search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் பஞ்சு வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை

    வாக்களிக்க சென்றபோது நகை பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோவை 

    கோவை பீளமேடு கோல்ட்வின்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 56). பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் நேற்று  வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வாக்களிப்பதற்காக அருகிலுள்ள பள்ளிக்கு சென்றார்.  அங்கிருந்து துடியலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இன்று காலை வீடு திரும்பினார்.   அப்போது வீட்டின் முன்பக்க   கதவு உடைக்கப்பட்டு   இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது  அறையில் இருந்த  பிரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள்,  பணம் ரூ.5000 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஈஸ்வரமூர்த்தி  பொள்ளாச்சி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு  வந்து அங்கு பதிவாகிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர்.  இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து  வீட்டின் கதவை உடைத்து திருடி சென்ற கொள்ளையர்களை  தேடி வருகின்றனர்.
    Next Story
    ×