search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    உள்ளாட்சி தேர்தல் மோதல்: காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 18 பேர் மீது வழக்கு

    உள்ளாட்சி தேர்தல் மோதல் தொடர்பாக காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், கணக்கோடு, தெங்கன்குழி விளையை சேர்ந்தவர் லிசிபாய் (47). இவர் குழித்துறை நகராட்சி தேர்தலில் 12-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். 

    அதே பகுதியை சேர்ந்த கிருபாகர் சம்பத் (53) என்பவரது மனைவி ஜூலியட் மெர்லின் ரூத். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதே 12- வது வார்டில் போட்டியிடுகிறார்.

    வாக்குப்பதிவின்போது  காங்கிரஸ் வேட்பாளர் லிசி பாய்க்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜூலியட் மெர்லின் ரூத்தின் கணவர் கிருபாகர் சம்பத்துக்கும்   இடையே மோதல் ஏற்பட்டது. 

    இதில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் லிசிபாய்க்கு காயம் ஏற்பட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.   

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குழித்துறை  சுரேசுக்கும் (53)  காயம் ஏற்பட்டதாகவும், தன்னிடமிருந்த மொபைல் போனை உடைத்ததாகவும் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கிருபாகர் சம்பத் (53)  கொடுத்த புகாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகவும் தட்டிக் கேட்க சென்ற தன்னை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குழித்துறை சேர்ந்த சுரேஷ் (53), 

    கண்ண கோட்டை சேர்ந்த தங்கப்பன், காங்கிரஸ் வேட்பாளர் லிசி பாய், தெங்கன் குழிவிளையை சேர்ந்த லிபின், தங்கன் குழிவிளை சேர்ந்த குமார் மேலும் கண்டால் தெரியும் 10 பேர் சேர்ந்து தன்னையும், தனது மனைவியையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியதாகவும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜீனோ என்பவரது வீட்டை கல் வீசி தாக்கியதாகவும் மார்த்தாண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×