search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    உடையப்பன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் அய்யா வைகுண்டரின் 190 வது அவதார தினவிழா

    உடையப்பன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் அய்யா வைகுண்டரின் 190 வது அவதார தினவிழா நாளை தொடங்குகிறது
    கன்னியாகுமரி:

    நாளை வியாழக்கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு உகப்படிப்பும், 7 மணிக்கு மங்கள இசையும், பகல் 12 மணிக்கு பணிவிடையும் உகப்படிப்பும், மாலை 5 மணிக்கு பணிவிடையும் உகப்படிப்பும், இரவு 8 மணிக்கு முகிலன்விளை பிரம்மசக்தி அம்மன் பஜனை குழுவினரின் பஜனையும்,
    நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடையும் உகப்படிப்பும், 1 மணிக்கு அய்யா வைகுண்டரின் பிறப்பும் தாலாட்டும் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு பணிவிடையும் உகப்படிப்பும், 9 மணிக்கு நாதஸ்வர கச்சேரியும், பகல் 12 மணிக்கு பணிவிடையும் உகப்படிப்பும், மாலை 3 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மாபெரும் அன்னதர்மமும், இரவு 7 மணிக்கு பணிவிடையும் உகப்படிப்பும், நடைபெறுகிறது.

    அவதார தின விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் என்.பிச்சைப்பழம் தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×