search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாணியம்பாடி ஜெயின் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    X
    வாணியம்பாடி ஜெயின் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    வாணியம்பாடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

    வாணியம்பாடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைக்கு சீல் வைத்து அருகே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், நான்கு நகராட்சி தேர்தல் மற்றும் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், ஆகிய 3, பேரூராட்சிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்களை சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு வாணியம்பாடி ஜெயின் கல்லூரியில் தேர்தல் அலுவலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

    துப்பாக்கிய ஏந்திய போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வருகிற 22&ந்தேதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது ஒரு சுற்றுக்கு 10, டேபிள்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற வேட்பாளருக்கு அங்கேயே சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×