search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஓட்டு போட முடியாமல் மின்னணு எந்திரம் மீது விழுந்த போதை ஆசாமி

    ஓட்டுச்சாவடிக்குள் சென்ற போதை ஆசாமிக்கு விரலில் மை வைத்ததும் ஓட்டுப்பதிவு எந்திரம் இருக்கும் இடத்தை தள்ளாடியபடி தேடினார்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சியில் பெரிய முதலியார்சாவடி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் 1, 2, 3, 5 ஆகிய 4 வார்டுகளுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது.

    நேற்று மாலை போதை ஆசாமி ஒருவரை அவரது உறவினர் ஓட்டு போட அழைத்துவந்தார். ஓட்டுச் சாவடிக்குள் சென்ற போதை ஆசாமிக்கு விரலில் மை வைத்ததும் ஓட்டுப்பதிவு எந்திரம் இருக்கும் இடத்தை தள்ளாடியபடி தேடினார்.

    சுமார் 2 நிமிட அலம்பலுக்குப் பிறகு ஒரு வழியாக எந்திரம் இருக்கும் பூத்துக்கு சென்றவர், நிற்க முடியாமல் எந்திரத்தின் மீது விழுந்ததில் எந்திரத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த மறைப்பு அட்டை விழுந்தது.

    அப்போது போதை ஆசாமியிடம் எந்த சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும் என கேட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வழிகாட்டுதலின் பேரில், ஒருவழியாக ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடு செய்தார். அதன்பின் போதை ஆசாமி தள்ளாடியபடியே சென்றார்.
    Next Story
    ×