டல இணை இயக்குனர் சந்திரன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் மகா ராணி, வேலைவாய்ப்பு அதிகாரி கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 200&க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஆண்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வதற்காக காலை 10 மணி முதல் வரத்தொடங்கினர். இந்த முகாமில் 20&க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக முன்வந்தன. இந்த முகாமின் போது அதிகாரி கலைச்செல்வன் பேசியதாவது:
தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லலாம் என்று முடிவெடுக்கும் பொழுது அது அரசு வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்ற முடிவை எடுக்கக்கூடாது. முதலில் கிடைத்த வேலையை பார்க்க வேண்டும்.
அதன் பின்னர் அதிலிருந்து முன்னேறிச் செல்ல வேண்டும். மாவட்ட நிர்வா கத்தின் தரப்பில் உருவாக்கப்படும் அனைத்து வேலை வாய்ப்பு முகாம்களிலும் இளம் பெண்கள் ஆண்கள் கலந்து கொண்டு பயனடையலாம். ஆகவே காலத்தை வீணடிக் காமல் மாணவ&மாணவிகள் தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)