search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் அ.தி.மு.க.வினர் 4 பேர் மீது வழக்கு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது
    கோவை 

    கோவையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 

    இந்நிலையில், சிங்காநல்லூர் ஆனந்த நாயக்கர் வீதியில் அ.தி.மு.க. வினர் தங்களது கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கு ஓட்டுப்போட சொல்லி வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் பரிசுப்பொருள் வழங்க டோக்கன் கொடுத்ததாக புகார் எழுந்தது. 58-வது பகுதி தி.மு.க பூத் ஏஜெண்ட் தீபக்பாபு உள்ளிட்ட தி.மு.க.வினர் அங்கு சென்று அவர்களை தட்டி கேட்டனர். 

    அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அ.தி.மு.க.வினர் தீபக்பாபு உள்ளிட்ட தி.மு.க.வினரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.  இது குறித்து தீபக்பாபு சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அ.தி.மு.க.வை சேர்ந்த சசிக்குமார், ஆனந்தன், கனகராஜ், செந்தில் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×